இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு

இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இரண்டாம் சார்லசுவின் தந்தையும் இங்கிலாந்தின் பேரரசருமான முதலாம் சார்லசு 1649 சனவரி 30 அன்று வைட்ஹால் அரண்மனையில் தூக்கிலிடப்பட்டார். இசுக்கொட்லாந்தின் நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசை இசுக்கொட்லாந்தின் அரசராக 1649 பெப்ரவரி 5 இல் அறிவித்தது.[2] ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றம் பொதுநலவாய இங்கிலாந்து என்ற இடைக்கால அரசை அமைத்து, ஆலிவர் கிராம்வெல்லின் தலைமையில் குடியரசானது. கிராம்வெல் 1651 செப்டம்பர் 3 இல் வூஸ்டர் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் இரண்டாம் சார்லசுவைத் தோற்கடித்தார்.[3] இதனை அடுத்து சார்லசு பிரான்சுக்குத் தப்பி ஓடினார். கிராம்வெல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளினதும் ஆட்சியாளராக இருந்தார். இரண்டாம் சார்லசு அடுத்த ஒன்பதாண்டு காலம் நாடு கடந்த நிலையில் பிரான்சு, டச்சுக் குடியரசு, எசுப்பானிய நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்.[4]

இரண்டாம் சார்லசு
Charles II
இரண்டாம் சார்லசு, 1660–1665
இங்கிலாந்து, அயர்லாந்து, இசுக்கொட்லாந்து அரசன்
ஆட்சிக்காலம்29 மே 1660 –
6 பெப்ரவரி 1685
முடிசூட்டுதல்23 ஏப்ரல் 1661
முன்னையவர்முதலாம் சார்லசு
பின்னையவர்இரண்டாம் ஜேம்சு
இசுக்கொட்லாந்து அரசன்
ஆட்சிக்காலம்30 சனவரி 1649 –
3 செப்டம்பர் 1651
முடிசூட்டுதல்1 சனவரி 1651
முன்னையவர்முதலாம் சார்லசு
பின்னையவர்இராணுவ அரசு
பிறப்பு(1630-05-29)29 மே 1630
(N.S.: 8 சூன் 1630)
சென் ஜேம்சு அரண்மனை, இலண்டன், இங்கிலாந்து
இறப்பு6 பெப்ரவரி 1685(1685-02-06) (அகவை 54)
(N.S.: 16 பெப்ரவரி 1685)
உவைட்ஹால் அரண்மனை, இலண்டன்
புதைத்த இடம்
துணைவர்பிரகான்சாவின் கேத்தரின்
குழந்தைகளின்
பெயர்கள்
  • சட்ட இசைவற்ற:
  • ஜேம்சு ஸ்கொட்
  • சார்லசு பிட்சார்லசு
  • சார்ல்சு பிட்சுரோய்
  • சார்லொட் லீ
  • என்றி பிட்சுரோய்
  • ஜோர்ஜ் பிட்சுரோய்
  • சார்ல்சு பியூகிளார்க்
  • சார்ல்சு லெனொக்சு
மரபுஸ்டுவர்ட் மாளிகை
தந்தைமுதலாம் சார்லசு
தாய்பிரான்சின் என்றியெட்டா மரியா
மதம்இங்கிலாந்து திருச்சபை, கத்தோலிக்கத்துக்கு மதமாற்றம்.
கையொப்பம்இரண்டாம் சார்லசு Charles II's signature
இரண்டாம் சார்லசு (Charles II, 29 மே 1630 – 6 பெப்ரவரி 1685)[1] இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் பேரரசராக 1660 முதல் 1685 வரை இருந்தவர். தொகு

1658 இல் கிராம்வெல்லின் இறப்பை அடுத்து இடம்பெற்ற அரசியல் சிக்கல் நிலையில், முடியாட்சி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு,[5] முடிக்குரியவராக இருந்த இரண்டாம் சார்லசு பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்டார்.[6] 1660 மே 29 இல் அவரது 30வது அகவையில் இலண்டனில் அவருக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 1660 முதல், அனைத்து அரச ஆவணங்களும் அவர் 1649 இல் தந்தைக்குப் பின்னர் ஆட்சிப் பொறுபை ஏற்றவர் என்று மாற்றப்பட்டன.

