சார்லஸ் பிரீர் ஆண்ட்ரூஸ்

இந்தியாவில் கிறிஸ்தவ மறை பணியாளர், மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்

சார்லஸ் பிரீர் ஆண்ட்ரூஸ் (Charles Freer Andrews) (12 பிப்ரவரி 1871 - 5 ஏப்ரல் 1940) என்பவர் இங்கிலாந்து திருச்சபையைச் சேர்ந்த ஓர் பாதிரியாரும், கிறிஸ்தவ மறைபணியாளரும், கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியும், இந்திய சுதந்திரத்திற்கான ஆர்வலரும் ஆவார். இவர் இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி ஆகியோரின் நெருங்கிய நண்பராக இருந்தார். மேலும்,இந்திய விடுதலைப் போராட்டத்திலும் அடையாளம் காணப்பட்டார். இந்திய குடிமக்கள் உரிமைப் போராட்டத்தில் காந்தி முன்னிலை வகித்து வந்த காந்திஜியை தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்ப சமாதானப்படுத்துவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.

சார்லஸ் பிரீர் ஆண்ட்ரூஸ்
1971இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் சார்லஸ்
பிறப்பு12 February 1871 (1871-02-12)
டைன் ஆற்றங்கரை நியூகாசில், இங்கிலாந்து
இறப்பு5 ஏப்ரல் 1940 (வயது 69)
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்பெம்புரூக் கல்லூரி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
பணிஇங்கிலாந்து திருச்சபையின் பாதிரியார், கிறிஸ்தவ மறைபணியாளர், கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி
அறியப்படுவது
சார்லஸ் பிரீர் ஆண்ட்ரூஸின் கல்லறை மீது அவரது மார்பளவு சிலை, கீழ் வட்ட சாலை கிறிஸ்துவ கல்லறை - கொல்கத்தா

சி.எஃப்.ஏ (C. F. A) என்ற இவருடைய முதலெழுத்துகளின் அடிப்படையில் கிறிஸ்துவின் விசுவாசமான திருத்தொண்டர்களில் (Christ's Faithful Apostle) ஒருவராக காந்தியால் அன்போடு அழைக்கப்பட்டார். இந்திய விடுதலை இயக்கத்தில் இவரது பங்களிப்புக்காக, காந்தியும், தில்லி புனித இசுடீவனின் கல்லூரியில் இவரது மாணவர்களும், இவருக்கு "தீனபந்து" (ஏழையின் நண்பர்) என்று பெயரிட்டனர்.

இந்தியாவில் தொகு

ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக காலத்திலிருந்தே கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தில் ஈடுபட்டிருந்தார். மேலும் நற்செய்திக்கான அர்ப்பணிப்புக்கும் நீதிக்கான அர்ப்பணிப்புக்கும் இடையிலான உறவை ஆராய்வதில் ஆர்வமும் கொண்டிருந்தார். இதன் மூலம் இவர் பிரித்தானியப் பேரரசு முழுவதும், குறிப்பாக இந்தியாவில் நீதிக்கான போராட்டங்களில் ஈர்க்கப்பட்டார்.

1904ஆம் ஆண்டில் இவர் தில்லிக்கான கேம்பிரிச்சு மறைபணி இயக்கத்தில் சேர்ந்தார். மேலும் புனிதர் இசுடீபன் கல்லூரியில் தத்துவம் கற்பிக்கவும் செய்தார். அங்கு இவர் பல இந்திய சகாக்களுடனும், மாணவர்களுடனும் நெருக்கமாக வளர்ந்தார். சில பிரித்தானிய அதிகாரிகளாலும், குடிமக்களாலும் இந்தியர்களின் மீதான இனவெறி நடத்தையால் அதிர்ச்சியடைந்த இவர், இந்திய அரசியலை ஆதரித்தார். மேலும் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தி குடிமை இராணுவ வர்த்தமானிக்கு 1906இல் ஒரு கடிதம் எழுதினார். பின்னர், ஆண்ட்ரூஸ் இந்திய தேசிய காங்கிரசின் செயல்பாடுகளில் ஈடுபட்டார். மேலும் 1913 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பருத்தித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தீர்க்க இவர் உதவினார்.

காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் தொகு

வற்புறுத்தல், புத்திசாலித்தனம், தார்மீக நேர்மைக்கு பெயர் பெற்ற இவரை, மூத்த இந்திய அரசியல் தலைவர் கோபால கிருஷ்ண கோகலே தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்குள்ள இந்திய சமூகத்திற்கு அரசாங்கத்துடனான அரசியல் தகராறுகளைத் தீர்க்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். ஜனவரி 1914இல் தென்னாப்பிரிக்கா வந்த இவர், இனப் பாகுபாடு மற்றும் காவல் சட்டங்களுக்கு எதிராக இந்திய சமூகத்தின் முயற்சிகளுக்கு தலைமை தாங்கி வந்த 44 வயது குசராத்தி வழக்கறிஞர், மோகன்தாசு காந்தியை சந்தித்தார். ஆண்ட்ரூஸ் காந்தியின் கிறிஸ்தவ விழுமியங்கள் பற்றியும், அகிம்சை கருத்து பற்றியும் ஆழ்ந்து ஈர்க்கப்பட்டார் - இது கிறிஸ்தவ அராஜகத்தின் கூறுகளின் உத்வேகத்துடன் காந்தி கலந்த ஒன்று.

