கல்லுபுராக்கல் தாமசு தாமசு (Kallupurackal Thomas Thomas)(பிறப்பு 30 ஜனவரி 1937) இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இந்தியச் சமூக-அரசியல் விடயங்களில் இவரின் வலுவான கருத்துக்களுக்காக அறியப்பட்டவர். சமூக விவகாரத் துறையில் இவரின் சேவைகளுக்காக இவருக்கு 2007இல் இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கியது.[1]

நீதியரசர்
க. தா. தாமசு
2018ல் தாமசு
உச்சநீதிமன்ற நீதியரசர்
பதவியில்
29 மார்ச் 1996 – 29 ஜனவரி 2002
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி
பதவியில்
12 ஆகஸ்ட் 1985 – 26 மார்ச் 1996
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சனவரி 1937 (1937-01-30) (அகவை 87)
கோட்டயம், திருவாங்கூர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
குடியுரிமைஇந்தியன்
விருதுகள்பத்ம பூசன் (2007)

சுயசரிதை தொகு

கே.டி.தாமசு, கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் 30 ஜனவரி 1937இல் பிறந்தார். பேக்கர் நினைவு பள்ளியில் பள்ளி படித்த பிறகு, கோட்டயம் சி.எம்.எஸ் கல்லூரியில் தனது பல்கலைக்கழக முன்படிப்பை முடித்தார். பின்னர் எர்ணாகுளம் செயின்ட் ஆல்பர்ட் கல்லூரியில் பி.ஏ. முடித்தார். இங்குக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராக இருந்தார். சென்னையில் உள்ள சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.[2] இவர் 1960இல் ஒரு வழக்கறிஞராகச் சேர்ந்தார். அந்த நாட்களில் முன்னணி வழக்கறிஞராக இருந்த ஜோசப் மாலியாகலின் இளைய வழக்கறிஞராக கோட்டயத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், கோட்டயம் மாவட்ட நீதிமன்றத்திலும், கேரள உயர் நீதிமன்றத்திலும் பயிற்சியினை முடித்தார். 1977ஆம் ஆண்டில், இவர் நேரடியாக மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்வு சோதனைகளில் முதல் இடத்தைப் பெற்றார். 1985ஆம் ஆண்டில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற இவர் 1995இல் செயல் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். 1996இல், இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வழக்கறிஞர் பயிற்சியின் போது, 1976ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற அமைதி குறித்த உலக மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியத் தூதுக்குழுவினை வழிநடத்தினார். உலக மாநாட்டில் அமைக்கப்பட்ட குழு ஒன்றின் தலைவராகவும் செயல்பட்டார்.[3]

தாமசு 2002ல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பளத்தில் வசித்து வருகிறார். 2008ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரது சுயசரிதை, ஹனிபீஸ் ஆஃப் சாலமன், இவரது 25 ஆண்டுகளாக நீதித்துறை பணிகள் குறித்தது.[4] இது மலையாளத்தில் சாலொமொன்டே தெனீச்சகல் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.[5] கேரள உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட இளையவர்களில் ஒருவரான இவரது மகன் நீதிபதி பெச்சு குரியன் 2020 மார்ச் மாதம் கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றார்.

குறிப்பிடத்தக்க தீர்ப்பு தொகு

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற இருக்கைக்கு நீதிபதி தாமசு தலைமை தாங்கினார். [6]

ஆளுமை தொகு

நீதிபதி தாமசு தெரிவித்த பல கருத்துக்கள் செய்திகளை உருவாக்கியுள்ளது.

