0கள்
0கள் (0s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் முதலாம் பத்தாண்டைக் குறிக்கும். எனினும் இப்பத்தாண்டு காலத்தின் ஆண்டுகள் எப்போதும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஜூலியன் நாட்காட்டியிலோ கிரெகோரியன் நாட்காட்டியிலோ சுழியம் ஆண்டு (0) கிடையாது. எனவே கிபி 1 இற்கு முன்னர் கிமு 1 ஆண்டு இருந்தது.
இக்கட்டுரை கிபி 1–9 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் முதல் 9 ஆண்டுகளைப் பற்றியது.
0களில் நடந்த நிகழ்வுகள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
தொகு
1தொகு
இடம் வாரியாகதொகு
ரோமப் பேரரசுதொகு
- அகஸ்டசின் பணிப்பின் பேரில் டிபேரியசு செருமானியாவில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்கினான் (1–5).
- கையசு சீசர், லூசியசு பவுலசு ஆகியோர் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
- உரோமில் பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது[1].
ஆசியாதொகு
- சீனாவில் ஹான் அரசமரபின் யுவான்சி காலம் ஆரம்பம்.
- பிங் பேரரசனானான்.
ஆப்பிரிக்காதொகு
- இன்றைய எத்தியோப்பியா, எரித்திரியாவை மையப்படுத்திய ஆக்சும் இராச்சியம் உருவானது (அண்ணளவான காலம்).
அமெரிக்காதொகு
- மெசோஅமெரிக்கா பகுதியில் தியோட்டிஹுவாக்கன் பண்பாடு ஆரம்பம்.
சமயம்தொகு
- இயேசு பிறப்பு (அனோ டொமினி முறையை அறிமுகப்படுத்திய டயோனீசியசு எக்சிகூஸ் என்பவரின் படி[2][3].) ஆனாலும், டயோனீசியசு கணக்கிட்ட முறையில் தவறு ஏற்பட்டதால், இயேசுவின் பிறப்பை கிமு 1 ஆகக் குறித்தார் எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்[2][3].
- சீனாவில் பௌத்தம் அறிமுகமானது.
2தொகு
இடம் வாரியாகதொகு
ஆசியாதொகு
- சீனாவில் சென்றா ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 60 மில்லியன் (59,594,978 மக்கள்)[4]
- சீன மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வியட்நாமில் ஒரு மில்லியன் மக்கள் வாந்தனர்.
3தொகு
இடம் வாரியாகதொகு
ரோமப் பேரரசுதொகு
- ஆகுஸ்டசின் ஆட்சி 10 ஆண்டு காலத்துக்கு நீடிக்கப்பட்டது.
- ஆகுஸ்டஸ் தனது பேரன் கையசு சீசரை தனது நேரடி வாரிசாக்கும் நோக்கில் தத்தெடுத்தான். கையசு கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதரராக அனுப்பப்பட்டான்.
- லூசியசு லாமியா, மார்க்கஸ் மெசாலினசு ஆகியோர் ரோமப்பேரரசின் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஐரோப்பாதொகு
- மார்க்கொமானி அரசன் மார்பொட் என்பவனின் கீழ் ஐந்து செருமனிய இனங்கள் ஒன்றுபட்டன. இவ்விணைப்பு ரோமப் பேரரசுக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. இவ்வினங்கள் பின்னர் சிலேசியா, சாக்சொனி ஆக உருவெடுத்தன.
4தொகு
இடம் வாரியாகதொகு
ரோமப் பேரரசுதொகு
- பேரரசன் ஆகுஸ்டசு டிபேரியசு என்பவனை ரோமுக்கு அழைத்து தனது வாரிசாகவும், தனக்கு அடுத்த பேரரசன் ஆகவும் அறிவித்தான். அதே நேரம், அகிரிபா பஸ்துமசு என்பவனையும் தனது வாரிசாக அறிவித்தான்.
- டிபேரியசு தனது வார்சாக செருமானிக்கசு என்பவனைத் தனது வாரிசாக அறிவித்தான்.
- ரோமப் பேரரசுக்கும் செருமனிய பழங்குடி செருஸ்க்கி என்பவர்களுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
மத்திய கிழக்குதொகு
பார்த்தியா நிலப்பகுதியின் (இன்றைய ஈரானில்) அரசன் பிராத்தசிசு மற்றும் அரசி மூசா ஆகியோர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
அறிவியல்தொகு
- டமாஸ்கசின் நிக்கலாசு 15 பாகம் கொண்ட உலக வரலாற்றை எழுதினார்.
