ஏ. ஆர். கிருஷ்ண சாஸ்திரி
அம்பாலே ராமகிருஷ்ண கிருஷ்ண சாஸ்திரி (ஆங்கிலம்: Ambale Ramakrishna Krishnashastry) (1890-1968) (கன்னடம்: ಅಂಬಳೆ ರಾಮಕೃಷ್ಣ ಕೃಷ್ಣಶಾಸ್ತ್ರಿ) இவர் கன்னட மொழியில் ஒரு முக்கிய எழுத்தாளரும், ஆராய்ச்சியாளரும் மற்றும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். கிருஷ்ண சாஸ்திரி அவரது 'வச்சனா பாரதா' என்ற படைப்பின் மூலமாகவும், கன்னட மொழியில் மகாபாரதத்தைப் பற்றிய அவரது கதை மூலமாகவும் இறந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகும் பிரபலமாக இருந்து வருகிறார்.
ஆரம்பகால வாழ்க்கைதொகு
கிருஷ்ண சாஸ்திரி, 1890 பிப்ரவரி 12 அன்று, (கர்நாடகா, இந்தியா) சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள அம்பலே என்ற இடத்தில் ஹொய்சலா கர்நாடக ஸ்மார்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இலக்கணத்தில் புகழ்பெற்றவரும், மைசூரில் உள்ள சமசுகிருத பள்ளியின் முதல்வருமான இராமகிருஷ்ணா சாஸ்திரி என்பவருக்கும் சங்கரம்மா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். கிருஷ்ண சாஸ்திரி தனது பத்தாவது வயதில் தனது தாயார் சங்கரம்மாவை பிளேக் நோயால் இழந்தார். அவரது தந்தை இராமகிருஷ்ணா சாஸ்திரி அனைத்து குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கிருஷ்ண சாஸ்திரி ஒரு விஞ்ஞானியாக த்னது வாழ்க்கையைத் தொடர விரும்பினார். வறுமை காரணமாக, தனது இளங்கலை பட்டப்படிப்பபில் (1914) கன்னடம் மற்றும் சமசுகிருதம் படிக்க நிர்பந்திக்கப்பட்டார். மைசூரில் உள்ள "அதாரா கச்சேரியில்" (செயலகம்) எழுத்தராக அவரது வாழ்க்கை தொடங்கியது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது முதுநிலை கலை பட்டப்படிப்பில் சேருவதற்கு முன்பு மைசூரில் ஓரியண்டல் நூலகத்தில் (பின்னர் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது) ஒரு ஆசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். இறுதியாக அவர் கன்னட பேராசிரியரானார். ஓய்வு பெறும் வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். கிருஷ்ண சாஸ்திரி தனது பதினாறு வயதில் பத்து வயதான வெங்கடலட்சம்மாவை மணந்தார், .
பேராசிரியர் ஏ.ஆர். கிருஷ்ண சாஸ்திரி பிரபல கன்னட எழுத்தாளரும் நாட்டுப்புறவியலாளருமான ஹா என்பவரால் "கன்னட சேனானி" என்று அழைக்கப்பட்டார். மா. நாயக் (எச். எம். நாயக்). பெங்களூரு மத்தியக் கல்லூரியில் கர்நாடக சங்கத்தை ஆரம்பித்தவர் இவர்தான். பின்னர் இந்த சங்கங்கள் கர்நாடகா முழுவதும் பரவியது.
அவரது பிரபலமான சீடர்களில் சிலர் குவெம்பு, டி.என்.ஸ்ரீகாந்தையா (தி நாம் ஸ்ரீ), எம்.வி.சீதராமையா மற்றும் ஜி.பி.ராஜரத்தினம் ஆகியோர்.
