தரணிக்கோட்டை

தரணிகோட்டை (Dharanikota) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இது குண்டூர் வருவாய் பிரிவின் அமராவதி மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் ஆந்திர மாநில தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். இது ஆந்திர மாநில தலைநகர் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் அதிகார வரம்பில் உள்ளது.[4]

தரணிக்கோட்டை
தன்யகடகம்
கிராமம்
தரணிக்கோட்டையின் குடியிருப்புப் பகுதி
தரணிக்கோட்டையின் குடியிருப்புப் பகுதி
அடைபெயர்(கள்): தம்மகடா
தரணிக்கோட்டை is located in இந்தியா
தரணிக்கோட்டை
தரணிக்கோட்டை
ஆந்திராவில் தரணிக்கோடையின் அமைவிடம்
தரணிக்கோட்டை is located in ஆந்திரப் பிரதேசம்
தரணிக்கோட்டை
தரணிக்கோட்டை
தரணிக்கோட்டை (ஆந்திரப் பிரதேசம்)
ஆள்கூறுகள்: 16°34′42″N 80°20′54″E / 16.5783°N 80.3482°E / 16.5783; 80.3482
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
வட்டம்அமராவதி மண்டலம்
அரசு[1]
 • வகைஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்தரணிக்கோட்டை கிராம ஊராட்சி
பரப்பளவு[2]
 • மொத்தம்3,548 km2 (1,370 sq mi)
மக்கள்தொகை (2011)[3]
 • மொத்தம்7,534
 • அடர்த்தி2.1/km2 (5.5/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்522436
தொலைபேசி குறியீடு+91–8640
வாகனப் பதிவுஏபி

வரலாறு தொகு

 
தரணிகோட்டையின் தந்த முத்திரை

கிமு 500இல், தரணிகோட்டை 'தன்யகடகம்' என்று அழைக்கப்பட்டுள்ளது. ஞானம் பெற்ற 16ஆம் ஆண்டில் புத்தர் தன்யகடகம் சென்று தனது பத்து தரணிகளைப் பிரசங்கித்தார். எனவே, இது தரணிகோட்டை என்று அழைக்கப்படுகிறது. தரணிகோட்டையின் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் தரணிகோட்டையிலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் விகாரைகள் இருப்பது தெரியவந்தது.[5] பொ.ச. 1 முதல் 3ஆம் நூற்றாண்டுகளில் தக்காணத்தில் ஆட்சி செய்த சாதவாகனர் வம்சத்தின் தலைநகராக இருந்த பண்டைய தான்யகடகத்தின் தளம் இது. இது கோட்டா வம்சத்தின் தலைநகராகவும் இருந்தது. இந்த வம்சம் இடைக்காலத்தில் 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்தது. கிருஷ்ணா ஆற்றின் பள்ளத்தாக்கில் ஒரு முக்கியமான அரிசி உற்பத்தி செய்யும் பகுதியாகும். இது இந்தியாவின் பிற பகுதிகளுடனும் வெளிநாடுகளுடனும் ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்தது. இந்த இடம் பெரிய தாது கோபுரத்திற்கும் பிரபலமானது; 2006 சனவரியில் மிகப் பெரிய காலச்சக்ரா விழா அங்கு நடத்தப்பட்டது.[6][7] குண்டூர் மாவட்டத்தின் அமராவதி கிராமத்திற்கு சுவான்சாங் வருகை புரிந்த போது, அந்த இடத்தைப் பற்றியும் அப்போது இருந்த விகாரைகள் குறித்தும் ஒரு புகழ்பெற்ற கணக்கை எழுதினார். கம்மவர் பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஜமீன்தாரான வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு என்பவரின் கீழ் தரணிகோட்டை அதன் மகிமையை கொண்டிருந்த்தது.

நிலவியல் தொகு

தாரனிகோட்டை மண்டல் தலைமையகமான அமராவதிக்கு மேற்கே அமைந்துள்ளது.[8] 16.579444 ° N 80.311111 ° கிழக்கில் இது ஒரு பரப்பளவில் பரவியுள்ளது .

புள்ளி விவரங்கள் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தரணிகோட்டையில் 7,534 பேர் என மக்கள் தொகை இருந்தனர். மொத்த மக்கள் தொகையில், 3,734 ஆண்களும் 3,800 பெண்களும் இருந்தனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1018 பெண்கள். 725 குழந்தைகள் 0–6 வயதுக்குட்பட்டவர்கள், அவர்களில் 368 சிறுவர்கள் மற்றும் 357 பெண்கள் - ஒரு விகிதம் 1000 க்கு 970 ஆகும். சராசரி கல்வியறிவு விகிதம் 66.06 சதவீதமாக உள்ளது. 4,498 கல்வியாளர்கள், இது மாநில சராசரியான 67.41 சதவீதத்தை விட சற்றே குறைவு.[9]

அரசாங்கமும் அரசியலும் தொகு

தரணிகோட்டை கிராம ஊராட்சி அமைப்பு கொண்டதாகும். இது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு பகுதி உறுப்பினரால் குறிப்பிடப்படுகிறது. இந்த கிராமத்தை அமராவதி மண்டல் பரிசத் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் இடைநிலை மட்டத்தில் நிர்வகிக்கிறது.[8] மண்டல் பரிசத் தொடக்கப்பள்ளி அல்லது மண்டல் பரிசத் மேல்நிலைப்பள்ளி என்பது இந்தியாவின் பல அரசு தொடக்கப் பள்ளிகளின் பெயர் மற்றும் குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இவ்வாறு குறிக்கப்படுகிறது. இந்த பள்ளிகள் மண்டல் பரிசத் (மாநிலங்களின் வட்ட உள்ளூர் அதிகாரிகள்) நிறுவியுள்ளன. மேலும் அவற்றால் மேற்பார்வையிடப்படுகின்றன. நிதியளிக்கின்றன .மண்டல் பரிசத் தொடக்கப் பள்ளிகள் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியை வழங்குகின்றன

கல்வி தொகு

2018–19 கல்வியாண்டிற்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 8 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5 மண்டல் பரிசத் தொடக்கப்பள்ளி மற்றும் 3 தனியார் பள்ளிகள் உள்ளன.[10]

குறிப்புகள் தொகு

  1. "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 95. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
  2. "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 252. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
  3. "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  4. "Declaration of A.P. Capital Region" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration and Urban Development Department, Andhra Pradesh. 30 December 2014. p. 4. Archived from the original (PDF) on 11 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
  5. "The Buddha preached at Dharanikota". தி இந்து. 25 August 2005 இம் மூலத்தில் இருந்து 27 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141127020106/http://www.thehindu.com/2005/08/25/stories/2005082503920200.htm. பார்த்த நாள்: 6 September 2014. 
  6. "On a mission for enlightenment". தி இந்து. January 8, 2006 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 1, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001011020/http://www.hindu.com/mag/2006/01/08/stories/2006010800370800.htm. 
  7. Chandrakanth, W. (Dec 25, 2005). "Amaravathi gearing for Buddhist festival". The Hindu இம் மூலத்தில் இருந்து 2012-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107203649/http://hindu.com/2005/12/25/stories/2005122514050400.htm. 
  8. 8.0 8.1 "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 328–329. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
  9. "Literacy of AP (Census 2011)" (PDF). Official Portal of Andhra Pradesh Government. p. 43. Archived from the original (PDF) on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 5 September 2014.
  10. "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரணிக்கோட்டை&oldid=3741995" இலிருந்து மீள்விக்கப்பட்டது