சுந்தரவனக்காடுகள்

சுந்தரவனக்காடுகள் (வங்காள மொழி: সুন্দরবনசுந்தர்பான் ) உலகத்தில் உவர்த்தன்மையுள்ள அலையாத்தி சதுப்புநில காடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.[1] சுந்தரவனக்காடு என்பது வங்காள மொழியில் "அழகான அடர்ந்தகாடு" அல்லது "அழகான காடு" (சுந்தர ,"அழகான" மற்றும் வனம் , "காடு" அல்லது "அடர்ந்தகாடு") என்று பொருள்படும். சுந்தரவனக்காடுகளில் அதிக எண்ணிக்கையில் சந்தரி என்ற மரங்கள் காணப்படுவதால் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.[1]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சுந்தர வனம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
River in Sundarbans
River in Sundarbans
வகைஇயற்கை
ஒப்பளவுix, x
உசாத்துணை798
UNESCO regionஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1997 (21st தொடர்)

இந்த காடுகள் வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் பரப்புக்கு இடைப்பட்ட பகுதியிலும், கங்கையின் அடியிலும் அமைந்துள்ளது, இது கழிமுகத்தின் கடல் நோக்கிய விளிம்பாக இருக்கும். இந்த காட்டின் சுற்றளவு 1௦,௦௦௦ கி.மீ ஆகும். 2 இதில் 6,௦௦௦ கி.மீ பரப்பு வங்காளத்தேசத்திற்குட்ட நிலப்பரப்பில் உள்ளது.[2]. 1997 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக மரபுரிமை எழுத்துப்பதிவில் இது இடம்பெற்றது, ஆனால் அந்தசமயத்தில் வங்காளதேசம் மற்றும் இந்திய பகுதியின் சுற்றுப்புறத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை உண்டானது, அதை சுந்தரவனக்காடுகள் மற்றும் தேசிய சுந்தரவனப்பூங்கா என முறையே பிரித்து யுனெஸ்கோ உலக மரபுரிமை எழுத்துப்பதிவில் பட்டியலிடப்பட்டடுள்ளது. சிக்கலான வலையமைப்புடைய நீர்வழிகள், ஈரமணல்கள் மற்றும் உப்புத்தன்மையுள்ள சிறிய தீவுகளின் குறுக்கே சுந்தரவனக்காடுகள் உள்ளது. அந்த பகுதியில் பெங்காலி புலிகள் (பாந்தெரா டைகிரிஸ் டைகிரிஸ்) , அதுமட்டுமில்லாமல் எண்ணற்ற பறவைகள், புள்ளி மான்கள், முதலைகள் மற்றும் பாம்புகளும் இருக்கிறது. அதை மதிப்பிடுகையில் அந்த பகுதியில் இப்பொழுது 5௦௦ [3] பெங்காலி புலிகள் மற்றும் 3௦௦ புள்ளி மான்களும் உள்ளது. 1992, மே 21 ஆம் நாள் முதல் சுந்தரவனக்காடுகள் ராம்சார் பகுதியாக மாற்றப்பட்டது. கழிமுகம் பகுதியில் உள்ள வளமான மண்கள் நூற்றாண்டு காலமாக மிகுதியான மக்கள் உபயோகிக்கின்றனர், மற்றும் எஞ்சிய காடுகளின் பிறநாடுசூழ் பிரதேசத்தின் சுற்றுப்புறப்பகுதியும் மிகுதியான விவசாயப்பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. சுந்தரவன சதுப்புநிலங்களுடன் உள்ள எஞ்சிய காடுகள், ஆபத்தான புலிகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. கூடுதலாக, சுந்தரவனக்காடுகள் கல்கட்டாவை (கல்கத்தா) சுற்றியிள்ள பகுதியில் வாழும் மில்லியன் கணக்கிலுள்ள உயிரினங்களை வெள்ளம் மற்றும் புயலிலிருந்து பாதுகாக்கும் சிக்கலான செயலை செய்கிறது.

வரலாறு தொகு

கி.பி. 200-300 ஆம் ஆண்டிற்கு முன்பே இப்பகுதியின் வரலாறு காணப்படுகிறது. சான்ட் சடாகர் உருவாக்கிய நகரத்தின் சிதைந்த பகுதியை பக்மரா காட்டில் காணலாம். முகலாயர்கள் காலத்தில், அப்பகுதி அரசர்கள் வசிக்க சுந்தரவனக்காடுகளை குத்தகைக்கு எடுத்தனர். இந்த கால கட்டத்தில், பேரரசர் அக்பரின் படைகளிடம் இருந்து தப்பிக்க சுந்தரவனக்காடுகளை ராஜா பசண்ட ராய்யும் அவருடைய அண்ணன் மகனும் புகலிடமாக ஏற்றனர்.[4] இவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்களை 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கல் நாட்டை சார்ந்த கடற் கொள்ளையர்கள், உப்புக் கடத்தல்காரர்கள், படைக்கலம் ஏந்திய கொள்ளைக்கார்களால் அபகரிக்கப்பட்டது. நாசமாக்கப்பட்ட நேடிதோபனி சுந்தரவனக்காடுகளை சுற்றி உள்ள பிற பகுதிகளின் சிதைந்த நிலையே இதற்கான உண்மையான சான்றாகும்.[5] இந்த காட்டில் சட்டப்பூர்வமான மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டது. இதுவே அறிவியல் ஆராய்ச்சியின் கீழ் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சதுப்புநிலகாடாகும். 1757 ஆம் ஆண்டில் மொகாலாய பேரரசர் இரண்டாம் அலம்கிர்ரிடம் இருந்து காப்புரிமையைப் பெற்றது. அதைத் தொடர்ந்து உடனடியாக கிழக்கு இந்திய கம்பெனி 1764 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே நில அளவையர்களால் அதன் வரைபடம் வரையப்பட்டது. வங்காள மாநிலத்தின் வனத்துறை இலாக்கா நிறுவிய பின்பு 1860 ஆம் ஆண்டில் இந்த காட்டு நிலப்பகுதியின் முறையான நிருவாகம் தொடங்கப்பட்டது.[6]

1869 ஆம் ஆண்டில் சுந்தரவனக்காடு முதன்முதலாக வனத்துறை நீர்வாகத்தின் கீழ் மாற்றுவதற்கான சட்டபூர்வ அதிகாரத்தைப் பெற்றது. 1865 ஆம் ஆண்டின் வனச்சட்டத்தின் (1865 பிரிவு VIII இல்) கீழ், 1875-76 ஆம் ஆண்டில் சுந்தரவனக்காடுகள் ஒரு பாதுகாக்கப்பட்ட வனமாக மாற்றப்பட்டது. 1893-98 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் முதல் மேம்பாட்டுத் திட்டம் எழுதப்பட்டது. வனச்சட்டம் 1865 (1865 பிரிவு VII இல்) இன் கீழ், 1875 ஆம் ஆண்டு இக்காட்டின் பெரும்பாலானப் பகுதி பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அறிவிட்டப்பட்டது, அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே பிற பகுதிகளும் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவ்வளவுகாலம் குடியியல் அதிகாரத்தின் கீழிருந்த இப்பகுதி வனத்துரையின் கட்டுப்பாட்டில் வந்தது. வனப் பிரிவு என்பது அடிப்படை வன நீர்வாகத்தையும், அதிகாரத்தையும் கொண்டது, அது 1879 ஆம் ஆண்டில் குல்னாவை தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

1911 ஆம் ஆண்டில் இந்த நிலப்பகுதி நாட்டிலேயே பயனில்லா, மக்கள் வசிக்க இயலாத பகுதி, அதை விரிவுபடுத்துவது வீணானது எனக்கூறப்பட்டது. பிறகு இது ஹூக்லியிலிருந்து மெக்னா வரை 24 பேரகான்ஸ் அளவு அதாவது 165 மைல்ஸ் அல்லது 266 கி.மீ வரை விரிவுபடுத்தப்பட்டது. நீர் நிறைந்த இடங்களையும் சேர்த்து மொத்தம் 6,526 சதுர மைல்கள் (16,902 km2) அதாவது 165 மைல்கள் (266 km) பரப்பளவாகும். இது நீர் தேக்கமுடைய வனமாகவும், புலிகள் மற்றும் பிற வனவிலங்களுக்கு புகலிடமாகவும் உள்ளது. இதில் சுந்தரி என்னும் மரம் அதிக அளவில் காணப்படுவதால் இப்பெயர் பெற்றிருக்கும் எனக் கருதப்படுகிறது. இதன் உறுதியான மரக்கட்டைகள் வீடுகட்ட, படகு செய்ய மற்றும் பிற மரச்சாமன்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சுந்தரவனக்காடுகள் முழுதும் ஆறுகளும், ஓடைகளும் காணப்படுகின்றன; இவை வங்காளத்திற்கும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கிற்குமிடையே நீர்ப்போக்குவரத்திற்கு உதவுகிறது.

