காகாவின் இராமாயாணம்

பாலினீசிய பனை ஓலை கையெழுத்துப் பிரதி

காகாவின் இராமாயணம் ( Kakawin Ramayana ) என்பது சமசுகிருத இராமாயணத்தை காகாவின் யாப்பிலக்கணத்தில் வழங்கும் பழைய சாவக மொழிக் கவிதையாகும். இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும்.[1][2][3] இது கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் - கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது.[4] கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய் மொழியில் உள்ள ராமகியென், லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

இராமன் அனுமனின் தோளில் இருந்தபடி இராவணனுடன் போர்புரியும் காட்சி.

இந்தோனேசியாவின் இராமயணம் தொகு

காகவின் இராமாயணம் என்பது சாவகத்தில் பாரம்பரிய சமசுகிருத யாப்பிலக்கணத்தை மாதிரியாகக் கொண்ட கவிதை வடிவமாகும். இது நடுச் சாவகத்தில் (நவீன இந்தோனேசியா ) ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மாதரம் இராச்சியத்தின் சகாப்தத்தில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. [5] :128 இதன் சமீபத்திய ஆங்கில மொழிபெயர்ப்பாளரான இசுடூவர்ட் ராப்சனின் கூற்றுப்படி: "பழைய சாவகத்தின் இராமாயணம் 856 மற்றும் 930 க்கு இடையில் எழுதப்பட்டது. கடைசி பகுதி 900-930 காலகட்டத்தில் சேர்க்கப்பட்டது." [6] :31

சாவகர்களிடையே, காகவின் இராமாயணம் எப்போதும் கலை வெளிப்பாட்டின் உச்சமாக கருதப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் அதன் புகழ் மற்றும் தழுவலுக்கு சான்றளிக்கின்றன. சாவகத்தின் இந்து-பௌத்த காலத்தின் அனைத்து பழைய சாவக ககாவின்களிலும் இது மிக நீளமானது.

வேறுபாடு தொகு

சாவகத்தின் இராமாயணம் அசல் இந்து முன்மாதிரியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகிறது. இதன் முதல் பாதி அசல் சமசுகிருத பதிப்பைப் போலவே உள்ளது, அதே சமயம் பிற்பகுதி அசல் இராமாயணத்தின் இந்திய அறிஞர்களால் அடையாளம் காண முடியாத அளவிற்கு வேறுபட்டது. பல முக்கிய மாற்றங்களில் ஒன்று, சாவகத்தின் அனைத்து சக்திகளையும் வாய்ந்த பூர்வீக தெய்வமான செமரின் ( பாலினிசிய இலக்கியத்தில் தவாலென் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் அவரது தவறான மகன்கள், கரேங், பெட்ரூக் , பாகோங் ஆகியோர் எண் சோதிடத்தில் குறிப்பிடத்தக்க நான்கு புனோகாவான்களை அல்லது "கோமாளி வேலைக்காரர்களை" உருவாக்குகின்றனர் . அசல் கதையின் இந்த பிந்தைய, மாற்றப்பட்ட பாதி மிகவும் பிரபலமானது. மேலும் இது அனைத்து வேயாங் நிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18]

ஆதாரங்கள் தொகு

கி.பி 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியக் கவிஞர் பட்டியின் சமசுகிருதக் கவிதையான இராவணவதம் அல்லது பத்தி-காவ்யம் பழைய சாவக காகவின் இராமாயணத்தின் உரை ஆதாரமாக இருக்கலாம் என்று இலக்கிய அறிஞர்கள் கருதுகின்றனர். காகவின் இராமாயாணத்தின் முதல் பாதி, பத்தி-காவ்யத்தின் துல்லியமான வழங்கலாகும்.

கதைச் சுருக்கம் தொகு

 
போட்டியில் மகாதேவரின் வில்லை முறித்த இராமன், (இராஜா ரவி வர்மாவின் ஓவியம்)
 
இராமனும், சீதையும் அமர்ந்திருக்கின்றனர். அருகின் இலட்சுமணன் நிற்க, அனுமன் இராமனை வழிபடும் காட்சி.