சார்லசுவின் இங்கிலாந்து நாடாளுமன்றம் இங்கிலாந்து திருச்சபையின் நிலையை உயர்த்திக் கொள்ள கிளாரண்டன் குறியீடு என அறியப்படும் சட்டங்களை இயற்றியது. சார்லசு மதசகிப்புத் தனமைக் கொள்கைக்கு ஆதரவளித்தாலும், கிளாரண்டன் குறியீட்டு சட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டியதாயிற்று.[7] இவரது ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் இரண்டாம் ஆங்கிலேய-டச்சுப் போர் இடம்பெற்றது. 1670 இல், அவரது தாய்-வழிச் சகோதரரான பிரான்சின் பதினான்காம் லூயி அரசனுடன் டோவரில் ஓர் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போரில் லூயி சார்லசுவிற்கு உதவியளிக்க முன்வந்தார்.[8] பதிலுக்கு சார்லசு தான் கத்தோலிக்கத்துக்கு நாள் குறிப்பிடப்படாத பின்னொரு நாளில் மதம் மாறுவதாக லூயிக்கு இரகசிய வாக்குறுதி அளித்தார். இரண்டாம் சார்லசு தனது 1672 ஆம் ஆண்டு அரசப் பிரகடனம் மூலம் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டத்தாந்து எதிர்பாளர்களுக்கும் சமயச் சுதந்திரம் அளிப்பதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால், ஆங்கிலேய நாடாளுமன்றத்தின் வற்புறுத்தலின் பேரில் அப்பிரகடனத்தைத் திரும்பப் பெற்றார். 1679 இல் சார்லசுவின் சகோதரரும், அடுத்த முடிக்குரியவருமான யோர்க் இளவரசர் இரண்டாம் ஜேம்சு ஒரு கத்தோலிக்கர் என்பது தெரிய வந்தது. இந்த நெருக்கடியின் மூலம் நாடாளுமன்றத்தில் முடியாட்சிக்கு எதிரான விக் கட்சியும், சார்பான டோடி கட்சியும் உருவாயின. 1683 இல் சார்லசையும், ஜேம்சையும் படுகொலை செய்வதற்கான திட்டமும் வெளிக்கொணரப்பட்டது. விக் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். வேறு சிலர் நாடு கடத்தப்பட்டனர். சார்ல்ஸ் 1681 இல் நாடாளுமன்ரத்தைக் கலைத்து, 1685 பெப்ரவரி 6 இல் இறக்கும் வரை தனியாக ஆட்சி நடத்தினார். இவர் இறக்கும் தறுவாயில் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறினார்.

ஆலிவர் கிராம்வெல், மற்றும் பியூரித்தான்களின் பத்தாண்டுகளுக்கும் மேலான கடுமையான ஆட்சிக் காலத்தின் பின்னர் சார்லசுவின் ஆட்சிக்காலத்தில் நாடு வழமை நிலைக்குத் திரும்பியதன் மூலம் சார்லசு ஒரு "களிப்பு மிக்க பேரரசன்" என மக்களால் அறியப்பட்டார். சார்லசின் மனைவி கேத்தரினுக்குப் பிள்ளைகள் எவரும் இல்லை.[9] ஆனாலும், சார்லசுசிற்கு வேறு தகாத உறவுகளின் மூலம் 12 பிள்ளைகள் இருந்தனர். சார்லசிற்குப் பின்னர் இரண்டாம் ஜேம்சு பேரரசான முடி சூடினார்.

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. இக்கட்டுரையில் உள்ள அனைத்து திகதிகளும் பழைய யூலியன் நாட்காட்டியில் தரப்பட்டுள்ளன.
  2. Brown 2013, Scottish proclamation.
  3. Fraser 1979, ப. 96–97; Hutton 1989, ப. 56–57.
  4. Hutton 1989, ப. 74–112.
  5. Fraser 1979, ப. 160–165.
  6. Hutton 1989, ப. 131.
  7. Hutton 1989, ப. 229.
  8. Fraser 1979, ப. 305–308; Hutton 1989, ப. 284–285.
  9. Weir 1996, ப. 255–257.
  • Brown, K.M.; et al., eds. (2007–2013), "Proclamation: of King Charles II, 5 January 1649 (NAS. PA2/24, f.97r-97v.)", The Records of the Parliaments of Scotland to 1707, St Andrews {{citation}}: |access-date= requires |url= (help); Check date values in: |accessdate= (help); Unknown parameter |chapterurl= ignored (help)CS1 maint: location missing publisher (link)
  • Fraser, Antonia (1979), King Charles II, London: Weidenfeld and Nicolson, ISBN 0-297-77571-5
  • Gloucester City Council (3 May 2012), List of Monuments in Gloucester, பார்க்கப்பட்ட நாள் December 2012 {{citation}}: Check date values in: |accessdate= (help)
  • Hutton, Ronald (1989), Charles II: King of England, Scotland, and Ireland, Oxford: Clarendon Press, ISBN 0-19-822911-9
  • Weir, Alison (1996), Britain's Royal Families: The Complete Genealogy (Revised ed.), Random House, ISBN 0-7126-7448-9