ஜி. சங்கரா குறுப்பு

மலையாள எழுத்தாளர்
(ஜி. சங்கரா குருப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜி. சங்கரா குறுப்பு (பிறப்பு: 3 ஜூன் 1901 - இறப்பு: பிப்ரவரி 2, 1978) மகாகவி ஜி (தி கிரேட் கவிஞர் ஜி) என்று அழைக்கப்படுபவரான இவர் ஒரு இந்திய கவிஞரும் கட்டுரையாளரும் மற்றும் மலையாள இலக்கியத்தின் இலக்கிய விமர்சகரும் ஆவார். மலையாளக் கவிதைகளில் பெரியவர்களில் ஒருவராக அறியப்பட்ட இவர், முதன்முதலில் இந்திய இலக்கிய கௌரவமான ஞானபீட விருதினைப் பெற்றவர். 1968 முதல் 1972 வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றிய அவர், 1967 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம பூஷண் பெற்றார். சாகித்ய அகாதமி விருது, கேரள சாகித்ய அகாதமி விருது மற்றும் சோவியத் நாட்டின் நேரு விருதையும் பெற்றவர்.

ஜி. சங்கரா குறுப்பு

வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

சங்கரா குறுப்பு 1901 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி கொச்சின் இராச்சியத்தின் (இப்போது தென்னிந்திய மாநிலமான எர்ணாகுளம் மாவட்டத்தில்) ஒரு குக்கிராமமான நயத்தோடு என்ற இடத்தில் நெல்லிகம்பல்லி வரியத்து சங்கரா வாரியர் மற்றும் வடக்கனி மராத்து லட்சுமிகுட்டி மரஸ்யருக்கு மகனாக பிறந்தார். [1] அவரது ஆரம்பக் கல்வி நயதோட் மற்றும் பெரும்பாவூரில் உள்ள உள்ளூர் பள்ளிகளில் 7 வது வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், மூவாத்துப்புழாவில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து வெர்னாகுலர் உயர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். [2] அதைத் தொடர்ந்து, கோட்டம் கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியராக தனது 16 வயதிலேயே தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு அவர் பணியாற்றிய காலத்தில், மலையாள பண்டிட் மற்றும் வித்வான் தேர்வுகளில் கவனம் செலுத்தினார். பின்னர்,1927 ஆம் ஆண்டில், திருவிலுவமாலா உயர்நிலைப் பள்ளிக்கு மலையாள பண்டிதராகவும், 1927 இல் திருச்சூர் பயிற்சிப் பள்ளியின் ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தார். 1931 ஆம் ஆண்டில், அவர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். அங்கு அவர் 1956 இல் பேராசிரியராக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் அகில இந்திய வானொலியின் திருவனந்தபுரம் நிலையத்தில் தயாரிப்பாளராக பணியாற்றினார்.

சங்கரா குறுப்பு கேரள சாகித்ய அகாடமியின் நான்காவது தலைவராக பணியாற்றினார். [3] அவர் கேரள சாஸ்திர சாகித்ய பரிசத்தின் தலைவராகவும், அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது பணிக் காலத்தில்தான் பத்திரிகை மூன்று மாதங்களுக்கொருமுறை வெளிவந்தது. [4] அவர் திலகம் என்ற தலைப்பில் மற்றொரு பத்திரிகையில் பதிப்பாசிரியராக பணியாற்றியுள்ளார். 1968 ஆம் ஆண்டில், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களாவைக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சங்கரா குறுப்பு 1931 இல் சுபத்ரா அம்மா என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள், இரவீந்திரநாத் என்ற மகனும் இராதா என்ற மகளும் பிறந்தனர். [1] [5] இராதா ஒரு கல்வியாளரும் ஒரு முக்கிய இலக்கிய விமர்சகருமான எம். அச்சுதனை மணந்தார். [6] குறுப்பு 1979 பிப்ரவரி 2 அன்று, தனது 76 வயதில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அங்கமாலிக்கு அருகிலுள்ள வாப்பளசேரியில், ஒரு அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்ச்சியில் இறந்தார். [4]