நிலக் கூற்றியல் தொகு

 
செயற்கைக்கோள் காட்சி: காட்டின் தடைசெய்யப்பட்ட பகுதி. சுந்தரவனம் கரும்பச்சை நிறத்திலும் வடக்கே வயல்வெளிகள் இளம்பச்சை நிறத்திலும் நகரங்கள் பழுப்பு நிறத்திலும் ஓடைகள் நீலநிறத்திலுமாக இதன் நிலத்தோற்றம் அமைந்துள்ளது.
 
இந்திய சுந்தரவனக்காட்டின் கோப்பு, நூற்றுக்கு மேலான தடைசெய்யப்பட்ட பகுதி, பாதுகாக்கப்பட்ட மற்றும் தற்காலிக வசிப்பிட மையம், ஜீவன சிறுப்பட்டணம் மேலும் வழி புள்ளி ஆகியவற்றை காட்டுகிறது,

இந்த சதுப்புநிலம்-கங்கையின் கழிமுகப் பகுதில் ஆதிக்கம் செலுத்துகிறது - இந்த சுந்தரவனக்காடுகள் - ஒரு சிக்கலான சுற்றுப்புற அமைப்பை கொண்டது இது உலகத்தில் உள்ள மூன்று மிகப்பெரிய சதுப்புநிலக் காடு்களின் நிலப்பகுதியில் ஒன்றாக உள்ளது. இது இரு அண்டை நாடுகளான, வங்காளதேசம் மற்றும் இந்தியாவிற்கு இடையே பகிர்ந்துள்ளது, இதன் அதிகமான பகுதி(62%) வங்காளதேசம் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. இந்த காட்டின் தெற்குப்பகுதி வங்காள விரிகுடாவை சந்திக்கிறது; இதன் கிழக்குப்பகுதி பலேஸ்வர் நதிக்கரையின் ஓரத்திலும் மற்றும் இ்தன் கூர்மையான வடக்குப்பகுதி மிகுதியான விளைநிலங்களின் இடைமுகத்திலும் உள்ளது. ஆற்றெதிர்புற பகுதியிலுள்ள இயற்கை வடிகால், இது தவிர முக்கிய நதி தடங்கள் அணைத்தும் பரந்த அணை மற்றும் மீள் நிலங்கள் மூலம் தடைசெய்யப்பட்டது. இந்த சுந்தரவனத்தின் உண்மையான பரப்பளவு (200 வருடங்களுக்கு முற்பட்டது) 16,700 km2 ஆகம். தற்போது அது அதன் உண்மையான பரப்பளவில் இருந்து 1/3 ஆக சுருங்கியுள்ளது. இன்று அதன் மொத்த நிலப்பரப்பு 4,143 km2 (திறந்த மணல்திட்டுகளும் அடங்கும்: 42 km2) மற்றும் எஞ்சியுள்ள நீர்ப்பரப்பு 1,874 km2 ஆகும், இதில் ஆறுகள், சிறிய ஓடைகள் மற்றும் கால்வாய்களும் உள்ளடக்கும். உப்பு நீர் மற்றும் நன்னீர் சந்திக்கும் இடத்தில் சுந்தரவனத்தின் ஆறுகள் இருக்கிறது. கங்கையிலிருந்து தோன்றிய நன்னீர் மற்றும் வங்காள விரிகுடாவின் உவர்நீர் இடையே இருப்பதால் அப்பகுதி சீர்மாற்றமடைகிறது (வாஹிட் மற்றும் பலர் ..2002).

ஏற்றவற்ற பிரித்தலுடன் கூடிய ஆற்றெதிர்புற கசடுகளின் இயற்கை படிதலின் மூலம் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே வங்காள விரிகுடாவுடன் உள்ள சுந்தரவனங்கள் தோற்றியது. இதன் நிலவியல் மேற்பரப்புடன் சேர்ந்த எண்ணிக்கையற்ற வடிகால் பாதை, கீழ்நீர் அணைக்கரை, சரிவுகள் மற்றும் மணல்திட்டுகளான கழிமுக அமைப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனுடன் சதுப்பு நில விளிம்பின் மேலே நீர்மட்டம், மணல்திட்டுகள் மேலும் தீவுகளின் வலையமைப்பான வாய்கால்கள், கீழ்நீர் சேய்மைக்கட்டிகள், மூல-கழிமுக களிமண்கள் மற்றும் சேற்றுப்படிவு ஆகியனவும் இருக்கும். சுந்தரவனத்தின் தரைப்பகுதி ௦.9 m முதல் 2.11 m (கடலின் மட்டத்தைவிட அதிகம்) வரை வேறுபடுகிறது.[7]

வன விலங்குகளின் வாழ்க்கையிலும், கடற்கரை பரிணாமத்திலும் உயிரியல் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கிறது, இது பலவகையான வாழ்விடங்களான கடற்கரை, கயவாய், நிலையான மற்றும் நிலையில்லாத சதுப்பு நிலங்கள், அலை தடங்கள், அலை சிறுகுடா, கடலோர மணல் மேடுகள் மற்றும் அணைக்கரைகளை உருவாக்கியது. புதிய நிலப்பகுதியின் உருமாக்கம் சதுப்பு நில வளர்ச்சிக்கு தானாக உதவுகிறது மற்றும் அலைஏற்ற வளர்ச்சி சதுப்பு நில உருவியலில் முக்கிய பங்குவகிக்கிறது. அலைஏற்ற மணல்தளத்திலுள்ள சதுப்புநில விலங்குவளத்தின் நடவடிக்கைகள் நுண்னியஉருவியல் சிறப்புக்கூறுகளை உருவாக்குகிறது. இது கசடுகளை பிடித்து சதுப்பு நில விதைகளின் கீழ் அடுக்கை உருவாக்குகிறது. ஒலியன் மணல் மேட்டின் உருவியல் மற்றும் பரிமாணம் மிகுதியான வறண்டநில மற்றும் உவர்நில தாவரங்களின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. அங்கு படர்கொடிகள், புல்வெளிகள் செட்சு நிலைப்பட்ட மணல் மேடுகள் மற்றும் நெறுக்கமற்ற கசடுகளும் இருந்தது.

சூழ்நிலைப்பிரதேசங்கள் தொகு

சுந்தரவனத்தில் இரண்டு சூழ்நிலைப்பிரதேசங்கள் உள்ளன - "சுந்தரவன நன்னீர் சதுப்புநில காடுகள்" (IM0162) மற்றும் "சுந்தரவன சதுப்புநிலங்கள்" (IM1406).[8]

சுந்தரவன நன்னீர் சதுப்புநில காடுகள் என்பது இந்தியா மற்றும் பங்கலாதேஸ்சின் வெப்ப மண்டலம் ஈரமான அகன்றஇலையுடைய சூழ்நிலைப்பிரதேச காடுகள். இது உப்புத்தன்மையுள்ள சதுப்புநில காடுகள் என வர்ணிக்கப்படுகிறது, இது சுந்தரவன சதுப்புநிலங்களுக்கு பின்னால் இருக்கும் அதிக உப்புத்தன்மை பகுதியை பொய்யாக்குகிறது. நன்னீர் சூழ்நிலைப்பிரதேசத்தில் இருக்கும் நீர் சிறிதளவு உப்புத்தன்மையுடனும் மேலும் மழைக் காலத்தில் முழுவதும் நன்னீராகவும் இருக்கும், கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளில் இருந்து நன்னீர் வரும்போது உப்புநீர் வெளியே தள்ளி, சேற்றுப்படிவுகளை உருவாக்குகிறது. இது அகன்ற கங்கை-பிரம்மபுத்திரா கழிமுகப்பகுதியில் 14,600 சதுர கிலோமீட்டர் (5,600 சதுர மைல்) பரப்பளவுடையது, இது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து மேற்கத்திய வங்காளதேசம் வரை நீண்டிருக்கிறது. இந்த சுந்தரவன நன்னீர் சதுப்புநில காடுகள், ஈரமான இலையுதிர் காடுகளில் இருக்கும் தாழ்ந்த கங்கை தாவரங்களின் மேனிலம் மற்றும் வங்காள விரிகுடா எல்லையிலுள்ள சுந்தரவன சதுப்புநில காடுகளின் உப்புத்தன்மையுள்ள நீர் ஆகியவற்றை பொய்யாக்குகிறது.[9]

