அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் (ஆங்கிலம்:Adirampattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

அதிராம்பட்டினம்
—  நகராட்சி  —
அதிராம்பட்டினம்
இருப்பிடம்: அதிராம்பட்டினம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°21′N 79°23′E / 10.350°N 79.383°E / 10.350; 79.383
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

31,066 (2011)

2,589/km2 (6,705/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12 சதுர கிலோமீட்டர்கள் (4.6 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/adirampattinam

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல் தொகு

அதிராம்பட்டினம் பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.[4][5]

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31066 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். அதிராம்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அதிராம்பட்டினம் மக்கள் தொகையில் 13.08% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு ஆண்கள் 47.95% (14897) பெண்கள் 52.04% (16169). இங்கு முஸ்லிம்கள் 70% மற்றவர்கள் 30% ஆகும்.[6]

மக்கட்தொகை தொகு

Religious census
Religion Percent(%)
இந்து
70%
முஸ்லிம்
27%
கிறித்தவர்
2.48%
Buddhist
0.01%
Other
0.1%

அரசியல் தொகு

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிராம்பட்டினம்&oldid=3788535" இருந்து மீள்விக்கப்பட்டது