பொன்மனை (Ponmanai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சிகுட்பட்ட பகுதியில் பெருஞ்சாணி அணை அமைந்துள்ளது.

பொன்மனை
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,554 (2011)

915/km2 (2,370/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17 சதுர கிலோமீட்டர்கள் (6.6 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/ponmanai

அமைவிடம் தொகு

கன்னியாகுமரியிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள இப்பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ள குழித்துறை ஆகும். இதன் கிழக்கில் குமாரபுரம் 7 கிமீ; மேற்கில் திருவட்டாறு 3 கிமீ; வடக்கில் குலசேகரம் 2 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

17 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4068 வீடுகளும், 15554 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பொன்மனை பேரூராட்சியின் இணையதளம்
  4. பொன்மனை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Ponmanai Population Census 2011
  6. Ponmanai Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மனை&oldid=3854204" இலிருந்து மீள்விக்கப்பட்டது