கழிமுகப்பகுதியிலுள்ள செழுமையான மண்கள் நூற்றாண்டு காலமாக மக்களுக்கு ஆழ்ந்த பயனளித்து வருகிறது, மேலும் அதன் சூழ்நிலைப்பிரதேசத்திலுள்ள, சில பிறநாடுசூழ் பிரதேசம் தவிர பெரும்பாலான பகுதிகள் தீவிர விவசாய நிலமாக மாற்றப்பட்டது. சுந்தரவன சதுப்புநிலங்களுடன் இணைந்துள்ள எஞ்சிய காடுகள், ஆபத்துக்குள்ளாக்கும் பெங்காலி புலிகளின் (பாந்தெரா டைகிரிஸ் ) முக்கிய வாழ்விடமாக உள்ளது. இந்த ஆபத்தான புலிகளுடன், நீண்ட வாலுடைய மந்தி (சீம்நொபிதிகஸ் பிலீடஸ் ), வழுவழுப்பான-மேனியுடைய நீர்க்கீரி (லுட்ரோகலி பெர்ஸ்பிசில்லேடா ), கிழக்கத்திய சிறிய-நக நீர்க்கீரி (ஆனைக்ஸ் சினீரியா ), மற்றும் இந்திய புனுகு (விவேர்ரா சிபிதா ) போன்ற பல்வேறான அச்சுறுத்தும் பாலூட்டி இனங்களும் உள்ளது. இந்த சூழ்நிலைப்பிரதேசத்தில் மேலும் சிறுத்தை புலிகள் (பாந்தெரா பர்டஸ் ) மற்றும் பலவகையான சிறிய சூரையாடுபவைகளான காட்டுப்பூனை (பீலிஸ் சாயஸ் ), மீன்பிடி பூனைகள் (ப்ரியோனைலுரஸ் விவெர்ரினஸ் ) மற்றும் சிறுத்தை பூனை (ப்ரியோனைலுரஸ் பென்கலென்சிஸ் )ஆகியனவும் உள்ளன.[9]

இந்த சூழ்நிலைப்பிரதேசம் கிட்டத்தட்ட சிதைந்துவிட்டது, பெரிய-அளவில் காடு ஆழ்ந்த நிலம் மற்றும் குடுயிருப்பினால் பாதிக்கப்பட்டவருக்கு, ஆசியாவின் ஒரு பகுதியில் வாழும் மிகுதியான மக்கள் ஆதரவளிக்கின்றனர். உலகின் ஒரு பகுதியில் வாழும் மிகுதியான மக்களின் நூறு ஆண்டுகால இருப்பிடம் மேலும் சுரண்டலின் மூலம் இந்த சூழ்நிலைப்பிரதேச இருப்பிடம் மற்றும் பல்லுயிர்மத்தில் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இரு பாதுகாப்பு பகுதிகள் உள்ளன - நரேந்ரபூர் (110 km2) மற்றும் அடா டன்கா பூர் (20 km2) இந்த சூழ்நிலைப்பிரதேசத்தில் இது 130 km2 சூழ்ந்துள்ளது. சூழ்நிலைப்பிரதேசத்தில் இருப்பிடமற்ற பகுதி மிகவும் பரந்தது, மற்றும் மீதமுள்ள இருப்பிடம் மிகவும் கூறுகளானது, அதனால் சூழ்நிலைப்பிரதேசத்திலுள்ள உண்மையான தாவர பொதிவை உறுதிசெய்வது கடினமானது. சாம்பியன் மற்றும் சீத் (1968) கருத்தின்படி, நன்னீர் சதுப்புநில காடுகள் ஆற்றங்கரை ஓரத்திலுள்ள ஹேரிடீரா மைனர் , சைலோகார்பஸ் மொலுக்சென்சிஸ் , ப்ரூகியூரா காண்சுகடா , சன்னீரடிய அபிடலா , அவிசென்னியா அபிசினாலிஸ் , மற்றும் சன்னீரடிய கசியோலரிஸ் , அதனுடன் பன்டனஸ் டெக்டோரியஸ் , ஹிபிஸ்கஸ் டிலியசியஸ் , மேலும் நிபா ப்ருடிகன்ஸ் ஆகியவற்றின் மூலம் வகைபடுத்தப்பட்டது.

சுந்தரவன சதுப்புநில சூழ்நிலைப்பிரதேசம் உலகின் பெரிய சதுப்புநில சூழ்நிலை அமைப்பாகும், இது 20,400 சதுர கிலோமீட்டர் (7,900 சதுர மயில்) பரப்புடையது. ஹேரிடீரா பொமேஸ் சதுப்புநில தாவரத்தின் ஆதிக்கத்திற்கு பின்பு இந்த பெயர் வந்திருக்கிறது, இதை சந்தரி என்றும் அழைக்கின்றனர், இது இந்தியா மாநிலத்தின் மேற்கு வங்காளத்திற்கும் மற்றும் தெற்கு பங்களாதேஸ்க்கும் குறுக்கேயுள்ள கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மெகானா ஆறுகள் சங்கமித்து உருவான அகன்ற கழிமுகப்பகுதியில் உள்ளது. இது மட்டுமே துறைமுகம் உடைய ஒரே சதுப்புநில சூழ்நிலைப்பிரதேசமாகும், இதன் இந்திய-பசுபிக் பகுதி மிகபெரிய கொன்றுண்ணியான பெங்காலி புலிகள் உள்ளன. மற்ற இருப்பிடங்கள் போல் அல்லாமல், இங்கு புலிகள் சதுப்புநில தீவுகளுக்கிடையே நீந்தி வாழ்கின்றன, இவைகள் அரிதான இரைகளான புள்ளி் மான் (செர்வஸ் அசிஸ் ), குரைக்கும் மான் (முன்டியாகஸ் முன்ட்ஜாக் ), காட்டு பன்றி (சுஸ் ஸ்க்ரொபா ), மற்றும் சிறிய வாலுடைய குரங்குகள் (மசாசா முலாட்டா ) போன்றவற்றை வேட்டையாடுகிறது. சதுப்புநிலங்கள் கடலில் இருந்து நன்னீராகவும் மற்றும் புவிப்புறமாகவும் நிலைமாற்றமடைகிறது. இவை நெருக்கடியான இருப்பிடத்தை எண்ணற்ற உயிரினங்களான மீன்கள் மற்றும் கிரஸ்ட்தேஷியான்ஸ்க்கு வழங்குகிறது இவைகள் வாழ்தல், இனப்பெருக்கம் மற்றும் இளமை பருவத்தை செலவிடுதல் போன்றவை அணைத்திற்கும் சிக்கலான படர்ந்த வேர்கள் பொருத்தமாக இருக்கிறது, இது நெமடோபோஃர்ஸ் எனப்படும், இது காற்றில்லாத ஈரமண்ணில் மேல்நோக்கி வளர்ந்து மரத்திற்கு ஆக்ஜீசனை வழங்குகிறது.[10]

சதுப்புநிலங்கள் மற்ற புவிபுற சூழ்நிலை அமைப்புகளுடன் ஒத்துப்போவதில்லை. இந்த சிதைவுறா காட்டில், அடுக்கற்ற அமைப்பு, அடர்த்தியான மேற்கட்டி உள்ளன மற்றும் இதன் கீழ்வளர்ச்சி விதானமரங்களின் நாற்றுகள் மற்றும் இளஞ்சொடிகளால் உருவானது. சுந்தரவனத்திலுள்ள, சதுப்புநில காடுகள் சுந்தரி மரங்களால் வகைபடுத்தப்பட்டுள்ளது, இந்த இனங்கள் வெட்டுமரமாக பயன்படுகிறது. அவிசென்னியா இனம் ., ஸைலோகார்பஸ் மீகோன்ஜென்சிஸ் , ஸைலோகார்பஸ் க்ரநாடம் , சன்னிராடியா அபிடாலா , ப்ரூக்யூரா ஜிம்நோரிஸா , சிரீயோப்ஸ் டிகான்ரா , ஆஜிசீரஸ் கொமிகுலேடம் , ரைசோபோரா முக்ரொனேடா மற்றும் நைபா ப்ரூடிகன்ஸ் பனை போன்ற இனங்கள் காடுகளை சேர்ப்பதற்கு துணைபுரிகிறது. பல்வேறான கொன்றுண்ணி இந்த சிக்கலான பாதையில் வசிக்கின்றன. இரண்டு முதலை இனங்கள் - க்ரொகொடைலஸ் பொரொசிஸ் மற்றும் க்ரொகொடைலஸ் பலுஸ்ட்ரிஸ் - இங்கு வசிக்கின்றன, அது மட்டுமல்லாமல் நீண்ட மூக்குடைய முதலைகள் கவியாலிஸ் கஞ்ஜிடிகஸ் , மற்றும் நீர் பல்லிகள் வரனஸ் சல்வடார் இது வேட்டையாடவும் குளிர்காய்வும் நீர் மற்றும் நிலத்தை பயன்படுத்துகிறது. சுறாமீன்கள் மற்றும் கங்கை நன்னீர் டால்பின்கள் ப்லடனிஸ்டா கஞ்ஜிடிக நீரஅலையில் வசிக்கிறது. மேலும் பல்வேறான பறவைகள் இரைக்காக மேல்நிலையில் இரைக்காக சுற்றித்திரிகிறது. கோபயாய்டு மீன் நீரிலிருந்து வெளியே வந்து மண்தரைக்கும் மற்றும் மரத்திற்கும் ஏறுகிறது, இது புலனாகாதவையாகவும் சேற்றுத் தாவி ஆட்கொள்பவையாகவும் உள்ளது. மிகுதியான நண்டுகள், தபசி நண்டுகள் மற்றும் கூனிறால் மாசு அகற்றிகள் வேருக்கு இடையில் வாழ்கிறது.[10]

உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பங்களாதேஸ்சும் ஒன்றாகும், இந்த மக்கள் தொகை நெருக்கத்தின் காரணமாக சூழ்நிலைப்பிரதேச சதுப்புநில காடுகளின் ஒரு பகுதி விறகுகாக வெட்டப்படுகிறது மற்றும் இயற்கை வளங்கள் இந்த காட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. செறிவான மற்றும் பெரிய-அளவு சுரண்டல்கள் இருந்தாலும், இன்றும் இந்த சூழ்நிலைப்பிரதேசம் உலகின் மிகப்பெரிய சதுப்புநிலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு ஏழு பாதுகாப்பு பகுதிகள் உள்ளன - சஜ்னாகலி (2,090 km2), கிழக்கு சுந்தர்பான்ஸ் (210 km2), சார் குக்ரி முக்ரி (30 km2), தெற்கு சுந்தர்பான்ஸ் (200 km2), மேற்கு சுந்தர்பான்ஸ் (130 km2), ஹாலிடே ஸ்லாந்து (4 km2), லோதியன் ஸ்லாந்து (20 km2) - இது ஏறக்குறைய 2,700 km2 பரப்புடையது, அல்லது சூழ்நிலைப்பிரதேசத்தில் 15 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் சஜ்னகாலி மட்டும் இடத்தை சார்ந்து வாழும் புலி இனங்களுக்கு ஆதரவளிக்கிறது.[10]

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் தொகு

 
சுந்தரவனக்காட்டில் உள்ள ஈரதரை

அடங்கிய அலை இயக்கம், சிறிய மற்றும் பெரிய-அலை சுழற்சிகள் மற்றும் கடற்கரை பாதையின் நீண்ட கரை நீரோட்ட மாதிரி போன்ற பெருவாரியான காரணிகளின் மூலம் கடற்கரை மேம்பாட்டு செயல்முறைகள் உருவாக்கப்பட்டது. பருவமழையின் போது கரை நீரோட்டத்தில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்கிறது. மேலும் இது புயலினாலும் பாதிக்கப்படுகிறது. மண்அரிப்பு மற்றும் குவிதலால் ஏற்படும் விசைகள் மாறும் நிலைகளை பராமரிக்கிறது. இதை இன்னும் சரியான அளவிடமுடியாது, சதுப்புநில தாவரத்தின் நிலக் கூற்று மாற்றங்கள் தானாகவே முழு அமைப்பில் குறிப்பிடத்தக்க நிலைப்புத்தன்மை வழங்குகிறது. ஒவ்வொறு பருவமழை காலத்திலும் ஏறக்குறைய அணைத்து பெங்கால் கழிமுகப் பகுதிகளும் நீரில் மூழ்கிவிடு்ம். கடலோர பருவமழை மற்றும் புயல் நிகழ்வினாலும் உள்நாட்டில் சிறிய கழிமுகத் தாவரங்கள் படிகிறது. கங்கை கழிமுகத்தில் வாழும் சவாலான மனிதர்கள் இனிவரும் காலங்களில், அமிழ்தலினால் அந்த பகுதியில் எற்படும் அச்சுறுத்தும் கடல் மட்ட உயர்வையும் மற்றும் பருவநிலை மாற்றத்தையும் எதிர்க்கலாம்.

ஆற்றெதிர்புற பகுதியிலுள்ள நன்னீர் வழியை மாற்றியதன் காரணமாக 19ம் நூற்றாண்டுக்கு பிறகு, இந்திய சதுப்புநில ஈரநிலங்களும் சதுப்புநிலங்களுக்கு வரும் நன்னீரும் மிகுதியாக குறைந்தது. வங்காளதேசம் சுந்தரவனத்திற்கு புதிய புவி ஓடு நகா்தல் மற்றும் அதிகமான நன்னீர் அழுத்தின் காரணமாகவும் பெங்கால் ஆற்றுப் பள்ளத்தாக்கு மெதுவான கிழக்கு நோக்கி சரிகிறது. இதன் காரணமாக, இந்திய சுந்தரவனத்தை விட வங்காளதேசம் சுந்தரவனத்தின் உப்புத்தன்மை மிகவும் குறைவாக இருக்கிறது. 1990 ஆம் ஆண்டு ஆய்வில் "இமாலயத்தின் சூழ்நிலை தாழ்வாக்கத்திற்கு சான்று இல்லை அல்லது 'பைங்குடில்' கடல் மட்டம் உயர்த்தி பங்களாதேஸ்சில் கடுமையான வெள்ளப்பெருக்கை தூண்டியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல, யுனெஸ்கோவின் 2007 ஆம் ஆண்டு, "பருவநிலை மாற்றம் மற்றும் உலக பாரம்பரியம் பற்றிய ஆய்வு" அறிக்கையில், காலப் போக்கில் மனித வளர்ச்சியினால் 45-cm உயர்ந்த கடலின் மட்டம் (21ம் நூற்றாண்டின் முடிவில் உள்நாட்டு அரசாங்க குழுவின் பருவநிலை மாற்ற கூற்றின்படி), சுந்தரவனத்தின் மற்ற மனித வளர்ச்சி அழுத்தத்துடன் சேறும் போது, 75% சுந்தரவன சதுப்புநில அழிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது .[11]

தாவரவளம் தொகு

 
சுந்தரி மரம்

சுந்தரவனத்தின் தாவரவளம் மிகுதியான ஹெரிடீரா போமேஸ் , எக்ஸ்கேகரியா அகல்லோசா , செரிஒப்ஸ் டேகான்ரா மற்றும் சொன்னேரடியா அபேடலா போன்றவற்றின் மூலம் வரையருக்கப்படுகிறது. 1903 ஆம் ஆண்டு டேவிட் ப்ரைன் என்பவர் மூலம் 245 சாதிகளும் 334 தாவர இனங்களும் பதிவு செய்யப்பட்டது.[12] வெவ்வேறு சதுப்புநில இனத்திலும், சதுப்புநில தாவரவளத்தின் வகைபாட்டு சீராய்வு நிலைமை பற்றிய ப்ரைனின் அறிக்கையில் இன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.[13] அதுபோல, இந்த மாற்றங்களுடன் சுந்தரவனத்தின் தாவர இயல்பில் மிகச்சிறிய முற்றாய்வு நடக்கின்றன. அதேசமயம் உலகின் மற்ற பகுதியில் உள்ள அதிகமான சதுப்புநிலங்களு ரைசோபோரேசியே, அவிசெனேசியே அல்லது மகனொலியேசியே மூலம் வரையருக்கப்படுகிறது, வங்காளதேசம் சதுப்புநிலத்தில் ஸ்டேர்கிலியாசியே மற்றும் யுபோர்பியாசியே போன்றவை ஆதிக்கம் செலுத்துகிறது.[14]

கழிமுகமற்ற கடலோர சதுப்புநில காடுகள் மற்றும் உயர்நில காடுகளில் இருந்து சுந்தரவனத்திலுள்ள வங்காளதேசம் சதுப்புநில தாவரங்கள் முற்றிலும் மாறுபட்டுகிறது. முன்னது போல் அல்லாமல், ரைசோபோரேசியே சிறிய முக்கியத்துவமுடையது. தாவரத்தின் வேறுபாடுகள் ஆற்றுநீர், வடகிழக்கிலுள்ள குறைந்த உப்புத்தன்மை, மாறுபட்ட வடிகால் மற்றும் தூர் வாருதல் என்ற சொற்களின் மூலம் விளக்கப்படுகிறது. சுந்தரவனங்கள் ஈரமான வெப்ப மண்டல காடுகளாக வகைப்படுத்தப்பட்டு, முழு பல்லடுக்குகளும் வறண்டு, புதிதாக வளர்ச்சியடைந்த முதிர்ந்த கடற்கரை காடுகள் அடங்கிய முதன்மை குடியேற்றம், அடிக்கடி ஆதிக்கம் செலுத்தும் கியோரா (சொன்னீராடியா அபிடாலா ) மற்றும் அலைஏற்ற காடுகள் என்று பறைசாற்றுபட்டது. அகன்ற இயைபுபடுத்துதலில் மாறுபட்ட நீரின் உப்புத்தன்மை, நன்னீர் பாய்ச்சிக்கழுவல், நிலக் கூற்றியல் மற்றும் வனவிலங்கு சரணாலயம் பிரதிநிதியுடன் வரலாற்றுபூர்வமான மூன்று பிரதான தாவர வகைகள் அங்கீகரிக்கப்பட்டது.

சுந்தரி மற்றும் கீவா அந்த பகுதி முழுவதும் இருக்கிறது அதனுடன் துண்டுள் (ஸைலோகார்பஸ் க்ரனாடம் ) மற்றும் கன்கரா விரிந்துள்ளது. புல்லினம் மற்றும் பனைகளுக்கு இடையே, பொரேசியா கோரக்ட்ட , மைரியோஸ்டச்யா விக்டியானா , இம்பிரடா சிலின்டிரிகா , ப்ராக்மிடெஸ் கர்கா , நைபா ப்ருடிகன்ஸ் ஆகியனவும் நன்கு பரவிள்ளன. புதிதாக குவியும் மண் கரைகளில் கீயோரா ஒரு காட்டி இனமாகும் மற்றும் இது வனவிலங்குகளின் முக்கிய இனமாக உள்ளது, குறிப்பாக புள்ளி மான்களுக்கு (அசிஸ் அசிஸ் ). காடு தவிர, படர்ந்த பரப்புகளான உப்புத்தன்மையுள்ள மற்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள், அலைஏற்ற சேற்றுத்தளங்கள், மணல்தளங்கள், மணல்குன்றுகளிலுள்ள தாவரங்கள், மணல்நிலத்திலுள்ள திறந்த புன்னிலம் மற்றும் மாறுபட்ட நிலவாழ் செடி மற்றும் மரங்களுக்கு ஆதரவளிக்கும் உயர்ந்த பரப்புகளும் உள்ளன.

வழிமுறைவருதல் பொதுவாக வேறுபட்ட தாவர சமுதாயத்தின் மூலம் அப்பகுதியின் அடுத்தடுத்த பணிகளால் வரையறுக்கப்பட்டது.[15] குவிந்த மணல்தளத்திலுள்ள வரிசா பிரதிநிதியுடனான வெளி சமுதாயம், அடுத்த சமுதாயத்தின் மூலம் முன்னோடி சமுதாயம் படிப்படியாக மாறிவிட்டது மேலும் தட்ப வெப்ப மண்டலத்தால் இறுதியாக உச்சகட்ட சமுதாயத்தை அடைகிறது.[16] புதிதாக படிந்த அரித்த மண்னின் மூலம் புதிதாக உருவான திறண்ட நிலம் அந்த வழிமுறைவருதலை துவங்கியது என்று ட்ரூப் சுட்டிக்காட்டினார்.[17]

அவிசென்னியா மற்றும் நய்பா தொடர்ந்த சொன்னேரடியா போன்ற முன்னோடி தாவரங்கள், புதிதாக குவிந்த பகுதியில் இருகின்றன. மணல் படிதல் மற்றும் மரங்கள் உருவாக்கிய தோற்றத்தின் காரணமாகவும் நிலம் உயர்ந்தது. எக்ஸ்கேகாரியா என்ற தாமதமான இனங்கள் எங்குமிருக்கும் பரவி இருக்கிறது. குவிதலின் மூலம் நிலத்தின் மட்டம் உயர்கிறது மற்றும் அலையினால் எப்போதாவது நிலம் வெள்ளமாகும், ஹீரிடீரா போம்ஸ் தோன்ற ஆரம்பிக்கும்.

விலங்குவளம் தொகு

 
சுந்தரவனக்காடுகளில் புள்ளிமான்கள்

 
சுந்தரவனத்தில் முதலை

 

சுந்தரவனத்தில் அதிகமான வனவிலங்குகள் உள்ளது. வனவிலங்குகளின் மேலாண்மை அத்துமீறி நுழைதல், காட்டை பிரிக்காமல் அதிலுள்ள சில பகுதிகள் வனவிலங்கு சரணாலயம் அமைத்தலில் இருந்து வனவிலங்கு பாதுகாப்பது தற்பொழுது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் வனவிலங்கு சில தடைகளை சமாளிக்கிறது. சமீப காலங்களில் பங்களாதேஸிலுள்ள வனவிலங்கு குறைத்துள்ளது[14] மற்றும் சுந்தரவனங்கள் இந்த வீழ்ச்சியில் விழவில்லை, சதுப்புநிலக்காடுகள் பல நல்ல வனவிலங்கு இருப்பிடங்கள் மற்றும் அதனுடன் சேர்ந்த விலங்குவளத்தை தக்கவைத்துள்ளது. வனவிலங்கு மேலாண்மை மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சி திட்டமிடுதலுக்கும் இந்த புலி மற்றும் டால்ஃபின் முக்கிய இனமாக உள்ளது. உயர்ந்த வடிவம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பாலூட்டிகள் இரண்டு வற்றுநிலை சுற்றுப்புறத்தில் வாழ்கிறது மேலும் சரணாலயம் மற்றும் மேலாண்மை வனவிலங்கின் பொதுவான நிபந்தனைகளின் வலிமையான சுட்டிக்காட்டியாகும் . 2004 ஆம் ஆண்டில் சுந்தரவனம் ஏறக்குறைய 500 பெங்காலி புலிகளின் வாழ்விடமாக இருந்தது.[3]

