கனவுருப்புனைவு

கனவுருப்புனைவு (Fantasy) (ஒலிப்பு) ஒரு கற்பனையான பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட பல ஊகப்புனைவுகளின் வகையாகும், இது பெரும்பாலும் நிஜ உலக புராணங்கள் மற்றும் நாட்டுப்புற கதைகளால் ஈர்க்கப்படுகிறது. இதன் ஆரம்பம் வாய்வழி மரபுகளில் உள்ளன, பின்னர் அவை கற்பனை இலக்கியமாகவும் நாடகமாகவும் மாறியது. இது இருபதாம் நூற்றாண்டிலிருந்து திரைப்படங்கள், தொலைக்காட்சி, வரைகதை புதினங்கள், மங்கா மற்றும் நிகழ்பட ஆட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பல வடிவங்களில் கனவுருப்புனைவுகள் படைக்கப்படுகின்றன.[1]

கனவுருப்புனைவு கதாபாத்திரங்கள்

பரவலர் கலாச்சாரத்தில் கனவுருப்புனைவு வகை ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றது. பெரும்பாலான கனவுருப்புனைவு மந்திரம் மற்றும்பிற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்டுள்ளது. இது பெரும்பாலும் அறிவியல் புனைவு மற்றும் திகில் புனைவுவுடன் ஒப்பிடப்படுகிறது, ஏனெனில் அவை ஊகப்புனைவுளின் முக்கிய வகைகளாகும்.[2]

பல கனவுருப்புனைவுத் திரைப்படங்கள் நாவல்களின் தழுவல்களை கொண்டது. குறிப்பாக பீட்டர் ஜாக்சன் இயக்கிய த லோட் ஒவ் த ரிங்ஸ் மற்றும் ஹாரி ஆரி பாட்டர் திரைப்படங்கள் இரண்டும் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் ஆகும். இதற்கிடையில் டேவிட் பெனியோஃப் மற்றும் டி. பி. வெயிஸ் ஆகியோர் புத்தகத்தை அடிப்படை யாக தயாரித்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற நாடகத் தொடர் தொலைக்காட்சி துறையில் மிக பெரியவெற்றியை அடைந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. John Grant and John Clute, The Encyclopedia of Fantasy, "Fantasy", p 338 ISBN 0-312-19869-8
  2. Charlie Jane Anders. "The Key Difference Between Urban Fantasy and Horror". io9. பார்க்கப்பட்ட நாள் 11 February 2017.

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனவுருப்புனைவு&oldid=3679470" இலிருந்து மீள்விக்கப்பட்டது