அண்ணாமலை நகர்

அண்ணாமலை நகர் (ஆங்கிலம்:Annamalai Nagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சிக்கு அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளது.

அண்ணாமலை நகர்
பேரூராட்சி
அண்ணாமலை நகர் is located in தமிழ் நாடு
அண்ணாமலை நகர்
அண்ணாமலை நகர்
தமிழ்நாட்டில் அண்ணாமலை நகரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°23′48″N 79°42′58″E / 11.39667°N 79.71611°E / 11.39667; 79.71611
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்16,289
மொழிகள்
 • அலுவலல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்608002
தொலைபேசி குறியீடு04144
வாகனப் பதிவுTN-91( TN-31 till Jun17,2015)
இணையதளம்http://www.townpanchayat.in/annamalainagar

அமைவிடம் தொகு

மாவட்டத் தலைமையிடமான கடலூரிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்த அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 3 கிமீ தொலவில் உள்ள சிதம்பரம் ஆகும். இதன் கிழக்கில் பிச்சாவரம் 15 கிமீ; மேற்கில் சிதம்பரம் 4 கிமீ; வடக்கில் பரங்கிப்பேட்டை 15 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

4.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,445 வீடுகளும், 16,289 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 95.22% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 884 பெண்கள் வீதம் உள்ளனர். [2]

ஆதாரங்கள் தொகு

  1. அண்ணாமலை நகர் பேரூராட்சியின் இணையதளம்
  2. Annamalai Nagar Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாமலை_நகர்&oldid=2704583" இலிருந்து மீள்விக்கப்பட்டது