மகாவீர் பிரசாத்

மகாவீர் பிரசாத் (இந்தி: महावीर प्रसाद; ஆங்கிலம்:Mahaveer Prasad)(11 நவம்பர் 1939 - 28 நவம்பர் 2010) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் பான்ஸ்கான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் மத்திய சிறுதொழில் மற்றும் வேளாண் மற்றும் கிராமப்புற தொழில்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1]

மகாவீர் பிரசாத்
மகாவீர் பிரசாத் (வலது), இந்தி நாள் விழாவின்போது, புது தில்லியில் (சூன் 5, 2008)
தொகுதிபான்சுகான்
இமாச்சலப் பிரதேச ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)
பதவியில்
23 ஏப்ரல் 1996 – 25 சூலை 1997
முன்னையவர்சீலா கவுல்
பின்னவர்வி. எஸ். ரமாதேவி
பதவியில்
18 செப்டம்பர் 1995 – 16 நவம்பர் 1995
முன்னையவர்சுதாகர் ராவ் நாயக்
பின்னவர்சீலா கவுல்
அரியானா ஆளுநர்
பதவியில்
1994 - 1999
முன்னையவர்தானிக் லால் மண்டல்
பின்னவர்பாபு பிரமானந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 இளைய சகோதரர்கள்

லெப்.. பிரபுநாத் பிரசாத்

லெப். சாவிலால் பிரசாத்
(1939-11-11)11 நவம்பர் 1939
கோரக்பூர், உத்தரப்பிரதேசம், இந்தியா
இறப்பு29 நவம்பர் 2010(2010-11-29) (அகவை 71)
இராஜேந்திர நகர், தில்லி, இந்தியா
இளைப்பாறுமிடம்2 இளைய சகோதரர்கள்

லெப்.. பிரபுநாத் பிரசாத்

லெப். சாவிலால் பிரசாத்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்உடசி தேவி
பிள்ளைகள்விமலா தேவி நிர்மலா தேவி
பெற்றோர்
  • 2 இளைய சகோதரர்கள்

    லெப்.. பிரபுநாத் பிரசாத்

    லெப். சாவிலால் பிரசாத்
வாழிடம்கோரக்பூர்
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

அரசியல் தொகு

பிரசாத் 1974 முதல் 1977 வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1980ல் 7வது மக்களவைக்கும், 1984ல் 8வது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிப்ரவரி 1988 முதல் சூலை 1989 வரை மத்திய ரயில்வே துணை அமைச்சராகவும், சூலை 1989 முதல் திசம்பர் 1989 வரை சுரங்கத் துறையில் சுரங்கம் மற்றும் எஃகுத் துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் 1989இல் 9வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2004-ல் 14வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரசாத், 22 மே 2004[1] முதல் சிறுதொழில் மற்றும் விவசாயம் மற்றும் கிராமப்புற தொழில்கள் மத்திய அமைச்சராகப் பணியாற்றினார்.

ஆளுநராக தொகு

சூன் 14 1994 முதல் 1999 வரை அரியானா ஆளுநராக பணியாற்றினார். மேலும் 18 செப்டம்பர் 1995 முதல் 16 நவம்பர் 1995 வரையிலும், மீண்டும் 23 ஏப்ரல் 1996 முதல் 26 ஜூலை 1997 வரையிலும் இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.

இறப்பு தொகு

மகாவீர் பிரசாத் 28 நவம்பர் 2010 அன்று தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நீண்ட கால நோய்க்குப் பிறகு இறந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாவீர்_பிரசாத்&oldid=3926338" இலிருந்து மீள்விக்கப்பட்டது