பாக்கித்தானில் குடும்ப வன்முறை

பாக்கித்தானில் குடும்ப வன்முறை (Domestic violence in Pakistan) என்பது ஒரு சமூக மற்றும் பொது சுகாதார பிரச்சனையாகும். மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2009இல் மேற்கொண்ட ஆய்வின்படி , பாக்கித்ஸ்தானிய பெண்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் ஒருவித துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையால் ஆண்டுக்கு 5000 பெண்கள் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் ஊனமுற்றவர்களாக ஆயினர். நெருங்கிய கூட்டாளிகளிடமிருந்து உடல்ரீதியான தாக்குதல்கள், உளவியல் துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல் போன்ற தாக்குதல்களை அனுபவித்ததாக பெண்கள் தெரிவித்துள்ளனர். [1] 1998இல், வெளியான அறிக்கையின்படி 1974இல் பதிவான கொலைகளில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டனர். தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை நடத்திய ஒரு கணக்கெடுப்பு , ஆப்கானித்தான், காங்கோ மக்களாட்சிக் குடியரசிற்குப் பிறகு, பெண்களுக்கு உலகின் மூன்றாவது ஆபத்தான நாடாக பாக்கித்தானை அறிவித்துள்ளது. [2] வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு சட்ட உதவி கிடிப்பதில்லை. [3] சட்ட அமலாக்க அதிகாரிகள் குடும்ப வன்முறையை ஒரு குற்றமாக கருதுவதில்லை. மேலும், பொதுவாக அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய மறுக்கிறார்கள். [3] நாட்டில் உள்ள மிகச் சில பெண்கள் தங்குமிடங்களைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் வன்முறைச் சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்கும் திறன் குறைவாகவே உள்ளது.

கண்ணோட்டம் தொகு

வரையறை தொகு

உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டபடி, குடும்ப வன்முறை என்பது தற்போதைய அல்லது முன்னாள் ஆண் நெருங்கிய கூட்டாளியால் முதன்மையாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உட்பட உடலாலும், உளவியலாலும் ஏற்படுத்தும் துயரங்களை உள்ளடக்கியது. [4]

2012 -ல் பாக்கித்தானிய பாராளுமன்றம் இயற்றிய முக்கிய குடும்ப வன்முறை (தடுப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், குடும்ப வன்முறையை வரையறுக்கிறது. "பெண்கள், குழந்தைகள் அல்லது பிற பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு எதிராக ஒரு பாலின அடிப்படையிலான மற்றும் பிற உடல் அல்லது உளவியல் துஷ்பிரயோகம் ..." [5] வரையறை மேலும் தாக்குதல், தாக்குதல் முயற்சி, குற்றவியல் சக்தி, குற்றவியல் மிரட்டல், உணர்ச்சி, உளவியல், வாய்மொழி துன்புறுத்தல், உடல்ரீதியாக துன்புறுத்தல் பின்தொடர்தல், பாலியல் துஷ்பிரயோகம், பொருளாதார துன்புறுத்தல் ஆகியவை குடும்ப வன்முறையின் கீழ் வரும் சில செயல்களாகும் . [5]

உடல் வன்முறை தொகு

பாக்கித்தானில் உள்ள சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் கடத்தப்பட்டு, இஸ்லாத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்பட்டு, முஸ்லிம் ஆண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டு, அவர்களால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். [6]