5தொகு
இடம் வாரியாகதொகு
ரோமப் பேரரசுதொகு
- குனொபெலினசை பிரித்தானியாவின் அரசனாக ரோமப் பேரரசு அங்கீகரித்தது.
- கிம்பிரி, சாரிடெசு ஆகிய செருமனியப் பழங்குடிகள் தங்கள் தூதர்களை ரோமுக்கு அனுப்பியது.
- ரோம ஆட்சியாளர்களாக சின்னா மாக்னசு, லூசியசு மெசாலா வெலெசசு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
- ரோமப் பேரரசன் டிபேரியசு செருமானிய உட்பகுதியை (இன்றைய லக்சம்பர்க், தெற்கு நெதர்லாந்து, பெல்ஜியத்தின் ஒரு பகுதி) கைப்பற்றினான்.
கல்வெட்டுகள்தொகு
- திருநாதர் குன்றுக் கல்வெட்டு - தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டு
6தொகு
இடம் வாரியாகதொகு
ரோமப் பேரரசுதொகு
- படைகளில் போர் புரிந்து இளைப்பாறியவர்களுக்காக நிதியம் ஒன்றை ரோமப் பேரரசன் அகஸ்ட்டஸ் நிறுவினான்.
- ரோமில் இடம்பெற்ற உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அகஸ்ட்டசு மன்னன் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சோளத்தின் அளவை இரண்டு மடங்காக்கினான்.
- அகஸ்ட்டசு தனது வளர்ப்பு மகனான அக்ரிப்பா பொஸ்டுமசு என்பவனை பிளனேசியா தீவுக்கு நாடு கடத்தினான்.
- மார்க்கசு எமிலியசு லெப்பிடசு, லூசியசு அருண்டியசு ஆகியோர் ரோமப் பேரரசின் ஆட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
சீனாதொகு
- பெப்ரவரி 3 - சீன மன்னன் பிங் டை தனது 14வது அகவையில் இறந்தான். 2 வயதான ரூசி யிங் சீன அரசனாக அறிவிக்கப்பட்டான்.
7தொகு
இடம் வாரியாகதொகு
ரோமப் பேரரசுதொகு
- இல்லிரியான்ஸ் ரோம ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
- பன்னோனியான்ஸ் டால்மேடியன் மற்றும் இல்லிரியான்ஸ் ஆகியோருக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
- கான்கார்டின் கோவில் கட்ட தொடங்கப்பட்டது.
ஆசியாதொகு
- வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.
8தொகு
இடம் வாரியாகதொகு
ரோமப் பேரரசுதொகு
- ஆகஸ்ட் 3 – ரோம தளபதி திபெரியாஸ் டால்மேதியான்களை பதினஸ் ஆற்றில் தோற்கடித்தார்.
ஆசியாதொகு
- வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.
9தொகு
இடம் வாரியாகதொகு
ரோமப் பேரரசுதொகு
- டியூட்டோபர்க் காட்டுப்பகுதியில் வாருசின் தலைமையிலான ரோம இராணுவம் தோற்றதை அடுத்து, இலத்தீன் மற்றும் செருமனிய மொழி பேசும் இனத்தவர்களைப் பிரிக்கும் எல்லையாக ரைன் ஆறு நிறுவப்பட்டது.
- பனோனியா (இன்றைய ஹங்கேரி) ரோம ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
- மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரோமில் சட்டம் இயற்றப்பட்டது. இதன் படி, குழந்தைகளற்ற உறவுமுறை தடை செய்யப்பட்டது.
மேற்கோள்கள்தொகு
- ↑ The Silkroad Foundation's silk road chronology
- ↑ 2.0 2.1 Georges Declercq, Anno Domini: The origins of the Christian Era (Turnhout, Belgium: Brepols, 2000), pp.143–147.
- ↑ 3.0 3.1 G. Declercq, "Dionysius Exiguus and the introduction of the Christian Era", Sacris Erudiri 41 (2002) 165–246, pp.242–246. Annotated version of a portion of Anno Domini.
- ↑ Klingaman, William K., The First Century: Emperors, Gods and Everyman, 1990, p 56
குறிப்பிடத்தக்கவர்கள்தொகு
- பிங் டி, அரசர் ஆன் அரசமரபு சீனா, ஆண்டது கிமு 1 – கிபி 5
- ருசி யிங், அரசர் ஆன் அரசமரபு சீனா, ஆண்டது கிபி 6–9
- அர்மினியஸ், செருமானியப் போர் தலைவர்
- அகஸ்ட்டஸ், ரோம அரசர் (கிமு 27 – கிபி 14)
- ஆவிட், ரோமப் புலவர்
- லிவி, ரோம வரலாற்றாசிரியர்