லலிதா
இந்திய நடிகை
லலிதா,திருவிதாங்கூர் சகோதரிகளில் மூத்தவர், (பத்மினி,ராகினி ஏனைய சகோதரிகள்).[2] இவர் தமிழ்,மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
லலிதா | |
---|---|
பிறப்பு | லலிதாம்பிகா (லலிதா) திசம்பர் 16, 1930 [1] திருவனந்தபுரம், திருவிதாங்கூர் |
இறப்பு | நவம்பர் 23, 1983 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 52)
சமயம் | இந்து |
பெற்றோர் | தங்கப்பன் நாயர், சரஸ்வதி |
வாழ்க்கைத் துணை | சிவசங்கரன் நாயர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதிருவனந்தபுரத்திலுள்ள பூஜாப்புராவில் (அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம்) அமைந்துள்ள தரவாடு மலாயா குடிலில், 1930ஆம் ஆண்டு தங்கப்பன் நாயர், சரஸ்வதி தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பரதக்கலையை குரு.கோபிநாத், மற்றும் குரு.மகாலிங்கம் பிள்ளையிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார்.
திரைத்துறை
தொகுதனது 18ஆம் அகவையில் 1948ஆம் ஆண்டு "ஆதித்தன் கனவு" [3] என்ற தமிழ் திரைப்படம் மூலம் திரை உலகிற்கு வந்தார்.
இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஆதித்தன் கனவு (1948)
- ஏழை படும் பாடு (1950)
- மருமகள் (1953)
- அம்மா(1952)
- அன்பு (1953)
- தூக்குத்தூக்கி (1954)
- கனவு (1954)
- கணவனே கண் கண்ட தெய்வம்(1955)
- காவேரி (1955)
- மேனகா (1955)
- உலகம் பலவிதம் (1955)
- வள்ளியின் செல்வன் (1955)
- ராஜ ராஜன் (1957)
இவர் நடித்த மலையாளத் திரைப்படங்கள்
- வெள்ளி நட்சத்திரம் (1949)
- அம்மா (1952)
- காஞ்சனா (1952)
- பொன்கதிர் (1953)
- மின்னல் படையாளி (1959)
- அத்யாபிகா (1968)
இறப்பு
தொகு1983ஆம் ஆண்டு காலமானார்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "பிறந்த நாள் குறிப்பு". பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்பிரல் 2014.
- ↑ பத்மினியின் சகோதரிகள்Rangarajan, Malathi (29 September 2006). "Beauty, charm, charisma". The Hindu இம் மூலத்தில் இருந்து 28 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080228080232/http://www.hindu.com/fr/2006/09/29/stories/2006092900720100.htm. பார்த்த நாள்: 9 June 2011.
- ↑ "பஸ்மசுரன்-மோகினி - நாட்டிய நாடகக் காட்சி". Archived from the original on 2014-05-25. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்பிரல் 2014.