நிருபதுங்கவர்மன்
நிருபதுங்கவர்மன் (Nirupatungkavarman) காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் மன்னனாவார். இவர், மூன்றாம் நந்திவர்மனின் முதல் மனைவியின் மூத்த மகன். மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு நிருபதுங்கவர்மன் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின் மகன் கம்பவர்மனின் புதல்வன் அபராசித வர்மன்[1] அரச பதவியைக் கைப்பற்ற எண்ணியதால் பல்லவ அரசாட்சிக்கு வாரிசு உரிமைப் போர் தொடங்கியது. நிருபதுங்கவர்மன், இரண்டாம் வரகுண பாண்டியனிடம் உதவிப் பெற்றுக்கொண்டார். கங்கரும் சோழரும் அபராசிதவர்மனுக்கு உதவி புரிந்தனர். வாரிசு உரிமைப் போரில் அபராசிதவர்மன் வெற்றி பெற்றார். நிருபதுங்கவர்மன் இழந்த நாட்டை மீண்டும் பெற முயன்றும் வெற்றி கிட்டவில்லை. சோழருடைய ஆதரவை அபராசிதவர்மன் பெற்றிருந்ததே அதற்குக் காரணம் ஆகும்[2].
![]() | |
---|---|
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | |
புத்தவர்மன் | |
விட்ணுகோபன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு | |
குமாரவிட்ணு I | |
கந்தவர்மன் I | |
வீரவர்மன் | |
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436 | |
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477 | |
கந்தவர்மன் III | |
நந்திவர்மன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம் | |
விட்ணுகோபன் II | |
சிம்மவர்மன் II | |
விட்ணுகோபன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவர்மன் III | |
சிம்மவிட்டுணு | பொ. யு. 556 - 590 |
மகேந்திரவர்மன் I | பொ. யு. 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | பொ. யு. 630 - 668 |
மகேந்திரவர்மன் II | பொ. யு. 668 - 669 |
பரமேசுவரவர்மன் | பொ. யு. 669 - 690 |
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) | பொ. யு. 690 - 725 |
பரமேசுவரவர்மன் II | பொ. யு. 725 - 731 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | பொ. யு. 731 - 796 |
தந்திவர்மன் | பொ. யு. 775 - 825 |
நந்திவர்மன் III | பொ. யு. 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | பொ. யு. 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | பொ. யு. 850 - 882 |
அபராசிதவர்மன் | பொ. யு. 882 - 901 |
தொகு |
இவருடைய அமைச்சர்களில் ஒருவர் பாகூரிலிருந்த ஒரு கல்வி மையத்திற்கு மூன்று கிராமங்களைத் தானமாக அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது[3].
சமயம் தொகு
நிருபதுங்கவர்மன் சைவ சமயத்தினையும் (பரமேசுவரமங்கலம் சைலேசுவரம் கோயில் நிருபதுங்கவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது[4]), வைணவ சமயத்தையும் (பாகூர் பட்டயங்கள்)[5] ஆதரித்ததாகத் தெரிகிறது.
மேற்கோள்கள் தொகு
- ↑ D. Dennis Hudson (2008). The Body of God. An emperor's palace for Krishna in Eighth-Century Kanchipuram. Oxford University Press. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:987654321. https://books.google.se/books?id=IMCxbOezDi4C&pg=PA21&lpg=PA21&dq=brother+Aparajitavarman&source=bl&ots=E3L9K6fcb3&sig=NCdkc-4d9ueeRX5iLqrUf4DNkp0&hl=sv&sa=X&ved=0CCwQ6AEwAWoVChMI-bHOu7zkxgIVBtksCh0zvgs_#v=onepage&q=brother%20Aparajitavarman&f=false.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Chapter 20: South India (1999 (Second Edition)). Ancient Indian history and Civilization. New Age International (P) Ltd., Publishers, New Delhi. பக். 449. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-224-1198-3.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ K. R. Subramanian (2002 (Second Edition)). The origin of Saivism and its history in the Tamil land. Asian Educational Services, New Delhi. பக். 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0144-0.