மண்டியாவிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

மண்டியாவிலுள்ள சுற்றுலாத் தலங்கள் (Tourist attractions in Mandya) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் மண்டியாவில் அமைந்துள்ள அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள் அல்லது வரலாற்று நகரங்கள் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களின் பட்டியலாகும்.

பரச்சுக்கி அருவி
காவேரி காட்டுயிர் புகழிடம்

சுற்றுலாத் தலங்கள் தொகு

மத்தூர் தொகு

 
மத்தூரின் வைத்தியநாதபுரத்தில் சிம்சாஆறு

மண்டியாவிலிருந்து 18 கி.மீ தூரமும், 8 புகழ்பெற்ற முக்கியத்துவமும் கொண்ட மத்தூர், புராண ரீதியாக அர்ஜுனபுரம் என்று அழைக்கப்பட்டதால், இங்கு பாண்டவ இளவரசர் அருச்சுனன் யாத்திரைக்கு வந்ததாக நம்பப்படுகிறது. மிக சமீபத்திய அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றில், பிரித்தானியர்களுடனான திப்புவின் போர்களின் போது இந்த நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மத்தூர் கோட்டை, உண்மையில், ஐதர் அலியால் பலப்படுத்தப்பட்டிருந்தது. 1791இல் காரன்வாலிஸ்பிரபுவால் அகற்றப்பட்டது.

 
கோக்ரெபெல்லூரில் கூழைக்கடாக்கள்

இங்குள்ள முக்கியமான கோயில்களில், போசளர் காலத்தின் நரசிம்மர் கோயில், அதன் 7 அடி உயரமுள்ள உக்ர நரசிம்ம உருவம் கருப்புக் கல்லால் ஆனது.

இங்கு அமைந்துள்ள வரதராஜர் கோயில் ஆரம்பகால சோழர் அல்லது சோழருக்கு முந்தைய அமைப்பாகும். அதன் 12 அடி உயரமான அலியலநாத தெய்வம் முன்னும் பின்னும் அசாதாரண அம்சங்களுடன் விரிவாக செதுக்கப்பட்டுள்ளது, இது கன்னடத்தில் 'எல்லா தேவாரா முண்டே நோடு அல்லலநாதனா ஹிண்டே நோடு' என்று கூறியுள்ளது . அதாவது 'மற்ற அனைத்து சிலைகளையும் முன்பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும். ஆனால் அலியலநாதனை பின்பக்கமிருந்தும் பார்க்க வேண்டும் '.

கொக்ரேபெல்லுர், மத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான பறவைகள் சரணாலயம். அதன் மத்தூர் நகரத்திலிருந்து 12 கி.மீ. தூரத்திலுள்ளது

மத்தூர் அருகேயுள்ளா ஆர்த்திபுரத்தில் 3 அடி (0.91 மீ) அடி அகலமும் 3.5 அடி (1.1 மீ) உயரமும் கொண்ட 8 ஆம் நூற்றாண்டில் பாகுபலியின் சிலையை ஆர்த்திபுராவில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தோண்டியுள்ளது.[1] 2016 ஆம் ஆண்டில், 3 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளில் ஆர்த்திபுரத்தில் உள்ள பாசாதிகளுக்கு எதிரே அமைந்துள்ள மற்றொரு மலையடிவாரத்தில் செய்யப்பட்ட 13 அடி (4.0 மீ) பாகுபலியின் சிலையை தோண்டியது.[2]

மலாவல்லி தொகு

 
மலாவல்லியில் ஓடும் காவிரி ஆறு

மலாவல்லி மண்டியாவிலிருந்து 37 கி.மீ தொலைவில் உள்ள ஒரு வரலாற்று நகரமாகும். இது ஆங்கிலேயர்களுக்குப் பயன்படுவதைத் தடுக்க திப்பு சுல்தானால் ஓரளவு அழிக்கப்பட்டது. இப்போது பட்டுப்புழு வளர்ப்பு வளர்ப்புக்கான ஒரு முக்கிய மையமாக உள்ளது. இது மாநிலத்தின் இந்த பகுதியில் வளர்ந்து வரும் தொழிலாகும். இங்கு ஒரு தோல் பதப்படுத்தல் நிறுவனமும் உள்ளது.

சிவசமுத்திரம் அருவி, சிம்சா ஆறு, காவேரி காட்டுயிர் புகலிடம், முத்தாதி காடு, ஹலகுரு அருகே அமைந்துள்ள பீமேசுவரி காவிரி மீன்பிடி முகாம் [3] கலிபோரி மீன்பிடி முகாம் [4] போன்ற சுற்றுலா ஆர்வமுள்ள இடங்களும் இங்குள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Eighth Century Jain Temple Discovered in Maddur", தி நியூ இந்தியன் எக்சுபிரசு, 7 January 2015
  2. Girish, M. B. (23 February 2016) [4 December 2015], "Another Jain centre under excavation in Mandya district", தி டெக்கன் குரோனிக்கள்
  3. "Bheemeshwari". Karnataka.com.
  4. Kumar, R. Krishna (5 August 2005). "Nature's beauty beckons them". Archived from the original on 7 September 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-11-10.