கதக் நடனத்தின் தேசிய நிறுவனம்

கதக் நடனத்தின் தேசிய நிறுவனம் (National Institute of Kathak Dance) கதக் கேந்திரா என்றும் அழைக்கப்படும் இது, இந்திய பாரம்பரிய நடன வடிவமான கதக்கின் முதன்மையான நடன நிறுவனமாகும். மேலும் புதுடில்லியில் அமைந்துள்ள இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதாமியான சங்கீத நாடக அகாதமியின் ஒரு பிரிவாகவும் இருக்கிறது. [1] 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் முதன்மையாக கதக்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது இந்துஸ்தானி இசை (குரல்) மற்றும் பக்கவாத்தியம் மற்றும் கைம்முரசு இணை ஆகிய பாடங்களையும் வழங்குகிறது.

கதக் நடனத்தின் தேசிய நிறுவனம்
(கதக் கேந்திரா)
துவங்கியது1964
தலைமையகம்எண் 2 சான் மார்ட்டின் மார்க், சாணக்கியபுரி புது தில்லி-21
இருப்பிடம்இந்தியா
வலைத்தளம்Official website

வரலாறு தொகு

1947 க்குப் பிறகு சுதந்திரத்திற்குப் பிந்தைய சுதேச அரசுகளின் முடிவு, கதக் ஆதரவாளர்களுக்கும் குருக்களுக்கும் அரச ஆதரவின் முடிவைக் கொண்டு வந்தது. பலர் தனிப்பட்ட முறையில் கற்பிக்கத் தொடங்கினர். முன்னதாக, அவத் மாநிலத்தின் ஆதரவின் கீழ், இலச்சு மகாராஜ் மும்பைக்கு குடிபெயர்ந்தார். அதே நேரத்தில் அவரது சகோதரர் சம்பு மகாராஜும் அவரது மருமகனும் 1955 இல் புது தில்லிக்கு குடிபெயர்ந்தனர். சங்கீத நாடக அகாதமியின் முதல் செயலாளர் நிர்மலா ஜோஷியின் முயற்சியாலும், சிறீராம் குழுமத்தின் தொழிலதிபர் லாலா சரத் ராமின் மனைவி சுமித்ரா சரத் ராமின் ஆதரவின் கீழும் கதக் கேந்திரா முதலில் சிறீராம் பாரதிய கலா மையத்தின் கதக் பிரிவாக நிறுவப்பட்டது. [2] இங்கே கதக்கின் லக்னோ கரானாவின் (பள்ளி) குருவாக கொண்டாடப்பட்ட பண்டிட் சம்பு மகாராஜ் துறைத் தலைவராக இருந்தார். 1964 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் சங்க நாடக அகாதமியின் ஒரு பகுதியாக மாறியது. சூலை 1969 இல், அகாதமி இதன் செயல்பாட்டையும் எடுத்துக் கொண்டது. மேலும் அருகிலுள்ள முன்னாள் பஹவல்பூர் மாளிகையில் அதன் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது, இது தேசிய நாடகப் பள்ளியையும் கொண்டுள்ளது . சம்பு மகாராஜ் பாவம் (உணர்ச்சிபூர்வமான பகுதி) ஒரு குறிப்பிடத்தக்க நிபுணராக இருந்தார். மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில், பல பாரம்பரிய தும்ரி மற்றும் பஜனைகளை புதுப்பித்து கதக் திறனாய்வில் சேர்த்தார். குமுதினி லக்கியா, தமயந்தி ஜோஷி, பாரதி குப்தா, கோபி கிருட்டிணா , மாயா ராவ் மற்றும்சித்தாரா தேவி உள்ளிட்ட பல மாணவர்களுக்கு இவர் பயிற்சி அளித்தார். [3]

1967 ஆம் ஆண்டில் சங்க நாடக அகாடமியின் இசை நாடக அகாடமி தனது சங்கீத நாடக அகாடமி கூட்டாளர் என்ற கௌரவத்தை வழங்கியது. 1970 ஆம் ஆண்டில் சம்பு மகாராஜின் மரணத்திற்குப் பிறகு, அவரது மருமகன் பிர்ஜு மகாராஜும், இந்த நிறுவனத்துடன் ஆரம்பத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்தார். மேலும் ஒரு புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரும் குருவும் என்ற தனது சொந்த உரிமையில், ஆசிரியத் தலைவரானார். மேலும் பல ஆண்டுகள் நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். [4] பிர்ஜு மகாராஜ் உலகம் முழுவதும் இந்த பாலே தயாரிப்புகளை நிகழ்த்தினார், பாரம்பரிய நடன வடிவத்தை, உலகளாவிய அங்கீகாரத்தை அளித்தார். [5] கேந்திராவின் பல முன்னாள் மாணவர்களும் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களாக ரெபர்டரி பிரிவில் சேர்ந்தனர். [6]

உத்தரப்பிரதேச அரசு, 1973 ஆம் ஆண்டில் லக்னோவில் ஒரு கதக் கேந்திராவை நிறுவியது. இதற்கும்,ராஜஸ்தான் அரசு நிறுவிய ஜெய்ப்பூர் கதக் கேந்திராவிற்கும் நிறுவன இயக்குநராக சம்பு மகாராஜின் சகோதரர் இலச்சு மகாராஜ் இருந்தார். இரு இடங்களும் கதக்கின் அந்தந்த கரானாக்களுக்கு பெயர் பெற்றவை.

கண்ணோட்டம் தொகு

பஹவல்பூர் மாளிகையில் உள்ள பிரதான மையத்தைத் தவிர, நகரத்தில் இரண்டு கூடுதல் மையங்களையும் மையம் நடத்துகிறது, வட தில்லி மற்றும் தெற்கு தில்லியில் தலா ஒன்று:

  • கதக் கேந்திர பிரதான கட்டிடம், சாணக்கியபுரி புது தில்லி
  • கதக் மையம் (வடக்கு), (கிங்ஸ்வே முகாம்)

மேற்கோள்கள் தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு