சேகண்டி அல்லது சேமக்கலம், மேலும் இதனைச் சவுண்டி , செகண்டை , செயகண்டி , செயகண்டிகை , என்றும் அழைக்கப்படுகிறது. சேமக்கலத்தை வெண்கலத்தால் வட்ட வடிவமாக உருவாக்கப்படுகிறது. வெண் சங்கொலியுடன், சேகண்டி அல்லது சேமக்கலத்தை, கனத்த தேக்கு குச்சியால் அடித்து ஒலி எழுப்பப்படுகிறது.

திருச்சங்கு திருமாலுக்கு உரியது. சேமக்கலம் சிவனுக்கு உரியது. சிவனும், திருமாலும் ஒன்றே என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்கும் பொருட்டு சேமக்கலத்தை, சங்கொலியுடன் இணைத்து இசைக்கப்படுகின்றன.[1]

சிவன் கோயில்களில் சுவாமி புறப்பாட்டின்போது சேமக்கலம் எனும் சேகண்டி இசை ஒலி எழுப்பப்படுகிறது. பிற்காலத்தில் மனித இறப்புகளில் சேகண்டியுடன் சங்கு ஒலிப்பது நடைமுறைக்கு வந்துள்ளது. இறப்புகளில் வாசிக்கப்படும் பித்தளையால் ஆன சேமக்கலத்தை சேகண்டி அல்லது சவுண்டி அல்லது சேகண்டி என்பர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் திருமண விழாவின் போது சேமக்கல ஒலியுடன், சங்கொலி மற்றும் குலவை ஒலி பெண்களால் எழுப்பப்படுகிறது.

பெயர்க் காரணம் தொகு

சோமன் எனும் சந்திரன் போன்ற வட்ட வடிவ அமைப்பு கொண்ட சேகண்டிக்கு சோமன் கலம் . என்ற பெயராயிற்று. பின்னர் இப்பெயர் மறுவி சேமக்கலம், சேகண்டி என்றாயிற்று.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "கஞ்சக் கருவிகள்". Archived from the original on 2016-05-09. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகண்டி&oldid=3555923" இலிருந்து மீள்விக்கப்பட்டது