சூரம்பட்டி

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சூரம்பட்டி (ஆங்கிலம்:Surampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைமையிடமான ஈரோடுமாநகரின் ஒரு பகுதியாகும். இது கடந்த 2007ஆம் ஆண்டு வரை தனி நகராட்சியாக செயல்பட்டு வந்தது. பின்னர் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு தற்போது மாநகரின் ஒரு மண்டலமாக செயல்பட்டு வருகிறது.

சூரம்பட்டி மண்டலம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 31,737 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சூரம்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஈரோடு மாநகராட்சி 3வது மண்டலம் சுமார் 27ச.கி.மீ பரப்பளவில் மொத்தம் 1,32,000 மக்கள் வசிக்கின்றனர்.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,737 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சூரம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சூரம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" இம் மூலத்தில் இருந்து 2004-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007. 

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரம்பட்டி&oldid=3594586" இருந்து மீள்விக்கப்பட்டது