தர்மசாலா கோயில்
தர்மஸ்தல கோயில் அல்லது தர்மசாலா கோயில் (Dharmasthala Temple) (கன்னடம்/துளு:ಶ್ರೀ ಕ್ಷೇತ್ರ ಧರ್ಮಸ್ಥಳ) (சமக்கிருதம்: क्षेत्र धर्मस्थल, 800 ஆண்டு பழமையான[1] மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சிவன் கோயிலாகும். இக்கோயில் கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா எனும் ஊரில் அமைந்துள்ளது.
தர்மசாலா கோயில் | |
---|---|
தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலின் நுழைவு வாயில் | |
பெயர் | |
தேவநாகரி: | क्षेत्र धर्मस्थल |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு: | Kṣētra Dharmasthala |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கர்நாடகா |
மாவட்டம்: | தெற்கு கன்னடம் மாவட்டம் |
அமைவு: | தர்மஸ்தலா |
ஆள்கூறுகள்: | 12°57′36″N 75°22′42″E / 12.96012°N 75.37836°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மஞ்சுநாதர் (சிவன்) & சந்திரபிரபா |
சிறப்பு திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, இலட்ச தீப உற்சவம் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | கி பி 1200 |
அமைத்தவர்: | வீரமன்னா பெர்கடே |
இணையதளம்: | www.shridharmasthala.org |
இக்கோயில் மூலவர்களாக மஞ்சுநாதரும், சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திரபிரபாவும், கோயில் காவல் தெய்வங்களாக குமாரசுவாமியும் மற்றும் கன்னியாகுமரி எனும் யட்சினியும் உள்ளனர்.[2]
தர்மஸ்தலா கோயிலின் நிர்வாகத்தை சமண சமய வீரமன்னா பெர்கடே என்பவரின் வழிவந்த குடும்பத்தினர் மேற்பார்வையிடுகின்றனர். ஆனால் கோயில் பூசைகளை மத்வரின் துவைத மரபை பின்பற்றும் வைண அந்தணர்கள் கோயில் பூசைகள் செய்கின்றனர்.
வரலாறு
தொகு800 ஆண்டுகளுக்கு முன்னர் குடுமா கிராமத்தில் (தற்கால தர்மஸ்தலா) வாழ்ந்த சமணரான வீரமன்னா பெர்கடே என்பவரின் கனவில் தோன்றிய தர்மதேவதை, இத்தலத்தில் மஞ்சுநாதர், சந்திரபிரபா, குமாரசுவாமி மற்றும் கன்னியாகுமரி தெய்வங்களின் விக்கிரகங்களை நிறுவி வழிபடச் சொன்னார். அதன் படியே வீரமன்னா பெர்கடேயும் நான்கு தெய்வங்களுக்கும் சன்னதிகள் எழுப்பி வழிபட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ David, Stephen. "Heavenly Post". India Today. Archived from the original on 2 ஜனவரி 2003. பார்க்கப்பட்ட நாள் 17 June 2002.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 Long, Roger D; Wolpert, Stanley A. (2004). Charisma and Commitment in South Asian History. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-2641-9.