நாட்டுப்புறப் பாட்டு
This article needs more links to other articles to help integrate it into the encyclopedia. (ஏப்ரல் 2019) |
நாட்டுப்புறப் பாட்டு (Naattupura Paattu) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை கஸ்தூரி ராஜா எழுதி இயக்கியிருந்தார். சிவகுமார், குஷ்பூ, மணிவண்ணன், கவுண்டமணி, செந்தில், குமரிமுத்து, வினு சக்ரவர்த்தி, பிரேம், அனுஷா மற்றும் பலர் நடித்திருந்தனர். விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா தயாரிப்பில் , இளையராஜா இசை அமைத்த இப்படம், 9 பிப்ரவரி 1996 ஆம் தேதி வெளியானது.[1][2][3]
நடிகர்கள்தொகு
- செல்வா,
- சிவகுமார்,
- குஷ்பூ,
- மணிவண்ணன்,
- கவுண்டமணி,
- செந்தில்,
- குமரிமுத்து,
- வினு சக்ரவர்த்தி,
- பிரேம்,
- அனுஷா,
- அபிராமி,
- சார்லீ,
- ஜெய்கணேஷ்,
- சண்முகசுந்தரம்,
- ஜான் பாபு,
- அன்வர் அலி,
- தாஜ் கான்,
- வெங்கட்,
- இடிச்சபுளி செல்வராஜ்,
- கருப்பு சுப்பையா,
- பெரிய கருப்பு தேவர்.
கதைச்சுருக்கம்தொகு
பாரிஜாதம் (குஷ்பூ) ஒரு பிரபல கரகாட்டம் ஆடும் கலைஞர். திருமணத்திற்கு பிறகு ஆட அனுமத்திக்கும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று பாரிஜாதத்தின் தாய் பட்டம்மா எதிர்பார்த்தார். அதன் படியே, மற்றோரு கரகாட்ட கலைஞரான பழனிசாமியை (சிவகுமார்) மணந்தாள் பாரிஜாதம். பொறுப்பில்லாமல் இருக்கும் பழனிசாமியின் தம்பி கோட்டைசாமியை, பாரிஜாதம் நல்வழிப்படுத்துகிறாள். கோட்டைசாமிக்கும் மாலாவிற்கும் திருமணம் ஆனது. பணக்கார நாயக்கருக்கு (வினு சக்ரவர்த்தி) பாரிஜாதத்திற்கும் தவறான தொடர்பு இருப்பதாக பரவிய வதந்தியை தாங்க முடியாமல், பாரிஜாதத்தைப் பிரிந்து வாழ்கிறான் பழனிசாமி.
பிறகு ஒரு நாள், காட்டமுத்துவின் தங்கை மானபங்கப்படுத்தப்பட்டதால், அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். அதற்கு காரணமானவர்களை கோட்டைசாமி தட்டிக்கேட்டதால், திருவிழாவில் ஆடும் வாய்ப்பு தட்டிப்போனது. அதனால், கோட்டைசாமியும் மாலாவும் துயரத்திற்கு உள்ளானார்கள். அவ்வாறாக ஒரு சமயம், ஆட்டத்தின் பொழுதே மாலா இறந்து விடுவதால், அவளின் இழப்பை தாங்காமல் கோட்டைசாமி மதுவிற்கு அடிமையாகிறான். பழனிசாமி தன் குழந்தையை தனியே வளர்த்துவர, பாரிஜாதம் கரகாட்டம் ஆடுவதை நிறுத்த நேரிடுகிறது.
பல ஆண்டுகளுக்கு பிறகு, பழனிசாமியின் மகன் வேல்பாண்டி (பிரேம்) அமராவதியை (அனுஷா) காதலிக்கிறான். கோட்டைசாமி தன் எதிரிகளை பழிவாங்கினானா? பாரிஜாதமும் பழனிசாமியும் இணைந்தனரா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவுதொகு
கஸ்தூரி ராஜா எழுதிய பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.[4][5] "ஒத்த ரூபா" என்ற பாடல் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.[6]
மேற்கோள்கள்தொகு
- ↑ "www.jointscene.com". Archived from the original on 2010-11-05. 2019-03-01 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
- ↑ "spicyonion.com".
- ↑ "www.indolink.com". 2013-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-01 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "www.allmusic.com".
- ↑ "play.raaga.com".
- ↑ "www.thehindu.com".