சித்தோடு (ஆங்கிலம்:Chithode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் ஈரோடு மாநகரை ஒட்டி இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

சித்தோடு
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,550 (2011)

1,495/km2 (3,872/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.72 சதுர கிலோமீட்டர்கள் (2.21 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/chithode

அமைவிடம் தொகு

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் 8 கி.மீ தொலைவிலும், பவானி பேருந்து நிலையத்திலிருந்து தெற்கில் 7 கி.மீ தொலைவிலும், பெருந்துறை பேருந்து நிலையத்திலிருந்து வடக்கில் 16 கி.மீ தொலைவிலும் சித்தோடு அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

5.72 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,553 வீடுகளும், 8,550 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. சித்தோடு பேரூராட்சியின் இணையதளம்
  4. Chithode Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தோடு&oldid=3169938" இலிருந்து மீள்விக்கப்பட்டது