வரதட்சணை மரணங்கள் தொகு

வரதட்சணை மரணங்கள் பாக்கித்தானில் நடக்கும் குடும்ப வன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையால் விவரிக்கப்பட்டுள்ளன. பெண்களின் வரதட்சணை போதுமானதாக இல்லை என்று கருதினால் அவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். வரதட்சணை தொடர்பான வன்முறைகளில், "அடுப்பு இறப்பு" என்றும் அழைக்கப்படும் மணமகள் எரிப்பு பரவலாகப் பதிவாகியுள்ளது. 1988இல் ஒரு கணக்கெடுப்பு 800 பெண்கள் இந்த வழியில் கொல்லப்பட்டதாகக் காட்டியது. 1989இல் அந்த எண்ணிக்கை 1,100 ஆக உயர்ந்தது. 1990இல் அது 1,800 மதிப்பிடப்பட்டது. முற்போக்கு மகளிர் சங்கத்தின் கூற்றுப்படி, இதுபோன்ற தாக்குதல்கள் வளர்ந்து வரும் பிரச்சனையாகவும், 1994இல் சர்வதேச மகளிர் தினத்தன்று, இந்த பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணையும் என்று அறிவித்தது. ஆறு மாத காலப்பகுதியில் (1997) இலாகூரில் செய்தித்தாள்கள் சராசரியாக ஒரு மாதத்தில் 15 தாக்குதல்களைப் பற்றி தெரிவித்தன. பெண்கள் eNews எட்டு வருட காலப்பகுதியில் இஸ்லாமாபாத்தின் சுற்றுப்புறங்களில் 4,000 பெண்கள் இந்த வழியில் தாக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது வரம்பு 18 முதல் 35 வரை என்றும், இறக்கும் போது 30 சதவிகிதம் கர்ப்பமாக இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. பாக்கித்தானின் மனித உரிமைகள் ஆணையம், குடும்ப உறுப்பினர்கள் அல்லது கணவர்களால் தினமும் சுமார் நான்கு பெண்கள் இவ்வாறு கொல்லப்படுவதாக தெரிவித்தது. [7] இஸ்லாமாபாத்தில் முற்போக்கு மகளிர் சங்கத்தை நடத்தும் ஷாஹனாஸ் புகாரி, இதுபோன்ற தாக்குதல்களைப் பற்றி கூறியதாவது: "பாக்கித்தானில் இளம் இல்லத்தரசிகளுக்கு மட்டும் எரியும் அடுப்புகள் உள்ளன, குறிப்பாக பாலுப்புறுப்புகளை விரும்புகின்றன, அல்லது இந்த நிகழ்வுகள் நிகழும் அதிர்வெண்ணைப் பார்க்கின்றன. இந்த பெண்கள் வேண்டுமென்றே கொலைக்கு ஆளாகும் ஒரு கொடூரமான முறை. "

அமிலத் தாக்குதல்கள் தொகு

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Ajmal, Umer Bin (25 April 2012). "Domestic violence". http://dawn.com/2012/04/25/domestic-violence-2/. 
  2. Anderson, Lisa (15 June 2011). "Trustlaw Poll: Afghanistan is most dangerous country for women". Thomson Reuters Foundation. Archived from the original on 31 July 2012. பார்க்கப்பட்ட நாள் 31 July 2012.
  3. 3.0 3.1 Zakar, Rubeena; Zakar, Muhammad; Mikolajczyk, Rafael; Kraemer, Alexander (2013). "Spousal Violence Against Women and Its Association With Women's Mental Health in Pakistan". Health Care for Women International 34 (9): 795–813. doi:10.1080/07399332.2013.794462. பப்மெட்:23790086. https://archive.org/details/sim_health-care-for-women-international_2013-09_34_9/page/795. 
  4. WHO (2005).WHO Multi-Country Study on Women’s Health and Domestic Violence against Women. Geneva: World Health Organization
  5. 5.0 5.1 "Domestic Violence Prevention and Protection Act" (PDF). 2012.
  6. "Pak Hindu bride abducted, converted to Islam, forcibly married to Muslim man". Bennett, Coleman and Co. Ltd. 27 January 2020. பார்க்கப்பட்ட நாள் 28 January 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Kapoor, Sushma (June 2000). "Domestic Violence Against Women and Girls". Innocenti Digest: 7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1028-3528. http://www.unicef-irc.org/publications/pdf/digest6e.pdf. 

வெளி இணைப்புகள் தொகு