இலக்கியப் படைப்புகள்தொகு
பேராசிரியர் கிருஷ்ண சாஸ்திரி ஒரு பலமொழிகளை அறிந்திருந்த அறிஞர் ஆவார். கன்னடம் (தாய்மொழி), சமசுகிருதம் மற்றும் ஆங்கிலம் தவிர, பாலி, பெங்காலி (சுயமாக கற்றது), இந்தி மற்றும் ஜெர்மன் மொழிகளிலும் அவர் புலமைக் கொண்டிருந்தார். அவருக்கு ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் நல்ல அறிவு இருந்தது. அந்த மொழிகளில் இருந்து கன்னடத்திற்கு சில சிறந்த படைப்புகளை மொழிபெயர்க்க இது அவருக்கு உதவியது. கன்னட மொழிபெயர்ப்பின் போது கிருஷ்ண சாஸ்திரி காளிதாசன், பவபூதி மற்றும் பாசா ஆகியோரின் சிறந்த சமசுகிருத நாடகங்களின் பல நுணுக்கங்களை வெளிப்படுத்தினார். பிரபல வங்காள நாவலாசிரியரான பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வாழ்க்கை வரலாறு கிருஷ்ண சாஸ்திரிக்கு மத்திய சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத்தந்தது. [1] கிருஷ்ண சாஸ்திரி வச்சன பாரதம், நிர்மலபாரதி, கதாம்ருதா உள்ளிட்ட பல சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதினார். வச்சனபாரதம் மற்றும் நிர்மலபாரதி ஆகியவை இந்து காவியமான மகாபாரதத்தின் சுருக்கப்பட்ட பதிப்புகள் ஆகும். கதாம்ருதா கதாசரித்சாகரவின் கதைகள், சமசுகிருதத்தில் நூற்றுக்கணக்கான கட்டுக்கதைகள், உவமைகள் மற்றும் பிற கதைகளின் பெரிய தொகுப்பு ஆகும். கதாம்ருதாவில் இந்திய மற்றும் மேற்கத்திய கலாச்சார மரபுகளை நன்கு வெளிபடுத்தினார். 1918 ஆம் ஆண்டில், கன்னட மொழி செய்தித்தாளான பிரபுத்த கர்நாடகாவை கிருஷ்ண சாஸ்திரி தொடங்கி அதன் ஆசிரியராகபணியாற்றினார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்தொகு
எழுத்துக்களில்தொகு
புதினங்கள்தொகு
- வச்சன பாரதம் - வியாசரின் மகாபாரதத்தின் கன்னட மொழியின் சிறந்த மொழிபெயர்ப்பாக மதிப்பிடப்பட்டது மற்றும் கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமானது.
- நிர்மலபாரதி
சுயசரிதைகள்தொகு
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச சரித்திரம்
- பங்கிம் சந்திரா
சிறுகதைத் தொகுப்புகள்தொகு
- ஸ்ரீபதிய கட்டகலு
- கதாம்ருதா- கதாசரித்ராவின் கன்னடம் மொழிபெயர்ப்பு
நாடகங்கள்தொகு
- சம்ஸ்கிருத நாடகா
- ஹரிச்சந்திரகாவ்ய சங்கரகா
மற்றவைதொகு
- அலங்கார ( அலங்கரா சாஸ்திரத்தில் கன்னட கையேடு - 1927, மைசூர் பல்கலைக்கழகம்) - அலஸ்காரா-ஆஸ்ட்ரா
- பாசா காவி (சமஸ்கிருத நாடக ஆசிரியர் பாசா - மத்திய கல்லூரி கர்நாடக சங்கம் - 1922 பற்றிய விமர்சனம்)
- சர்வஜன கவி
- பாஷனகலு மேட்டு லேகனகலு (உரைகள் மற்றும் எழுத்துக்கள்)
- நாகமஹாஷயா (ஆசிரியர்: சரத் சந்திர சக்ரவர்த்தி ) வங்காளத்திலிருந்து கன்னடத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது - 1937
குறிப்புகள்தொகு
- ↑ "Sahitya Akademi Awards". The Indian Express: p. 10. 1 April 1962.
வெளி இணைப்புகள்தொகு
- Prof. Krishnashastry on Kamat's potpourri
- A.R.KrishnaShastry, Kathaamrita (1952) (Kannada: ಕಥಾಮೃತ), Geetha Book House, K.R. Circle, Mysore 570 001, India
- A.R. Krishna Shastri - A monograph in Kannada by T.V. Venkatachala Sastry, Sahitya Akademi, Year 2000, ISBN 978-81-260-0721-9
- Alaṅkāra-śāstra