நடபைரவி கருநாடக இசையின் 20 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 ஆவது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி தாட் ஆகும்.

இலக்கணம் தொகு

 
நடபைரவி் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி221 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம12 ரி2
  • வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 ஆவது இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகின்றன.

சிறப்பு அம்சங்கள் தொகு

உருப்படிகள்[1] தொகு

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி பருலசேவா இராமனாதபுரம் சீனிவாச ஐயங்கார் ரூபகம்
கிருதி ஸ்ரீ வள்ளி தேவசேனாபதே பாபநாசம் சிவன் ஆதி
கிருதி எண்ணுவதெல்லாம் பெரியசாமி தூரன் ஆதி
கிருதி அம்போருகபாதமே கோடீஸ்வர ஐயர் ரூபகம்
கிருதி ஐயனே நடனமாடிய முத்துத் தாண்டவர் மிஸ்ர ஜம்பை
கிருதி நீ பாதமுலனு முத்தையா பாகவதர் ஆதி
பதம் கையுடன் கூட்டிவாடி மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி ஆதி

ஜன்ய இராகங்கள் தொகு

நடபைரவியின் ஜன்ய இராகங்கள் இவை.

ஜன்ய ராகங்கள் குறிப்புகள்
அக்னி கோபம் [2]
பைரவி
ஆனந்தபைரவி
ஹிந்தோளவசந்தம்
ஜிங்களா
சுத்ததெசி
அமிர்தவாஹினி
மார்க்கஹிந்தோளம்
மாஞ்சி
இந்தோளம்
பூர்ணஷட்ஜம்
சாரமதி
ஜயந்தசிறீ
ரதிபதிப்பிரியா
பாகீரதி
கோமேதகப்பிரியா
நவரசச்சந்திரிகா
சுத்தசாளவி
சுத்தரஜ்ஜணி
புவனகாந்தாரி
திவ்யகாந்தாரி
கமலாதரங்கிணி
கோபிகாவசந்தம்

திரையிசைப் பாடல்கள் தொகு

நடபைரவி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

  • அம்மாவும் நீயே அப்பாவும் நீயே :- களத்தூர் கண்ணம்மா
  • திருக்கோயில் வாசலில்  :- முத்து
  • வசீகரா :- மின்னலே

மேற்கோள்கள் தொகு

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
  2. ஏ.எஸ்.பஞ்சாபகேச அய்யர் (2012) (in தமிழ்). சென்னை-28: கானாம்ருத பிரசுரம். பக். 157-164. கர்னாடக ஸங்கீத சாஸ்திரம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடபைரவி&oldid=3830339" இலிருந்து மீள்விக்கப்பட்டது