 
ஊதா-காதுடைய மீன் கொத்திப் பறவை

சுந்தரவனம் தனித்துவமான சூழ்நிலைத்தொகுப்பையும் மற்றும் வனவிலங்கிற்கு இருப்பிடத்தையும் வழங்குகிறது. ஆற்று ஆமை (படகுர் பஸ்கா ), இந்திய மூடிய-ஓடுடைய கடல்ஆமை (லிஸ்செமிஸ் புன்க்ட்ட ), மயில் போன்று மெல்லிய-ஓடுடைய ஆமை (ட்ரியொனைக்ஸ் ஹுரும் ), மஞ்சள் தலைவன் (வரனஸ் ப்லவேஸ்சென்ஸ் ), நீர் தலைவன் (வரனஸ் சல்வடோர் ), இந்திய மலைப்பாம்பு (பைதொன் மொளுருஸ் ) மற்றும் பொங்காலி புலிகள் (பாந்தெரா டைகிரிஸ் டைகிரிஸ் ) ஆகியன இங்கு வாழும் இனங்களாகும். இது போன்ற சில இனங்கள் குறிப்பாக, வங்காளதேசம் வனவிலங்குகள் (பாதுகாத்தல்), 1973 (P.O.23-1973), என்ற சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது. சில இனங்களான காட்டுப்பன்றி மான் (அசிஸ் பொர்சினஸ் ), நீர் எருமை (புபளுஸ் புபளிஸ் ), சதுப்புநில மான் (செர்வஸ் டுவாசிலி ), ஜவன் காண்டாமிருகம் (ரினொசிரொஸ் சான்டைகஸ் ), ஒற்றை கொம்பு காண்டாமிருகம் (ரினொசிரொஸ் யுனிகோமிஸ் ), மற்றும் முக்கர் முதலை (க்ரொகொடைலஸ் பலுஸ்டிரிஸ் ) ஆகியன சுந்தரவனத்தின் கடைசி சமுதாயத்தின் தொடக்கத்தில் அழிந்துவிட்டது.[18]

வெவ்வேறான உயிரியல் வளங்களான, வணிகத்திற்கு முக்கியமான 120 மீன் இனங்கள், 270 பறவை இனங்கள், 42 பாலூட்டி இனங்கள், 35 ஊர்வன மற்றும் எட்டு இரு வாழ் இனங்கள் ஆகியவற்றிற்கு வங்காளதேசம் சுந்தரவனம் ஆதரவளிப்பதாக சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. பங்களாதேஸில் குறிப்பிட்ட விகிதத்தில் இனங்கள் இருப்பதாக இது வர்ணிக்கிறது (ஏறக்குறைய 30%ல் ஊர்வன, 37%ல் பறவைகள் மற்றும் 34%ல் பாலூட்டிகள்) மேலும் இந்த தேசத்தில் வேறு எங்கும் இல்லாத அதிக எண்ணிக்கையிலான இனங்களும் இங்கு உள்ளன.[19] இரண்டு இரு வாழ்விகள், 14 ஊர்வன, 25 பறவைகள் மற்றும் ஐந்து பாலூட்டிகள் ஆகியன தற்போது அருகிவரும்.[18] சுந்தரவனங்கள் குடிபெயரும் நீர் பறவைகளுக்கு ஒரு முக்கிய குளிர்கால பகுதியாக உள்ளது[20] மேலும் பறவைகளின் வட்டாரவாழ்கை முறை பார்பதற்கும் மற்றும் ஆராய்வதற்கும் இப்பகுதி ஏற்றதாக உள்ளது.[21]

2004 ஆம் ஆண்டில் சுந்தரவனம் ஏறக்குறைய 500 பெங்காலி புலிகளின் இருப்பிடமாக இருந்தது[3]. சுந்தரவனத்தில் புலிகளின் தாக்குதல் தொடர்ச்சியாக நடக்கிறது. ஒரு வருடத்தில் 100 மற்றும் 250க்கு இடைபட்ட எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்படுகின்றனர். எனினும், பாதுகாப்பிற்கு வெவ்வேறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, சுந்தரவனத்தின் இந்திய பகுதியில் 2004 ஆம் ஆண்டு முதல் உயிரிழப்பு பற்றி ஒரு அறிக்கையும் இல்லை[மேற்கோள் தேவை].

பொருளாதாரம் தொகு

 
Fishing boat in the Sundarbans

 
Logging boat in the Sundarbans

 
Ferry boat in the Sundarbans

சுந்தரவனம் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டுள்ளது[22] ஆனால் இதில் மிகுதியானவை நிரந்தரமற்ற மக்களின் இருப்பிடமாக உள்ளது.

சுந்தரவனங்கள் பங்களாதேஸ்சின் தென்மேற்கு பகுதியின் பொருளாதாரத்திலும், தேசிய பொருளாதாரத்திலும் முக்கிய பங்குவகிக்கிறது. இது நாட்டின் காடு உற்பத்திக்கு மிகபெரிய ஆதாரமாக இருக்கிறது. இந்த காடு மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்குகிறது. அதனுடன் மரபுவழி காடுகள் வெட்டுமரம், விறகு, கூழ்மரம் போன்றவற்றையும், மரமற்ற காட்டுப் பொருட்களால் பெரிய அளவில் உற்பத்தியாகும் பொருட்களான வைக்கோல் பொருள், தேன், தேன்மெழுகு, மீன், கிரஸ்தேசியன் மற்றும் மெல்லுடலிகளின் ஆகியனவும் தொடர்ந்து இந்த காட்டிலிருந்து எடுக்கப்படுகிறது. சுந்தரவனத்திலுள்ள அலைஏற்ற தாவர நிலங்கள் முக்கிய வாழ்விடம், ஊட்டச்சத்து அளிப்பவர், நீர் தூய்தாக்கி, புயல் தடுப்பான், கடற்கரை நிலை நிறுத்தி, ஆற்றல் சேமிப்பு பிரிவு மற்றும் அழகுணர்ச்சி ஈர்ப்பாகவும் செயல்படுகிறது.

இந்த காடு மிகபெரிய பாதுகாப்பாகவும் ஆக்க வளமுடைய செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. பங்களாதேஸின் 51% உருவாக்கப்பட்ட ஒதுக்கீடு செய்த பேட்டையாகவும், ஏறக்குறைய 41% முழு காட்டின் வருமானமாகவும் மற்றும் 45% அளவில் நாட்டிலிருந்து வெட்டு மரமாகவும் விறகாகவும் வெளியே செல்கிறது (FAO 1995). சுந்தரவன சுற்றுப்புறத்திலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களை அடிப்படையாக கொண்டு எண்ணற்ற தொழிற்சாலைகள் (எ.கா. இதழ் அச்சிடும் தாள் ஆலை, தீக்குச்சி தொழிற்சாலை, அட்டைப் பலகை, படகு கட்டும், அறைக்கலன் செய்யும்) உள்ளன. வெவ்வேறு வெட்டு மரமற்ற காடு பொருட்கள் மற்றும் பயிரிடுதல் கணிசமான வேலைவாய்ப்பு உண்டாக்க உதவுகிறது மற்றும் வருமானம் குறைந்தது அறை மில்லியன் ஏழை கடலோர மக்களுக்கு வாய்ப்பை உண்டாக்குகிறது. தவிர காட்டின் உற்பத்தி செயல்பாடுகள், பங்களாதேஸில் இருக்கும் கடலோர மக்களின் வாழ்க்கைக்கையை புயலில் இருந்து இயற்கையாக பாதுகாக்கிறது.

அவ்வாறிருந்த போதிலும் மக்களின் வாழ்விடமாகவும், பொருளாதார சுரண்டலும் இந்த காட்டில் இருக்கிறது, 1985 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஓவர்சீஸ் டெவலப்மென் அட்மினிஸ்ட்ரேசன் (ODA) கூறியபடி சுந்தரவனம் ஏறக்குறைய 70% காட்டை தக்கவைத்துள்ளது.

