சிக்கல் (ஊர்)


சிக்கல் (ஆங்கிலம்:Sikkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் வட்டத்தில், நாகப்பட்டினத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இதனை சிக்கற்பள்ளி என தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[சான்று தேவை]

சிக்கல்
—  கிராமம்  —
சிக்கல்
இருப்பிடம்: சிக்கல்

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 10°45′22″N 79°47′56″E / 10.756°N 79.799°E / 10.756; 79.799
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
ஊராட்சி மன்ற தலைவர் ந.ஆனந்த்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம் தொகு

நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் நகரில் இருந்து மேற்கே 6 கி. மீ. தொலைவிலும், திருவாரூர் நகரில் இருந்து கிழக்கில் 20 கி. மீ. தொலைவிலும், கீழ்வேளூர் ஊரில் இருந்து கிழக்கில் 6 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலர் கோவில் மிகவும் புகழ் பெற்றது.[1] இங்கு சூரசம்கார விழா விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் சிக்கல் நவநீதேசுவரர் கோவில் சிவன் கோயிலும் அமைந்துள்ளது.[2]

பாடல் பெற்ற தலம் தொகு

திருஞான சம்பந்தர் இவ்வூரிலுள்ள 'வெண்ணெய்ப் பெருமான' (நவநீதேசுவரனை)ப் பாடியுள்ளார்.

மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொள் மாமறையோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய
அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே.

வரலாற்றுச் சிறப்பு தொகு

கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் இவ்வூருக்கு வந்து மருத்துவம் செய்துக்கொண்டதாக வரலாற்றில் உள்ளது.

நிர்வாகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2018-06-27.
  2. "நவநீதேசுவரர் கோவில்". தினமலர்

வெளி இணைப்பு தொகு

தமிழ்நாடு அரசு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கல்_(ஊர்)&oldid=3553749" இலிருந்து மீள்விக்கப்பட்டது