சங்கிலி புங்கிலி கதவத் தொற

சங்கிலி புங்கிலி கதவத் தொற (Sangili Bungili Kadhava Thorae (ஆங்கிலம்: Sangili Bungili, open the door) என்பது 2017 இல் வெளியான திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் (திரைப்படம்) அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.[1] இந்தக் திரைப்படத்தை கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஐக் இயக்கியுள்ளார். இவர் எம். ஆர். ராதாவின் பேரன் ஆவார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர்.[2] பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசை அமைத்தவர் விஷால் சந்திரசேகர் இவரின் இசையில் சிலம்பரசன், அனிருத் ரவிச்சந்திரன்,ஜி. வி. பிரகாஷ் குமார், கங்கை அமரன் , பிரேம்ஜி அமரன் என ஐந்து இசையமைப்பாளர்கள் பாடியுள்ள இந்த படத்தின் ஒலிவரி எசு.பி.ஐ சினிமா நிறுவனத்தில் வெளியிடப்பட்டது [1]. மார்ச் 2016 இல் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, திரைப்படம் மே, 2017 இல் வெளியானது. இது இந்தி மொழியில் சங்கிலி பிங்கோ கி தர்வாசா கோலெனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

கதைச் சுருக்கம் தொகு

வாசு (ஜீவா (திரைப்பட நடிகர்) வீடு விற்பனை செய்யும் தரகர் வேலை பார்த்து வருகிறார். தனது நண்பன் சூரணத்துடன் (சூரி) இணைந்து சில வித்தைகள் செய்து வீடுகளை விற்பனை செய்து வருகிறார். வாசுவும் அவரது தாய் பார்வதியும் (ராதிகா சரத்குமார்) பார்வதியின் சகோதரர் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு சொந்தமாக ஒரு ஓரடுக்கு மனையில் குடியேற வேண்டும் என சபதம் எடுக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஓரடுக்கு மனையை விலைக்கு வாங்கி அதில் தனது குடும்பத்துடன் குடியேறுகிறார். தமக்கு முன்பாக ஜம்புலிங்கத்தின் குடும்பம் (தம்பி ராமையா) குடியிருந்ததை அறிய வருகிறார். ஜம்புலிங்கம் தனது மகள் சுவேதாவுடன் (ஸ்ரீ திவ்யா) இருக்கிறார். இவர் இந்த வீட்டை விட்டு போக முடியாது எனத் தெரிவிக்கிறார். எனவே இவர்களை ஆவி இருப்பதாகக் கூறி வீட்டை விட்டு அனுப்ப வாசுவும் அவரது நண்பரான சூரணமும் முயற்சி செய்கின்றனர். இந்த சமயத்தில் சுவேதாவின் மீது வாசுவிற்கு காதல் வருகிறது. ஈ. பி.ராஜேஷ்வரி (கோவை சரளா) மூலம் இந்த வீட்டில் ஆவி இருப்பதை வாசு அறிகிறார். சங்கிலி ஆண்டவர் (ராதாரவி) தனது குடும்ப உறுப்பினர்களாலேயே அந்த வீட்டிற்காக கொலை செய்யப்படுகிறார். மேலும் அவர் இரு குடும்பங்கள் இந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கிலி ஆண்டவர் வீட்டை விட்டுச் சென்றுவிடுவார் எனக் கூறுகிறார். இறுதியில் இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை அறிந்த சங்கிலி ஆண்டவர் வீட்டை விட்டுச் செல்கிறார். வாசுவும் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.

கதை மாந்தர்கள் தொகு

தயாரிப்பு தொகு

டிசம்பர் 2015 இல் ஜீவா (திரைப்பட நடிகர்) ஜக் எனும் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்தார். இவர் கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராகாப் பணிபுரிந்தவர். மேலும் எம். ஆர். ராதாவின் பேரன் ஆவார். இந்தத் திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பானது மார்ச்,2016 இல் பழனியில் துவங்கப்பட்டது. இயக்குனர் பிரியதர்சனால் தயாரிக்கப்பட்ட திகில் நகைச்சுவைத் திரைப்படங்களை இந்த படம் நினைவூட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.[3][4]

முதல் கட்டப் படப்பின்போதே சங்கிலி புங்கிலி கதவத் தொற எனும் பெயர் அறிவிக்கப்பட்டது. நடிகர்கள் ஜெய் மற்றும் அக்சரா கவுடா ஆகியோர் கௌரவத் தோற்றங்களில் நடித்தனர்.[5][6]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "5 இசையமைப்பாளர்கள் பாடியிருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' சினிமா! – Makkal Kural", Makkal Kural (in அமெரிக்க ஆங்கிலம்), 2017-04-27, பார்க்கப்பட்ட நாள் 2018-04-15
  2. "சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம் {2/5} : ரசிகர்களின் கதவு திறப்பது ஆண்டவன் கையில் - sangili bungili kadhava thorae", cinema.dinamalar.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-15
  3. "Kamal Haasan's assistant, Ike to direct Jiiva!". Archived from the original on 2015-12-10. பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
  4. "I liked the idea of a family-based fun horror film -Jiiva — iFlickz". Archived from the original on 2018-03-13. பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
  5. "Jai does a cameo in Jiiva's SBKT!". Archived from the original on 2016-04-09. பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
  6. "Director Atlee to fund a film called Sangili Bungili Kadhava Thorae".

வெளியிணைப்புகள் தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சங்கிலி புங்கிலி கதவத் தொற