காட்டிலுள்ள இரண்டு முக்கிய வணிகரீதியான சதுப்புநில இனங்களின் சரக்கு விவரப்பட்டியலின் நிலையான அளவை வெளிப்படுத்தியது - சுந்தரி (ஹேரிடீரா போமேஸ் ) மற்றும் கீவா (எக்ஸ்கோகரியா அகல்லோசா ) - 40% மற்றும் 45% முறையே 1959 ஆம் ஆண்டு மற்றும் 1983 ஆம் ஆண்டுக்கு இடையே (போரஸ்டல் 1960 ஆம் ஆண்டு மற்றும் ODA 1985 ஆம் ஆண்டு). அவ்வாறிருந்த போதிலும் மீன் மற்றும் சில முதுகெலும்பில்லாத உயிரினங்களை தவிர மற்ற வனவிலங்குகள் கொல்லுதல் மற்றும் கைப்பற்றுதல் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது, இது பல்லுயிர்மம் அற்ற அமைப்பாக தோன்றுகிறது அல்லது இனங்களை குறைகிறது (குறைந்தது ஆறு பாலூட்டிகள் மற்றும் ஒரு முக்கிய ஊர்வனவும் இந்த நூற்றாண்டில் உள்ளது), "அசலான சதுப்புநிலகாடுகளின் சுழல்நிலையியல் தரங்கள் சிதைகிறது"(IUCN 1994).

வங்கதேசத்தில் உள்ள சரணாலயங்கள் தொகு

சுந்தரவனத்திலுள்ள வங்காளதேசம் பகுதியை மதிப்பிடுகையில் அது ஏறக்குறைய 4,110 km2 பரப்புடையது, இதில் ஏறக்குறைய 1,700 km2 ஆறு, வாய்க்கால், மற்றும் சிற்றோடை என்ற அமைப்புகளின் மூலம் நீர் சூழ்ந்துள்ளது அதன் அகலம் சில மீட்டரில் இருந்து பல கிலோமீட்டர் வரை வேறுபட்டுள்ளது. வலையமைப்புடன் இணைந்துள்ள நீரலைகள் உள்ள காட்டின் எல்லா முனைகளையும் படகின் மூலம் அடையலாம். இந்த காட்டின் கீழ் இரண்டு பிரிவுகளும் நான்கு நீர்வாக அமைப்புகளான சான்டுபை, சரன்கோலா, குல்னா மற்றும் புரிகோஅலினி,சாட்கிரா மேலும் இதில் பதினாறு வன நிலையங்களும் உள்ளன. மேலும் இது ஐய்பத்தி-ஐந்து தனிப்பிரிவாகவும் ஒன்பது தொகுதியாகவும் பிரிக்கப்பட்டது.[1]

1993 ஆம் ஆண்டில் காடுகளை பாதுகாக்க புதிய குல்னா காடுகள் உருவாக்கப்பட்டது மேலும் காப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அந்த பிரிவின் நேரடி நீர்வாக தலைவரை வன பிரிவுகளின் அலுவலர் என்கின்றனர் இவரும் குல்னாவையும் சார்ந்தவர். அவசியமான மேலாண்மையின் செயலாக்கம் மற்றும் நீர்வாக செயல்திறனுக்காக வன பிரிவுகளின் அலுவலரின் கீழ் எண்ணற்ற தொழில் நெறிஞர், துணை தொழில் நெறிஞர், துணை நீர்வாகி மற்றும் துணை லாஜிஸ்ட்டிக் ஆகியோர் உள்ளனர். நிருவாகத்தின் அடிப்படை தொகுதி தனிப்பிரிவால் ஆனது. நான்கு காடு எல்லையில் 55 தனிப்பிரிவுகள் உள்ளன மேலும் முக்கியமான இயற்கை காரணிகளான ஆறுகள், கால்வாய்கள் மற்றும் சிற்றோடைகளில் மூலம் தெளிவாக எல்லை வரையறுக்கப்பட்டன.

வங்காளதேசம் வனவிலங்கு (பாதுகாத்தல்), 1973 (P.O.23-1973) சட்டத்தின் கீழ் 1977 ஆம் ஆண்டில் மூன்று வனவிலங்கு சரணாலயங்கள் நிறுவப்பட்டன. அவைகள்:

  1. கிழக்கு சுந்தரவன வனவிலங்கு சரணாலயம்: 31,227 ha பரப்புக்கு மேலே விரிந்துள்ளது. நன்னீர் மற்றும் சுந்தரி (ஹேரிடீரா பேமேஸ் ) கீவாவுடனும் (எக்ஸ்கோசிரியா அகல்லோசா ) ஆதிக்கம் செலுத்துகிறது மேலும் பஸ்சுர் (சைலோகார்பஸ் மீகோன்ஜென்சிஸ் ) உடன் கான்க்ரா (ப்ரூகுயிரா குன்நோரிசா ) தொடர்ச்சியான வெள்ளப்பகுதியில் உள்ளது. வறண்ட மணனில் சின்கிரா (சைனொமேட்ரா ரமிப்லோரா ), ஈரமாக பகுதியில் அமூர் (அமூரா குகுல்லடா ) மேலும் அதிக உப்புதன்மையுள்ள பகுதியில் கோரன் (சீரியோப்ஸ் டிகேன்ரா ) உள்ளன. நைபா பாம் (நைபா ப்ரூடிகன்ஸ் ) வடிகால் பாதையிலும் பரவியுள்ளது.
  2. தெற்கு சுந்தரவன வனவிலங்கு சரணாலயம்: 36,970 ha பரப்புக்கு மேலே விரிந்துள்ளது. உப்புதன்மை அளவால் ஏற்படும் பெரிய பருவகால மாற்றங்கள் மற்றும் கீவா ஆதிக்கமுள்ள பகுதியில் மிதமான உப்புத்தன்மை அதிக காலமாக நீடிப்பதை தெளிவாக வர்ணிக்கிறது. சுந்தரியின் பயனற்ற மீள்பிறப்புக்கொடுத்தல் செயற்கையாக திறந்த விதான சூழ்நிலையில், இது சுந்தரி இனத்துடன் இணைகிறது. மேலும் இது அடர்த்தியான விதானமுடைய கோரன் மற்றும் சிலநேரங்களில் பஸ்சுருடனும் தொடர்ச்சியாக சேர்கிறது.
  3. மேற்கு சுந்தரவன வனவிலங்கு சரணாலயம்: 71,502 ha பரப்புக்கு மேலே விரிந்துள்ளது. இதில் அடர்த்தியற்ற கீவா,வறண்ட தரையிலுள்ள அடர்த்தியான கோரன் மேலும் ஆற்றங்கரை மற்றும் வெள்ளக்கரையிலுள்ள தொடராத திட்டுகளான ஹன்டல் பாம் போனிக்ஸ் பலுடோசா போன்றவற்றிற்கு ஆதரவளிக்கிறது.

பரவலப் பண்பாடு தொகு

 
Idol of Bonbibi

சுந்தரவனம் எண்ணற்ற வங்காளி நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனங்களின் மூலம் புகழ்பெற்றது, சுந்தரவனம் (போன்பிபி மற்றும் தக்சின் ராய் போல்) மற்றும் கங்கை கழிமுகப் பகுதியில் (மனசா மற்றும் சான் சடாகர் போல்) இன மாவீரர்கள், கடவுள்கள், தேவதைகளை வழிபடுவார்கள். வங்காளி நாட்டுப்புற காவியமான மனசமங்களில் கதாநாயகி பெஹுலாஸ் அவளது கணவனான லக்ஹிண்டரை தேடி கொண்டுவரும் போது நெடிதோபணி அதனுடன் சில நடைபாதையை சுந்தரவனத்தில் நிறுவியது பற்றி குறிப்பிட்டுள்ளது.

எமிலியோ சல்கரி, மூலம் இந்த பகுதி பலவகையான நாவல்களுக்கு காட்சி அமைப்பை வழங்குகிறது (எ.கா. தி மிஸ்டரி ஆப் தி ப்ளாக் ஜன்கிள் ). சுன்டர்பானே அர்ஜன் சர்தார் , என்ற நாவலை ஷிப்ஷங்கர் மித்ராவும், மற்றும் பத்மா நடிர் மஜ்ஹி, என்ற நாவலை மணிக் பண்டோபத்யேவும் எழுதினர் இது கிராமத்தின் குளிர்நடுக்க வாழ்க்கை மற்றும் சுந்தரவனத்திலுள்ள மீனவர்களை தழுவியது. கௌதம் ஹோஸ் என்பவரால் பத்மா நடிர் மஜ்ஹி படமாகவும் உருவானது. சல்மான் ருஸிடீ'ஸின் பூகர் பரிசு பெற்ற நாவலான, மிட்நைட்'ஸ் சில்ரென் சுந்தரவனத்தை பற்றியது. அதிகமான காவிய பரிசு பெற்ற மக்கள் வளர்ச்சி நூல் அறிஞரான அமிதாவ் ஹோஷ்'ஸின் 2004 ஆம் ஆண்டு நாவலான, தி ஹங்க்ரி டைடு , இதுவும் சுந்தரவனத்தை பற்றியது.

