பாலித்த தெவரப்பெரும

பாலித்த குமார தெவரப்பெரும (Palitha Kumara Thewarapperuma, சிங்களம்: පාලිත තෙවරප්පෙරුම; 3 மே 1960 – 16 ஏப்ரல் 2024) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 2010 முதல் 2020 வரை களுத்துறை மாவட்ட தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் மைத்திரிபால சிறிசேனவின் அரசில் ஒரு துணை அமைச்சராகப் பணியாற்றினார்.[1]

பாலித்த தெவரப்பெரும
Palitha Thewarapperuma
පාලිත තෙවරප්පෙරුම
சமூக வலுவூட்டல் துணை அமைச்சர்
பதவியில்
21 திசம்பர் 2018 – 21 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
அமைச்சர்தயா கமகே
முன்னையவர்ரஞ்சன் ராமநாயக்கா
பின்னவர்பதவி பயன்பாட்டில் இல்லை
நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி துணை அமைச்சர்
பதவியில்
2 மே 2018 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
அமைச்சர்சரத் பொன்சேகா
முன்னையவர்சுமேதா ஜயசேன
பின்னவர்ஆனந்த அளுத்கமகே
உள்துறை, வடமேற்கு மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் துணை அமைச்சர்
பதவியில்
6 ஏப்ரல் 2016 – 2 மே 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
அமைச்சர்எஸ். பி. நாவின்ன
முன்னையவர்ஹர்சா டி சில்வா
பின்னவர்எட்வர்ட் குணசேகர
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 3 மார்ச்சு 2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1960-05-03)3 மே 1960
இலங்கை மேலாட்சி
இறப்பு16 ஏப்ரல் 2024(2024-04-16) (அகவை 63)
களுத்துறை, இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்அமிதா நாலிங்கனி அமரதுங்க
பிள்ளைகள்2
வாழிடம்(s)மத்துகமை, களுத்துறை மாவட்டம், மேற்கு மாகாணம்
முன்னாள் கல்லூரிஆனந்த சாஸ்த்திரலய தேசிய பாடசாலை, மத்துகமை
வேலைஅரசியல்வாதி
தொழில்நில உரிமையாளர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

தெவரப்பெரும 1960 மே 3 அன்று இலங்கையில் (அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்டது) பிறந்தார். இவர் களுத்துறை மாவட்டத்தின் மத்துகமை பிரதேசத்தின் உள்ள ஆனந்த சாஸ்த்திரலய தேசிய பாடசாலையில் கற்றார்.[2]

தெவரப்பெரும மத்துகமை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக அரசியலில் பிரவேசித்தார். 2002 ஆம் ஆண்டு அந்த சபையின் தலைவராக இருந்தார். சில காலம் களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்கு மாகாண சபை உறுப்பினராகவும் இருந்தார்.[3]

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த நிலையில் 2020 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் 2015 முதல் 2019 வரை சமூக வலுவூட்டல் துணை அமைச்சர், நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி துணை அமைச்சர் மற்றும் உள்துறை, வடமேற்கு மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்[3][4]

தெவரப்பெரும அமிதா நலிங்கனி அமரதுங்கவை மணந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தார். இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.[1][5]

அவர் ஏப்ரல் 16, 2024 அன்று மின்சாரம் தாக்கி இறந்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "கௌரவ பாலித குமார தெவரப்பெரும, பா.உ." உறுப்பினர்கள் தகவல் திரட்டு. இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 20 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
  2. பொதுப்பிட்டிய, ரக்சன சிறியந்த; பண்டாரகம, சுமித் பிரேமதிலக; ஜெயசிங்க, பிமல் (16 April 2024). "முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித்த தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்". தினமின (in சிங்களம்). Archived from the original on 17 April 2024. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
  3. 3.0 3.1 "பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை". பதிவு. 17 April 2024. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "பாலித்த தெவரப்பெரும காலமானார்". அத தெரண. 17 April 2024. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. 5.0 5.1 "பாலித தெவரப்பெருமவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது". அத தெரண (in சிங்களம்). 17 April 2024. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலித்த_தெவரப்பெரும&oldid=3939684" இலிருந்து மீள்விக்கப்பட்டது