சி. ஆர். வியாசு

சிந்தாமன் ரகுநாத் வியாசு (Chintaman Raghunath Vyas) (9 நவம்பர் 1924 - 10 சனவரி 2002), சி. ஆர். வியாசு என்று பிரபலமாக அறியப்பட்ட இவர், ஒரு இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகராவார். இவர் கியால் பாணியைப் பாடுவதில் பெயர் பெற்றவர். [1] [2]

சிந்தாமன் ரகுநாத் வியாசு
இயற்பெயர்சிந்தாமன் ரகுநாத் வியாசு
பிறப்பு9 நவம்பர் 1924
பிறப்பிடம்உஸ்மானாபாத், மகாராட்டிரம், இந்தியா
இறப்பு10 சனவரி 2002 (வயது 77)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடுதல்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

வியாசு மகாராட்டிராவின் உஸ்மானாபாத்தில் சமசுகிருத அறிஞர்கள் மற்றும் ஹரி கீர்த்தங்கர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மற்றும் தாத்தாவின் பாடலாலும், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றாலும் ஈர்க்கப்பட்டார்.

கிராணா பள்ளியின் கோவிந்திராவ் பட்டாம்பிரேக்கர் என்பவரிடமிருந்து பத்தாண்டு காலமாக தனது ஆரம்ப இசை பயிற்சி பெற்றார். பின்னர் குவாலியரின் ராஜரம்புவ பரத்கரிடமிருந்து கற்றுக்கொண்டார். இவர் குவாலியர் பாணியில் பாடும் போது, ஆக்ரா பள்ளியைச் சேர்ந்த ஜெகநாத்புவ புரோகித் அவர்களால் ஈர்க்கப்பட்டு அவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். யசுவந்த்புவா மிராஷி, எஸ் என் ரத்தஞ்சங்கர், சிதானந்த் நாகர்கர், எஸ். சி. ஆர். பட் மற்றும் கே. ஜி. கிண்டே, போன்ற மற்ற அறிஞர்கள்/ இசைக்கலைஞர்களின் வழிகாட்டுதல் இவருக்கு கிடைத்தது. இதன் மூலம் இவர் பயனடைந்தார் ,

தொழில் தொகு

இவர், ஒரு திறந்த குரலைக் கொண்டிருந்தார். மேலும் இவர் பயிற்சியில் ஈடுப்பட்டிருக்கும்போது அனைத்து வெவ்வேறு கரானாக்களின் கலவையைப் பாடினார், ஆனால் குவாலியர் கயாகியின் செல்வாக்கு மிகவும் முக்கியமானது.

இவருக்கு இசை ஒரு முதன்மை தொழில் அல்ல. இவர் ஐடிசி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் அனைத்திந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் முன்னணி கலைஞராக இருந்தார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் முக்கிய இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இவரது சீடர்களில் சிறீபாத் பரட்கர் (இவரது சொந்த குருவும் பழம்பெரும் குவாலியர் கரானா பாடகருமான பி.டி.ராஜரம்புவ பரட்கரின் மகன்), பிரபாகர் கரேக்கர், சிறீராம் பரசுராம், சஞ்சீவ் சிம்மல்கி, கணபதி பட் மற்றும் தனது மகன் சுகாசு வியாசு ஆகியோர் அடங்குவர். சிதேந்திர அபிசேகி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இவரது மாணவராக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் இந்திரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு - சுகாசு வியாசு, ஒரு பாரம்பரிய பாடகரான, சதீசு வியாசு, முக்கிய சந்தூர் இசைக்கலைஞரான, பட்டய கணக்காளர் சசி வியாசு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

இவர் பாரம்பரிய இராகங்கள் மற்றும் பாண்டிதிசுகளையும் ஆராய்ச்சி செய்தார். மேலும், குணிஜான் என்ற புனைப் பெயரில் வெவ்வேறு இராகங்களில் 200 க்கும் மேற்பட்ட பாண்டிதிசுகளை இயற்றினார் . [3] தனது குரு குணிதாசுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இவர் 1977 இல் குணிதாசு சங்கீத சம்மேளனத்தைத் தொடங்கினார். இவர் இராக சரிதம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது இசைத்துறையில் இவரது படைப்புகளை சுருக்கமாகக் கூறுகிறது. புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு சமீபத்தில் 2019 இல்இவரது மகன் சுகாசு வியாசுவல் வெளியிடப்பட்டது.

விருதுகளும் அங்கீகாரமும் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Reluctant Master". India Today. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  2. "A matter of the swaras". The Hindu. Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Pt. Satish Vyas I Anecdote I Guni Das I Guni Jaan I Anshul Aggarwal I Aashirwad Part-6 (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-06-17
  4. "Tansen Samman for Pandit Vyas". Indian Express. Archived from the original on 18 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  5. "Padma Awards". Ministry of Communications and Information Technology (India). பார்க்கப்பட்ட நாள் 2009-05-16.
  6. "Sangeet Natak Akademi Awards — Hindustani Music — Vocal". Sangeet Natak Akademi. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.

}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._வியாசு&oldid=3641631" இலிருந்து மீள்விக்கப்பட்டது