தானாலே குகைகள்
தானாலே குகைகள் அல்லது நத்சூர் குகைகள் (Thanale Caves or Nadsur Caves) (ठाणाळे लेणी) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில், தானேலே கிராமத்தின் மலையில் உள்ள 23 பௌத்தக் குடைவரைகளின் தொகுப்பாகும்.[1][2]

தானேலே குகைகளின் தூபிகள்
இக்குகைகளில் கிபி முதல் நூற்றாண்டுக் காலத்திய பௌத்த சைத்தியங்கள் மற்றும் தூபிகள் மற்றும் விகாரைகள் உள்ளது.
இக்குகைத் தொகுப்பில் பெரிதான குகை எண் 7 அழகிய தோரண வாயில்கள், வளைவுகள், புத்தர், ஆண், பெண் மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது.
இக்குகைகளின் குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது.
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ). Delhi: Sri Satguru Publ.. பக். 201-201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170307740.
- ↑ "Thanale Cave Trek". 2012-01-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-16 அன்று பார்க்கப்பட்டது.