தளபதி ஜான் இசுமட்சுடனான பேச்சுவார்த்தையில் ஆண்ட்ரூஸ் காந்தியின் உதவியாளராக பணியாற்றினார். மேலும், அவர்களின் தொடர்புகளின் சில நுணுக்கமான விவரங்களை இறுதி செய்யும் பொறுப்பிலும் இருந்தார்.[1]

பல இந்திய காங்கிரசு தலைவர்கள், புனிதர் இசுடீபன் கல்லூரியின் முதல்வர் சுசில் குமார் ருத்ரா ஆகியோரின் ஆலோசனையைப் பின்பற்றி, ஆண்ட்ரூஸ் 1915இல் தன்னுடன் இந்தியாவுக்குத் திரும்ப காந்திஜிக்கு உறுதுணையாக இருந்தார்.

தாகூர், ஸ்ரீ நாராயண குரு தொகு

1918ஆம் ஆண்டில் ஆண்ட்ரூஸ் முதலாம் உலகப் போருக்கு போராளிகளை நியமிப்பதற்கான காந்தியின் முயற்சிகளை ஏற்கவில்லை. இது அகிம்சை பற்றிய அவர்களின் கருத்துக்களுக்கு முரணானது என்று நம்பினார். "மகாத்மா காந்தியின் யோசனை" என்பதில் ஆண்ட்ரூஸ் காந்தியின் ஆட்சேர்ப்பு பிரச்சாரத்தைப் பற்றி எழுதினார்: "தனிப்பட்ட முறையில் என்னால் இதை மற்ற விஷயங்களில் அவரது சொந்த நடத்தையுடன் சமரசம் செய்ய முடியவில்லை, மேலும் இது எனக்கு வேதனையான கருத்து வேறுபாடுகளில் ஒன்று." [2]

ஆண்ட்ரூஸ் அகில இந்திய தொழிற்சங்கத்தின் தலைவராக 1925லிலும், 1927லிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆண்ட்ரூஸ் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் ஒரு உரையாடலை உருவாக்கினார். கவிஞரும் தத்துவஞானியுமான இரவீந்திரநாத் தாகூருடன் சாந்திநிகேதனில் நிறைய நேரம் உரையாடலில் செலவிட்டார். 'தீண்டத்தகாதவர்களின் வெளியேற்றத்தை' தடை செய்யும் இயக்கத்தையும் இவர் ஆதரித்தார். 1919இல் இவர் புகழ்பெற்ற வைக்கம் போராட்டத்தில் சேர்ந்தார். 1933இல் தலித்களின் கோரிக்கைகளை உருவாக்க அம்பேத்கருக்கு உதவினார்.

ஒருமுறை ஆண்ட்ரூஸ், இரவீந்திரநாத் தாகூருடன், தென்னிந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர் நாராயண குருவைச் சந்தித்தார். பின்னர் இவர், "நமது கிறிஸ்து அரேபிய கடற்கரையில் இந்து சன்னியாசின் உடையில் நடப்பதை நான் பார்த்தேன்" என்று ரோமைன் ரோலண்டிற்கு எழுதினார்.

இவரும் அகதா ஹாரிசனும் காந்தியின் இங்கிலாந்து வருகைக்கு ஏற்பாடு செய்தனர்.[3] இலண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டிற்கு இவர் காந்தியுடன் சென்றார். இந்திய சுயாட்சி, அதிகாரப் பரவலாக்க விஷயங்களில் பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உதவினார்.

பிற்கால வாழ்வு தொகு

இந்த நேரத்தில் காந்தி இவரைப் போன்ற அனுதாபமுள்ள பிரித்தானியர்கள் சுதந்திரப் போராட்டத்தை இந்தியர்களிடம் விட்டுவிடுவது நல்லது என்று ஆண்ட்ரூஸை வலியுறுத்தினார். எனவே 1935 முதல் ஆண்ட்ரூஸ் தீவிர சீடர்களுக்கான கிறிஸ்துவின் அழைப்பு பற்றி நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு கற்பித்தல் பணியில் பிரிட்டனில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினார். சி.எஃப்.ஏ (C. F. A) என்ற இவருடைய முதலெழுத்துகளின் அடிப்படையில் கிறிஸ்துவின் விசுவாசமான திருத்தொண்டர்களில் (Christ's Faithful Apostle) ஒருவராக காந்தியால் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் காந்தியின் நெருங்கிய நண்பர் என்று பரவலாக அறியப்பட்டார் மேலும், காந்தியை அவரது முதல் பெயரான மோகன் என்று அழைக்கும் ஒரே முக்கிய நபராக இருந்தார்.[4]

