பி. கக்கன்

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981)[1] ஒரு விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் ஆவார். இவர் 1957 முதல் 1967 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் இன்னும் இதர பல பொறுப்புகளை வகித்த அரசியல்வாதி ஆவார்.

பி. கக்கன்
உள்துறை அமைச்சர் (சென்னை மாநிலம்)
பதவியில்
3 அக்டோபர் 1963 – 5 மார்ச் 1967
வேளாண்மைத் துறை அமைச்சர் (சென்னை மாநிலம்)
பதவியில்
13 மார்ச் 1962 – 3 அக்டோபர் 1963
சமயநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1962–1967
பொதுத்துறை அமைச்சர் (சென்னை மாநிலம்)
பதவியில்
13 ஏப்ரல் 1957 – 13 மார்ச் 1962
மேலூர் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1957–1962
மதுரை மக்களவை உறுப்பினர்
பதவியில்
1951–1957
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்கே. டி. கே. தங்கமணி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1946–1950
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்
பிரதமர்ஜவகர்லால் நேரு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-06-18)18 சூன் 1908
தும்பைப்பட்டி, மேலூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு23 திசம்பர் 1981(1981-12-23) (அகவை 73)
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிகாங்கிரசு (ஓ)
துணைவர்சுவர்ணம் பார்வதி கக்கன்
தொழில்அரசியல்வாதி

இளமைக்காலம்

தொகு

கக்கன் சூன் 18, 1908-ஆம் ஆண்டு, தமிழ்நாடு மதராஸ் இராசதானியாக இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைப்பட்டி என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூசாரி கக்கன், ஊர்க் கோயில் பூசாரியாகப் பணிபுரிந்தவர். இவர் தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்றார். திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பி. கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார்.[2][3] கக்கனின் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இந்திய விடுதலைப் போராட்டம்

தொகு

கக்கன் தனது பள்ளிப் பருவத்திலேயே காங்கிரசு இயக்கத்தில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.[4] அன்றைய காலகட்டத்தில் பறையர்களும் சாணார்களும் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு ‘கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939’ என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாக, இத்தடை நீக்கப்பட்டது. மதுரையில் கக்கன் பறையர்களுக்கும் சாணார்களுக்கும் தலைமை தாங்கி மதுரைக் கோயிலினுள் நுழைந்தார்.[4] கக்கன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.[4] 1946-இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று1946 முதல் 1950 வரை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.[4]

அரசியல் பணி

தொகு

கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.[5] காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்.[6][7][8] 1957-இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957-இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.[9][10] மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.[5] ஏப்ரல் 24, 1962 முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.[11] அக்டோபர் 3, 1963 [5] அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார். இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அதில் சுமார் 70 மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டால் இறந்தனர்.[12][13]

நற்பணிகள்

தொகு

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை, வீடூர் அணைகள் கட்டப்பட்டன.[4] ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம்[4] உருவாக்கப்பட்டது. இவர் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள்[4] தொடங்கப்பட்டன.[14] இவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999-ஆம் ஆண்டு வெளியிட்டுக் சிறப்பித்தது.[4]

இறுதிக் காலம்

தொகு

கக்கன், 1967-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மேலூர் (தெற்கு) தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, திமுக வேட்பாளர் ஒ. பி. ராமனிடம் தோற்றார்.[15] இத்தேர்தல் தோல்விக்குப்பின் 1969 முதல் 1972 வரை தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். 1973-இல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

சமய ஈடுபாடு

தொகு

கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக இருந்தார். மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றினார். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்றும் கருத்து தெரிவித்தார்.[16]

மறைவு

தொகு

கக்கன் 1981-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே 1981 திசம்பர் 23-ஆம் நாள் இறந்தார். 1981-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24-ஆம் நாளில் கண்ணம்மாப் பேட்டையில் உள்ள இடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.[17]

மேற்கோள்கள்

தொகு
  1. "பி. கக்கன் 10". தி இந்து. Retrieved 18 சூன் 2015.
  2. தமிழ்நாடு சட்டமன்றம். 'மதராசு சட்டமன்றத்தில் யார் எவர்? 1957'. சட்டமன்றக் குழு, 1957, p. 27.
  3. "பி. கக்கன் 10". தி இந்து (தமிழ் நாளிதழ்). Retrieved 2015-06-19.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 "24. சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு". பத்திரிகையாளர் சம்மேளனத்தின் நடப்பு வெளியீடுகள். பத்திரிகையாளர் சம்மேளனம், இந்திய அரசு. Retrieved 2008-10-29.
  5. 5.0 5.1 5.2 இந்தியாவில் யாருடன் யார். கைடு பதிப்பகம். 1967. p. 64.
  6. முத்துசாமி, எம். எஸ். (1988). கு. காமராசர்: சமூக அரசியல் ஆய்வு. தமிழ்நாடு அரசியல் அறிவியல் கழகம். p. 101.
  7. நரசிம்மன், வி. கே. (1967). காமராசர்: ஆய்வு. மணக்தலாஸ். p. 71.
  8. "கக்கன் டி.என்.சி.சி தலைவர்". த இந்து : இந்த நாள் அந்த காலம். டிசம்பர் 30, 2004 இம் மூலத்தில் இருந்து 2005-01-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050115081147/http://www.hindu.com/2004/12/30/stories/2004123000240902.htm. பார்த்த நாள்: 2008-10-29. 
  9. "அமைச்சரவை" (PDF). மதராஸ் சட்டமன்றம் 1957–1962. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. Archived from the original (PDF) on 2011-07-16. Retrieved 2008-10-29.
  10. "அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்" (PDF). மதராஸ் சட்டமன்றப் பேரவை 1957–1962. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. Archived from the original (PDF) on 2011-07-16. Retrieved 2008-10-29.
  11. "மதராஸ் சட்டமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம் -மார்ச் 29 முதல் மே 7, 1962 வரை" (PDF). மதராஸ் சட்டமன்றம் 1962–1967. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. Archived from the original (PDF) on 2011-05-14. Retrieved 2008-10-29.
  12. நீதிக்கட்சியின் பொன்விழாக் கொண்டாட்டம், 1968. நீதிக்கட்சி. 1968. p. 68.
  13. Sumathi Ramaswamy. Passions of the Tongue. UNIVERSITY OF CALIFORNIA PRESS.
  14. தமிழக அரசியல் களத்தில் கக்கனின் பங்களிப்புகள்
  15. "1967 இல் நடைபெற்ற மதராஸ் சட்டமன்றத் தேர்தலின் புள்ளியியல் வெளியீடு" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-27. Retrieved 2008-10-30.
  16. ரிச்மென், பவுலா (1991). தெற்காசியாவின் மாறுபட்ட தன்மை கொண்ட பண்பாடுகள், அத்தியாயம் 9: ஈ. வெ. ராமசாமியின் இராமாயண வாசிப்பு. கலிபோர்னியா பல்கலைக்கழகம்.
  17. https://www.vikatan.com/news/coverstory/75740-kakkan-great-leader-of-tamilnadu-and-humble-soul.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கக்கன்&oldid=4294594" இலிருந்து மீள்விக்கப்பட்டது