  • உதவி பெறாத நிறுவனங்களில் கேரளாவில் தொழில்முறை கல்விக்கான கட்டண அமைப்பு குறித்த இவரது பரிந்துரைகள் நிறுவன உரிமையாளர்களிடமிருந்து எதிர்ப்பை பெற்றன.[7]
  • ஆகஸ்ட் 2011இல், இவர் ஒரு பொது உரையை நிகழ்த்தினார். இதில் இவர் மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸை தொடர்பில்லை என்றார் [8] இது பொது மக்களிடையே விவாதத்தை உருவாக்கியது. [9]
  • வகுப்புவாத மற்றும் இலக்கு வைக்கப்பட்ட வன்முறை மசோதாவுக்கு இவரின் எதிர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மசோதா நாட்டைப் பிளவுபடுத்தும் என்றும் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார். [10]
  • முல்லைப் பெரியர் அணையில் நீர் மட்டத்தைப் பராமரிப்பது தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் நீதிபதி தாமசு கருத்து வேறுபாட்டு எழுதியிருந்தாலும், அணை பாதுகாப்பானது என்று கூறும் அறிக்கைக்கு இவரின் ஒப்புதல் இவரது சொந்த மாநிலமான கேரளாவில் விமர்சனங்களை எழுப்பியது. [11]
  • ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளும் மரண தண்டனையிலிருந்து விடுபட வேண்டும் என்று அவர் 2013இல் கருத்து தெரிவித்தார். [12]
  • மார்ச் 2014இல், லோக்பாலின் தேர்வுக் குழுவின் தலைவராக இந்திய அரசு இவரைத் தேர்வு செய்தது. பொறுப்பேற்க தாமஸ் மறுத்துவிட்டார். தேடல் குழுவின் பரிந்துரைகள் தேர்வுக் குழுவில் பிணைக்கப்படவில்லை என்று கூறினார். எனவே, தேடல் குழுவின் பணிகளையும் தேர்வுக் குழுவே செய்ய முடியும். [13]
  • பொது நலனுக்கான மற்றொரு விடயம், நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட இருக்கை மூலம் 12ஆண்டு நில ஒதுக்கீடு வழக்கைத் தீர்ப்பது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் டேவ் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியத் தலைமை நீதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தினால், மற்றொரு மூன்று நீதிபதி இருக்கைக்குப் பட்டியலிடப்பட்டது.[14]

விருதுகள் தொகு

வகித்த பதவிகள் தொகு

  • மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, கோட்டயம் - 1977
  • கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, கோழிக்கூடு - 1979
  • முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, கோழிக்கூடு - 1981
  • கூடுதல் நீதி, கேரள உயர் நீதிமன்றம் - 1985
  • நிரந்தர நீதிபதி, கேரள உயர் நீதிமன்றம் - 1986
  • செயல் தலைமை நீதிபதி, கேரள உயர் நீதிமன்றம் - 1995
  • நீதி, இந்திய உச்ச நீதிமன்றம் - 1996
  • தலைவர் - உதவி பெறாத தொழில்முறை கல்லூரிகளில் நீதிபதி கே.டி.தாமசு குழு [15] - 2003
  • உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட காவலர் சீர்திருத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் [12]
  • பெங்களூரு தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யப் பள்ளி மறு ஆய்வு ஆணையத்தின் தலைவர்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Padma Awards 2007". Outlookindia.com. Archived from the original on 5 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  2. "Justice K.T. Thomas". Archived from the original on 2021-02-03. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  3. "Former Judges". Supreme Court of India. Archived from the original on 8 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  4. "Honeybees of Solomon Justice K.T. Thomas 9788121209663". gyanbooks.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  5. "Book by Justice K T Thomas released". Newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  6. On (2013-06-01). "Justice Speaking: Capital punishment in India is "judge centric", says Justice K T Thomas | Live Law". Livelaw.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  7. "Fee structure: stirring up a hornets' nest". The Hindu. 2004-06-01. Archived from the original on 2004-06-28. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. யூடியூபில் video of the speech
  9. "Justice K T Thomas must know the truth of the RSS | NewsGrab". Cmpaul.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  10. India, Karsevak (2011-10-25). "Karsevak India: Justice KT Thomas opposes Communal & Targeted violence bill, Terms it 'Divisive'". Karsevakindia.blogspot.ae. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  11. J. Venkatesan (2012-04-25). "Mullaperiyar dam structurally & hydrologically safe: panel". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  12. 12.0 12.1 On (2013-06-01). "Justice Speaking: Capital punishment in India is "judge centric", says Justice K T Thomas | Live Law". Livelaw.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  13. J. Venkatesan (2014-03-03). "K.T. Thomas refuses to head Lokpal search panel". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  14. V.K. Joy (2014-03-23). "Kerala Catholic Community കേരളത്തിലെ കത്തോലിക്കാസമൂഹം: Justice K T Thomas writes to CJI seeking action on Dushyant Dave's Letter". Joyvarocky.blogspot.ae. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  15. "officialwebsite of kerala.gov.in". Old.kerala.gov.in. Archived from the original on 18 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._தா._தாமசு&oldid=3547255" இலிருந்து மீள்விக்கப்பட்டது