வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்

(வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லிபரேசன் நடவடிக்கை அல்லது வடமராட்சி நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் 1987 ஆம் ஆண்டு மே ஜூன் மாதங்களில், அச்சமயம் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள வடமராட்சியைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலாகும். பிரித்தானியர் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இலங்கை இராணுவம் மேற்கொண்ட முதல் மரபுப் போர் இதுவாகும்.

லிபரேசன் நடவடிக்கை
ஈழப் போரின் பகுதி
நாள் மே 26 1987 - ஜூன் 1987
இடம் யாழ்ப்பாணம், இலங்கை
இலங்கை இராணுவத்துக்கு பகுதியளவில் வெற்றி
பிரிவினர்
இலங்கை இராணுவம்
புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
பிரிகேடியர் (later Lieutenant General) டென்சில் கொப்பேகடுவ,
கேர்னல் (later Major General) விஜய விமலரத்ன
வேலுப்பிள்ளை பிரபாகரன்
பலம்
8,000 தெரியாது
இழப்புகள்
689 சாவு[1]631 சாவு[2]

இந்நடவடிக்கைக்கு பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ,கேர்னல் விஜய விமலரத்ன இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோர் அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்கியிருந்தனர். ஜூன் 4, 1987 அன்று இந்திய வான்படை இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கையின் வான்பரப்பில் உள்நுழைந்து யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்கள் வீசியது (பூமாலை நடவடிக்கை). இதன் பின்னர் இந்திய தலையீட்டின்படி 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1987 மே 27 இல் விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கும் இராணுவ நடவடிக்கை எனப்பொருள்படும் ஆப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்டது. 5 நாட்கள் நீடித்த இராணுவத்தரப்பில் இந்த நடவடிக்கை கொப்பேகடுவ வழிகாட்டலில் இந்த அப்பாவித் தமிழர்களை வீடுகளில் இருந்து விரட்டி அடிக்கும் இனவாத நடவடிக்கையாக அமைந்தது. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பலாலியில் இருந்து வெளிவந்த இராணுவத்தினர் வசாவிளான், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் முன்னேறினர். இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம்பெயர்ந்தனர். இதில் பெரும்பாலான தமிழர்களின் வீடுகள் எவ்வித காரணமும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடிக்கத்தழிக்கப்பட்டது. மேலும் பலாலி விமான நிலையம் இருந்து திருச்சிக்கான சர்வதேச விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு முழுமையான இராணுவ விமான தளமாக்கப்பட்டது. மேலும் பல அப்பாவித் தமிழர்களின் பூர்விகப் பிரதேசங்களைப் பலாத்காரமாகப் பறிமுதல் செய்து பலாலி விமானநிலையமும் விஸ்தரிக்கப்பட்டது. இன்றும் இப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புவதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.[3] இந்த இராணுவ நடவடிக்கை மூலம் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் தலையீடு வேண்டும் எனக் கோரக் காரணம் ஆயிற்று. இந்த இராணுவ நடவடிக்கை அடுத்தே 1987 இல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கை வந்தது.

1987 இற்கு முற்பட்டகாலப்பகுகியில் சிறிலங்கா இராணுவம் அவர்களின் முகாம்களுக்குள்ளேயே தமிழர் இயக்கங்களினால் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். தொண்டமானாறு, வல்வெட்டித்துறை இராணுவ முகாம்களினூடாக முன்னேறிய ஸ்ரீலங்கா இராணுவத்தினர், வடராட்சிப் பிரதேசத்தையே ஆக்கிரமித்தனர். இந்த இராணுவ நடவடிக்கை வடமராட்சியுடன் இடைநிறுத்தப்பட்ட போதும் இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் முழு யாழ்ப்பணத்திற்கும் ஆனதாகக் கருதப்படுகின்றது.

உசாத்துணைகள் தொகு