அயோத்தியை சேர்ந்த தசரதனுக்கு இராமன், பரதன், இலட்சுமணன் , சத்துருக்கன் ஆகிய நான்கு மகன்கள் இருந்தனர். ஒரு நாள் விசுவாமித்திரர் என்ற ஒரு துறவி, தசரதனிடம் தனது வேள்வியின் மீது தாக்குதல் நடத்தும் அரக்கனிடமிருந்து காக்க உதவுமாறு வேண்டினார். இதற்காக இராமனும் இலட்சுமணனும் புறப்பட்டனர்.

இராமரும் இலட்சுமணனும் அசுரர்களை அழித்துவிட்டு மிதிலா நாட்டிற்குச் செல்கின்றனர். அங்கு சுயம்வரம் நடைபெற்றது. சுயம்வரத்தில் மன்னரின் மகள் சிந்தாவை ( சீதை ) திருமணம் செய்து கொள்ள பங்கேற்பாளர்கள் சிந்தாவுடன் பிறந்த வில்லை வளைக்க வேண்டும். இராமனைத் தவிர ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. பின்னர் இராமன் திருமணம் செய்துகொண்டு அயோத்திக்குத் திரும்பினான். அயோத்தியில், இராமன் மூத்த மகன் என்பதால், அரசனாவதற்குத் தயாராக இருந்தார்.

இருப்பினும், தசரத மன்னனின் மற்றொரு மனைவியான கைகேயி, தன் மகன் பரதனை அரசனாக்க வேண்டும் என்று அரசனிடம் கேட்டுக் கொண்டாள். மனமுடைந்த தசரத மன்னன் பரதனுக்கு அரச பதவியை அளித்தான். இராமர், சிந்தா மற்றும் இலட்சுமணன் ஆகியோர் அரண்மனையை விட்டு வெளியேறினர். இதனால் கடுமையாக துக்கமடைந்த மன்னன் தசரதன் இறந்தார். புதிய அரசன் பரதன் இராமனைத் தேடி வருகிறான். தான் அரச பதவிக்குத் தகுதியற்றவர் என்று உணர்ந்து, இராமனை அயோத்திக்குன் மறுத்து, தனது அதிகாரத்தின் அடையாளமாக பரதனுக்கு தனது செருப்பைக் கொடுத்தார்.

பரதன், இராமரின் செருப்புடன் அரண்மனைக்குத் திரும்பினான். இராமன் தன் இரு தோழர்களுடன் காட்டுக்குச் சென்று அங்கு வசிக்கச் சென்றான். அவர்கள் தங்கியிருந்த காலத்தில் சூர்ப்பணகை என்ற பெண் அரக்கி இலட்சுமனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு அழகான பெண்ணாக மாறுவேடமிட்டாள். இலட்சுமணன் அவள் மீது ஆர்வம் காட்டவில்லை, மேலும் அவள் வன்முறையில் ஈடுபடுவேன் என்று மிரட்டியபோது அவளது மூக்கின் நுனியை வெட்டினான். அவள் கோபமடைந்து, தன் சகோதரன், இலங்கையின் மன்னன் இராவணனிடம் சிந்தாவின் அழகைச் சொல்லி, அவளை கடத்தும்படி அவனை வற்புறுத்தினாள்.

சிந்தா ஒரு அழகிய மானைப் பார்த்து, இராமனைப் பிடிக்கச் சொன்னாள். சிந்தாவைக் காக்க இலட்சுமணனிடம் கூறிவிட்டு இராமன் மானைத் தேடிச் செல்கிறான். நீண்ட நேரமாக இராமன் வராததால் கவலையடைந்த சிந்தா, இலட்சுமணனைத் தன்னை விட்டுவிட்டு இராமனைத் தேடிச் செல்லும்படி கேட்டுக் கொண்டாள். இந்த தருணத்தைப் பயன்படுத்திய இராவணன் சிந்தாவை கடத்திக் கொண்டு இலங்கைக்குச் சென்று விடுகிறான் .

