நாராயணன் வாகுல்

நாராயணன் வாகுல் (பி. 1936) இந்தியாவின் முக்கிய வங்கியர்களுள் ஒருவர். 2010 -ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது பெற்றவர்களுள் ஒருவர். வணிகம், தொழில் பிரிவில் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. நிதித்துறையில் 50 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வாகுல், ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக நீண்டநாட்கள் இருந்தவர்; தற்போது பல முன்னணி நிறுவனங்களுக்கு இயக்குநராக உள்ளார் (ஆர்சலார் மிட்டல், விப்ரோ).

தென்னிந்திய கிராமங்கள் ஒன்றில், ஒரு சராசரி குடும்பத்தில் எட்டு பிள்ளைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் வாகுல். சென்னை இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்துவிட்டு லயோலா கல்லூரி யிலும் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணன்_வாகுல்&oldid=476102" இலிருந்து மீள்விக்கப்பட்டது