பொன்முடி (திரைப்படம்)

எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பொன்முடி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, ஆர். பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்தின் கதையானது கவிஞர் பாரதிதாசனின் எதிர்பாரத முத்தம் என்னும் குறுங் காப்பியத்தைத் தழுவியது.[2] எடுத்தவரை படத்தைப் போட்டுப்பார்த்த படத்தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரத்துக்குத் திருப்தியில்லாததால். படத்தில் இன்னும் கொஞ்சம் கதையைச் சேர்க்க முடிவுசெய்தார். அதையடுத்து படத்தின் பின்பகுதியில் கூடுதல் கதையை மு. கருணாநிதியைக் கொண்டு எழுதவைத்து படமாக்கி வெளியிட்டார்.[3] இது ஒரு வெற்றிப்படமாக ஆனது.

பொன்முடி
இயக்கம்எல்லிஸ் டங்கன்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைகதை பாரதிதாசன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புபி. வி. நரசிம்ம பாரதி
ஆர். பாலசுப்பிரமணியம்
எம். ஜி. சக்கரபாணி
காளி என். ரத்னம்
ஏ. கருணாநிதி
மாதுரி தேவி
சரஸ்வதி
டி. பி. முத்துலட்சுமி
எஸ். பி. எல். தனலட்சுமி
வெளியீடுசனவரி 14, 1950
ஓட்டம்.
நீளம்15500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Ponmudi 1950". ராண்டார் கை, தி இந்து. 4 அக்டோபர் 2008. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/ponmudi-1950/article1426286.ece. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2016. 
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 6 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்.3 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்". தினமணிக் கதிர்: 18-19. 
  3. ஆர்.சி.ஜெயந்தன் (10 ஆகத்து 2018). "அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்முடி_(திரைப்படம்)&oldid=3719227" இலிருந்து மீள்விக்கப்பட்டது