ஆண்ட்ரூஸ், 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி கொல்கத்தாவுக்குச் சென்றபோது இறந்தார். பின்னர் கொல்கத்தாவின் கீழ் வட்டச் சாலை கல்லறை மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டார். [5] [6]

நினைவேந்தல் தொகு

இவர் இந்தியாவில் பரவலாக நினைவுகூரப்பட்டு மதிக்கப்படுகிறார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டு இளங்கலை கல்லூரிகள், தீனபந்து ஆண்ட்ரூஸ் கல்லூரி, தீனபந்து நிறுவனம் , தெற்கு கொல்கத்தாவின் சலீம்பூர் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளி ஆகியவை இவரது பெயரை நினைவுபடுத்துகின்றன. தீனபந்து ஆண்ட்ரூஸ் கல்லூரி, கிழக்கு பாகித்தானிலிருந்து (தற்போதைய வங்காளதேசம் ) இடம்பெயர்ந்தவர்களின் ஏராளமான குழந்தைகளுக்கு, உயர் கல்வியைப் பரப்பும் நோக்கில் அமைக்கப்பட்டது. [7] தென்னிந்தியாவில் கூட, மருத்துவமனைகளுக்கு தீனபந்து என்று பெயரிட்டு இவர் நினைவுகூரப்பட்டார். கேரளாவின் பாலக்காடு, தச்சம்பாறை தீனபந்து மருத்துவமனை அப்படிப்பட்ட ஒன்று.

1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி திரைப்படத்தில் பிரித்தானிய நடிகர் இயன் சார்லசன் இவரது பாத்திரத்தில் நடித்திருந்தார் . பிப்ரவரி 12 அன்று அமெரிக்காவில் உள்ள எபிஸ்கோபல் தேவாலயத்தின் வழிபாட்டு நாட்காட்டியில் இவருக்கு குறைந்த விருந்து வழங்கப்படுகிறது . [8] [9]

1971ஆம் ஆண்டில், ஆண்ட்ரூஸின் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி இந்தியா ஒரு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Guha, Ramachandra, Gandhi Before India, Knopf; F., 2013, pp. 505-506.
  2. Andrews, C.F. (1930). Mahatma Gandhi's Ideas. Macmillan. பக். 133. "The Teaching of Ahimsa" 
  3. Agatha Harrison, Open University, Retrieved 20 March 2017
  4. Guha, Ramachandra (29 January 2008). "His faith, our faith". Hindustan Times.
  5. Lahiri, Samhita Chakraborty (9 January 2011). "A love-hate relationship with Calcutta". Telegraph India.
  6. Guha, Ramachandra (28 February 2009). "Searching for Charlie". Telegraph India.
  7. "Dinabandhu Andrews College". Archived from the original on 2018-12-09. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.
  8. "Holy Women, Holy Men Celebrating the Saints" (PDF).
  9. "Charles Freer Andrews". satucket.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-10.

மேலும் படிக்க தொகு

  • D. O'Connor, Gospel, raj and swaraj: the missionary years of C. F. Andrews 1904–14 (1990)
  • H. Tinker, The Ordeal of Love: C. F. Andrews and India (1979)
  • Deenabhandu Andrews Centenary Committee, Centenary Volume C. F. Andrews 1871–1971 (1972)
  • P. C. Roy Chaudhuri, C. F. Andrews his life and times (1971)
  • K. L. Seshagiri Rao, Mahatma Gandhi and C. F. Andrews: a study in Hindu-Christian dialogue (1969)
  • Banarsidas Chaturvedi & Marjorie Sykes, Charles Freer Andrews: a Narrative (1949)
  • J. S. Hoyland, The Man India Loved: C. F. Andrews [1944]
  • N. Macnicol, C. F. Andrews Friend of India (1944)
  • J. S. Hoyland, C. F. Andrews : minister of reconciliation (London, Allenson, [1940])
  • David McI Gracie, Gandhi and Charlie: The story of a Friendship (1989)
  • Visvanathan, Susan, "S K Rudra, C F Andrews and M K Gandhi: Friendship, Dialogue and Interiority in the Question of Indian Nationalism", Economic and Political Weekly, Vol – XXXVII No. 34, 24 August 2002
  • Visvanathan, Susan.2007. Friendship, Interiority and Mysticism: Essays in Dialogue. New Delhi:Orient BlackSwan

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Charles Freer Andrews
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Gandhi