இந்த சுந்தரவனக்காடுகள் பற்றி எண்ணற்ற புனைவிலி புத்தகத்தில் குறிப்புகள் உள்ளன, இளைய பார்வையாளர்களுக்காக சி மொண்டேகோமேரி எழுதிய மேன்-ஈடிங் டைகர்ஸ் ஆப் சுந்தர்பன்ஸ் என்ற நாவல் டொரோத்தி கேன்பில்டு பிஷேர் சில்ரென்'ஸ் புக் என்ற பரிசுக்கு தேர்வுபெற்றது. எமிலி எடேன் அப் தி கன்ட்ரி என்பதில் தன்னுடைய சுந்தரவன பயணத்தை பற்றி விவாதித்துள்ளார்.[23] சுந்தரவனத்தை பற்றி எண்ணற்ற ஆவணப்படங்கள் உருவாகியுள்ளது, பெங்கால் புலிகளை பற்றி 2003 ஆம் ஆண்டில் IMAX உருவாக்கிய ஷிநிங் ப்ரைட் அதில் அடங்கும். பிபிசி TV தொடரில் கங்கை ஆவணத்தில் நேரடியாக சுந்தரவனத்திலுள்ள கிராம மக்கள், குறிப்பிட்டு சொன்னால் தேனை சேகரிப்பவர்களை காட்டியுள்ளனர்.

பாரம்பரிய சின்னம் தொகு

1987ஆம் ஆண்டு சுந்தர வன காடுகள் உலக பாரமபரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.1985ஆம் ஆண்டு இந்த பூங்கா உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.[24]

மேலும் பார்க்க தொகு

அடிக்குறிப்புகள் மற்றும் குறிப்புதவிகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Pasha, Mostafa Kamal; Siddiqui, Neaz Ahmad (2003), "Sundarbans", in Islam, Sirajul (ed.), Banglapedia: national encyclopedia of Bangladesh, Dhaka: Asiatic Society of Bangladesh, ISBN 9843205766, archived from the original on 2008-10-16, பார்க்கப்பட்ட நாள் 2010-03-11
  2. "சுந்தரவனக்காட்டிலுள்ள புலிகளை பற்றிய திட்டம்". Archived from the original on 2008-05-20. பார்க்கப்பட்ட நாள் 2010-03-11.
  3. 3.0 3.1 3.2 "www.bforest.gov.bd/highlights.php". Archived from the original on 2004-12-07. பார்க்கப்பட்ட நாள் 2010-03-11.
  4. "Sunderban Mangroves". Geological Survey of India. Archived from the original on 2009-12-10. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
  5. "Sunderbans" (PDF). Protected areas and World Heritage sites. United Nations Environmental Programme. Archived from the original (PDF) on 2010-02-02. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
  6. Laskar Muqsudur, Rahman. "The Sundarbans: A Unique Wilderness of the World" (PDF). Wilderness.net. Archived from the original (PDF) on 2010-07-10. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
  7. கடிபி, எம்.என்.ஏ. மற்றும் எம்.ஜி. ஹபிப், 1987. கடலோர பகுதியில் உள்ள சுந்தரவனம் மற்றும் காடுகளின் ஆதார வளர்ச்சி மற்றும் நடத்துதல் பகுதி II, பிஆர்ஏசி பிரின்டர், தகா, பங்களாதேஸ். 107 ப.
  8. சூழ்நிலைப்பிரதேசம்: இந்திய-மலயன் பரணிடப்பட்டது 2009-06-28 at the வந்தவழி இயந்திரம், உலக வனவிலங்கு நிதி
  9. 9.0 9.1 சுந்தரவன நன்னீர் சதுப்புநில காடுகள் (IM0162), உலக வனவிலங்கு நிதி
  10. 10.0 10.1 10.2 சுந்தரவன சதுப்புநிலங்கள் (IM1406), உலக வனவிலங்கு நிதி
  11. பருவநிலை மாற்றத்தின் கவனிப்பு ஆய்வு, யுனெஸ்கோ, 2007
  12. ப்ரைன், டி. 1903. சுந்தரவனத்திலுள்ள வளம். இந்தியாவின் அறிவியல் நோக்கின் பதிவு. 114: 231-272.
  13. கட்டுன், B.M.R. மற்றும் M.K. அலாம், 1987. பங்களாதேசில் உள்ள அவிசென்னியா L. என்ற இனத்தின் வருமான ஆய்வு. பங்களாதேஸ் J. பாட். 16(1): 39-44.
  14. 14.0 14.1 Mangroves of the Sundarbans. 2. Bangkok: International Union for Conservation of Nature and Natural Resources. 1994. இணையக் கணினி நூலக மையம்:773534471. 
  15. வீவர், எப்.ஈ. மற்றும் எப்.ஈ. கிலிமென்ட்ஸ், 1938. தாவரங்களின் சூழ்நிலையியல். எம்சிக்ரேவ்-ஹில் புக் கம்பெனி, இங்க். நியூ யார்க். 601 ப.
  16. வாட்சன், ஜே.ஜி. 1928. மயாலன் பெனின்சுலாவிலுள்ள சதுப்புநில சேற்றுநிலங்கள் மயாலன் காடுகளின் பதிவுகள் 6:1-275.
  17. ட்ரோப், ஆர்.எஸ். 1921. இந்திய மரங்களின் சில்விகல்சர். க்லெரன்டன் ப்ரஸ், ஆக்ஸ்ஃப்ட். 1195 ப.
  18. 18.0 18.1 சார்கீர், எஸ்.யூ. 1993. வனவாழ்க்கையின் சூழ்நிலையியல் யூஎன்டீபி/எப்ஏஓ/பிஜிடீ/85/011. ப்ஈல்டு டாக்குமென் என். காடு மற்றும் சுற்றுப்புற அறிவியலின் 50 மன்றம் சிட்டகாங், பங்களாதேஸ். 251 ப.
  19. ஸ்காட், D.A. 1991. ஆசியா மற்றும் மையத்திலுள்ள கிழக்கு ஈரநிலங்கள். M. பின்லாய்சன் மற்றும் M. மோசர் (ஈடிஎஸ்.). ஆக்ஸ்ஃப்இட்: 151-178.
  20. ஹூக்லீர், சி., பாலசந்திரன், எஸ்., புன்டிங், ஜி.சி., ப்ராங், எம்., காசிவாகி, எம்., லாப்பொ, இ.ஜி., மகேஸ்வரன், ஜி., சர்மா, ஏ., சைரோசிகோவ்ஸ்கி, இ.இ. & வெப், கே. 2005. இந்திய சுந்தரவனக்காடுகள்: சிபீரியன் வாடர்ஸ் முக்கிய குளிர்க்காலம் பகுதி வாடர் ஸ்டேடி குரூப் புல். 108: 42–46. (பிடிஎப்). பரணிடப்பட்டது 2008-12-19 at the வந்தவழி இயந்திரம்
  21. ஹபிப், எம்.ஜி. 1999. மேசேஜ் இன்: நுருஸ்ஸாமன், எம்., ஐ.யூ. அகமது மற்றும் கச். பன்க் (இடிஎஸ்.). உலக பாரம்பரிய சுந்தரவனக்காட்டின் பகுதி: அறிமுகம், வன இலாகா, சுற்றுப்புறம் மற்றும் காடுகளின் மந்திரி, பங்களாதேஸ்சின் குடியரசு மக்களின் அரசாங்கம். 12 ப.
  22. சுபிர் பவ்மிக், பீர்ஸ் ரைஸ் பார் சின்கிங் சுந்தரவனகாடுகள், பிபிசி செய்தி, 2003-09-15
  23. கூகுல் புக் உள்ள அப் தி கன்ட்ரி
  24. பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா

மூலாதாரங்கள் தொகு

  இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sundarbans
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரவனக்காடுகள்&oldid=3759419" இலிருந்து மீள்விக்கப்பட்டது