ஆளுமை தொகு

 
2003 இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் குறுப்பு

குறுப்பு தனது முதல் கவிதையை 1918 ஆம் ஆண்டில் இயற்கைக்கு வணக்கம் என்று அழைத்தார், ஒரு மாணவராக இருந்தபோது [7] மற்றும் அவரது முதல் கவிதைத் தொகுப்பான சாகித்ய கௌதுகம் 1923 இல் வெளியிடப்பட்டது. அவர் 1935 இல் அவரது படைப்பான சூரியகாந்தியை வெளியிட்ட நேரத்தில், அவர் ஏற்கனவே மலையாள கவிஞர்களிடையே தனது இடத்தை நிலைநாட்டியிருந்தார். ஒட்டுமொத்தமாக, அவர் 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டார். அதில் 25 கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், நினைவுக் குறிப்புகள், நாடகம் மற்றும் உரைநடை ஆகியவை அடங்கும். [8] அவர் உமர் கய்யாமின் உரூபாய்த் (1932), காளிதாசனின் சமசுகிருத மேகதூதம் (1944) மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி (1959) போன்றக் கவிதைத் தொகுப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். [2] இசை மற்றும் பாடல்களை இணைத்த முதல் மலையாள திரைப்படமான பி. ஜே. செரியனின் நிர்மலா, (1948) படத்தின் பாடல்களையும் எழுதினார். [9] நிர்மலாவைத் தவிர, ஓரல் கூடி கல்லணை, அபயம், அடுத்தடுத்து, ஒலிப்போரு போன்ற திரைப்படங்களுக்கும் பாடல்களை எழுதினார். இவரது கவிதைகளை ஜி.கங்கர குறுப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் என்ற தலைப்பில் ஏ.கே.ராமானுஜன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் . [10] அவரது தலைசிறந்த படைப்புடன், ஒடகுசல், பூஜபுஷ்பம், நிமிஷம், நவதிதி, இத்தாலுகல், பாத்திகாந்தே பாட்டு, முத்துக்கல், அந்தார்தஹம், செங்கதிருகல், விஸ்வதர்ஷனம், மதுரம் சௌமியம் தீப்தம், மற்றும் சந்தியா ராகம் ஆகியவை அவரது முக்கிய படைப்புகளாக கருதப்படுகின்றன. இவரது சுயசரிதை ஓர்மாயுட்டே ஓலங்களில் என்று பெயரிடப்பட்டது. இது நேசனல் புத்தகக் கடையால் வெளியிடப்பட்டது.

விருதுகள் மற்றும் கௌரவங்கள் தொகு

சங்கர குறுப்பு 1961 ஆம் ஆண்டில் கவிதைக்கான கேரள சாகித்ய அகாடமி விருதை விஸ்வரதனம் என்ற அவரது தொகுப்புக்காக பெற்றார். [11] மத்திய சாகித்ய அகாதமி 1963 ஆம் ஆண்டில் கவிதைக்கான வருடாந்திர விருதை அவருக்கு வழங்கியது. [12] 1965 ஆம் ஆண்டில் இந்த விருது நிறுவப்பட்டபோது, இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதை வென்றவர் ஆனார். [13] [14] 1950 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒடக்குழல் (தி மூங்கில் புல்லாங்குழல்) என்ற அவரது தொகுப்புக்காக அவர் பரிசு பெற்றார். [15] [16] 1968 ஆம் ஆண்டில் ஒடக்குழல் விருது என்பதை நிறுவ பரிசுத் தொகையின் ஒரு பகுதியை அவர் ஒதுக்கி வைத்தார். பின்னர் இந்த படைப்பு பன்சூரி என்ற தலைப்பில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. [2] 1967 ஆம் ஆண்டில், அவர் சோவியத் நாட்டின் நேரு விருதைப் பெற்றார். ஒரு வருடம் கழித்து, இந்திய அரசு அவருக்கு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் கௌரவமான பத்ம பூசண் விருதினை வழங்கியது. [17] [18] இந்திய அஞ்சல் துறை 2003 ஆம் ஆண்டில் ஞானபீட விருது வென்றவர்கள் என்ற தொடரின் கீழ் குறுப்பு நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. [19]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Profile of G. Sankara Kurup". malayalasangeetham.info. 2019-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  2. 2.0 2.1 2.2 "G. Sankara Kurup - Malayalam writer". www.keralaculture.org (in ஆங்கிலம்). Department of Cultural Affairs, Government of Kerala. 2019-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  3. "Succession list of Presidents, Vice Presidents and Secretaries". Kerala Sahitya Akademi. 2019-01-27. Archived from the original on 2015-01-19. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  4. 4.0 4.1 "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi. 2019-01-27. Archived from the original on 2018-07-05. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  5. Pradeep, K. (2015-04-10). "A house for a poet". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  6. "Literary critic Achuthan passes away in Kochi - Times of India". The Times of India. April 10, 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  7. "G. Sankara Kurup Jnanpith Award Awarded In 1965". Edubilla. 2019-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  8. "List of Books on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi. 2019-01-27. Archived from the original on 2019-01-28. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  9. "NIRMALA 1948". The Hindu (in Indian English). 2009-09-21. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  10. "List of Malayalam Movies by Lyricist G Sankara Kurup". malayalasangeetham.info. 2019-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  11. "Kerala Sahitya Akademi Award for Poetry". Kerala Sahitya Akademi. 2019-01-27. Archived from the original on 2018-06-26. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  12. "Malayalam literary award winners" (PDF). Kerala Sahitya Akademi. 2019-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  13. "Jnanpith Laureates Official listings". Jnanpith Website. Archived from the original on 13 October 2007.
  14. Jnanpith பரணிடப்பட்டது 16 அக்டோபர் 2007 at Archive.today
  15. "Malayalam literary award winners" (PDF). Kerala Sahitya Akademi. 2019-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  16. വസന്തന്‍, എസ് കെ (February 11, 2018). "തമ്പുരാനോട്‌ ജി പറഞ്ഞു: പറ്റില്ല". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2019-04-06. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  17. "Padma Bhushan". Government of India. 2015. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் May 22, 2015.
  18. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  19. "Commemorative and definitive stamps". postagestamps.gov.in. 2019-01-27. Archived from the original on 2019-04-03. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
G. Sankara Kurup
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._சங்கரா_குறுப்பு&oldid=3873684" இலிருந்து மீள்விக்கப்பட்டது