பின்னர் இராமனும் இலட்சுமணனும் அவளை மீட்க முயன்றனர். அவர்களின் முயற்சியில் சிவன் அனுமன் அவதாரத்தின் மூலம் இவர்களுக்கு உதவுகிறார். இறுதியில் இராவணன் கொல்லப்பட்டான். இராமரும் சிந்தாவும் அயோத்திக்குத் திரும்பினர். அங்கு இராமனுக்கு முடிசூட்டப்பட்டது.

இதையும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Ramayana". Random House Webster's Unabridged Dictionary.
  2. "Ramayana | Meaning of Ramayana by Lexico". Lexico Dictionaries | English (in ஆங்கிலம்). Archived from the original on 2020-02-19. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  3. The Rámáyan of Válmíki. 
  4. "Ramayana | Summary, Characters, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-18.
  5. The Indianized States of Southeast Asia. 
  6. Robson, Stuart. Old Javanese Ramayana. Tokyo: Tokyo University of Foreign Studies, 2015.
  7. Stutterheim, W.F.: 1921: Rama-legenden und Rama reliefs in Indonesien. Mueller, Munich: 1925.
  8. Hooykaas C. The Old Javanese Ramayana Kakawin. The Hague: Nijhoff: 1955.
  9. Museum manuscript Kropak no. 1102 Ramayana of the Sundanese Lontar Collection (Koleksi Lontar Sunda of 'Museum dan Kepustakaan Nasional Indonesia, Jakarta National Museum.
  10. Netscher E. iets over eenige in de Preanger-regentschappen gevonden Kawi handschriften in Tijdschrift van het Bataviaasch Genootschap. Volume 1. pp469-479. Chapter Het verboden Tschiboeroej in Pleyte CM Soendasche Schetsen (Bandung Kolff C 1905. pp160-175.)
  11. Nurdin. J aka J. Noorduyn: 1971.Traces of an Old Sundanese Ramayana Tradition in Indonesia, Vol. 12, (Oct., 1971), pp. 151-157 Southeast Asia Publications at Cornell University. Cornell University: 1971
  12. Hatley, Barbara: 1971. "Wayang and Ludruk: Polarities in Java in The Drama Review: TDR, Vol. 15, No. 2, Theatre in Asia (Spring, 1971), pp. 88-101. MIT Press: 1971
  13. "Suryo S. Negoro. Semar. in Joglo Semar (Semar's mansion)". Archived from the original on 2009-07-11. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
  14. http://google.com/scholar?q=cache:kmHqUDWeIYAJ:scholar.google.com/+javanese+ramayana+differences+to+indian+ramayana&hl=en&as_sdt=2000 [தொடர்பிழந்த இணைப்பு]
  15. http://google.com/scholar?q=cache:NkfJ43PTUU0J:scholar.google.com/+javanese+ramayana+differences+to+indian+ramayana&hl=en&as_sdt=2000 [தொடர்பிழந்த இணைப்பு]
  16. http://google.com/scholar?q=cache:vJC5vH4_cT8J:scholar.google.com/+javanese+ramayana+differences+to+indian+ramayana&hl=en&as_sdt=2000 [தொடர்பிழந்த இணைப்பு]
  17. "Archived copy". Archived from the original on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2009-11-18.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  18. Desai, Santosh N. (1970). "Ramayana--An Instrument of Historical Contact and Cultural Transmission between India and Asia". The Journal of Asian Studies 30 (1): 5–20. doi:10.2307/2942721. https://archive.org/details/sim_journal-of-asian-studies_1970-11_30_1/page/5. 

http://www.joglosemar.co.id/semar.html பரணிடப்பட்டது 2009-07-11 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காகாவின்_இராமாயாணம்&oldid=3725364" இலிருந்து மீள்விக்கப்பட்டது