பாலிங் பேச்சு

பாலிங் பேச்சு என்பது மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கும் மலாயா அரசாங்கத்திற்கும் இடையே நடந்த அமைத

பாலிங் பேச்சு அல்லது பாலிங் பேச்சுவார்த்தை என்பது (மலாய்: Rundingan Damai Baling; ஆங்கிலம்: Baling Talks; சீனம்: 打包演講) மலேசியா, கெடா மாநிலத்தின் பாலிங் நகரத்தில், 1955 டிசம்பர் மாதம் 28 - 29-ஆம் தேதிகளில், மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கும் (Communist Party of Malaya - CPM); மலாயா அரசாங்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையாகும். பாலிங் அரசாங்க ஆங்கிலப் பள்ளியில் (Government English School) நடைபெற்றது.[1]

பாலிங் பேச்சு
Baling Talks
அமைப்புமலாயா அவசர காலத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தை
இடம்பாலிங் ஆங்கிலப்பள்ளி
Government English School Baling
முத்திரையிட்டது28 திசம்பர் 1955 (1955-12-28)
முடிவுக்காலம்29 திசம்பர் 1955 (1955-12-29)
மத்தியஸ்தர்கள்டேவிட் மார்ஷல்
பேச்சுவார்த்தை நடத்துபவர்கள்துங்கு அப்துல் ரகுமான்
[சின் பெங்]]
தரப்புகள்மலாயா அரசாங்கம்
மலாயா கம்யூனிஸ்டு கட்சி
மொழிகள்ஆங்கிலம்; மலாய் மொழி


பாலிங்
பாலிங் is located in மலேசியா மேற்கு
பாலிங்
பாலிங்
ஆள்கூறுகள்: 5°21′36″N 100°32′59″E / 5.36000°N 100.54972°E / 5.36000; 100.54972
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மலாயா அவசர காலம்: ஒரு ரப்பர் தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள், சிறப்புப் போலீஸ் பாதுகாப்பின் கீழ் பயணம் செய்கிறார்கள் (1950).
அவசர காலத்திற்கு முன்னர் கோலாலம்பூரில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம்.

மலாயா அவசரகால நிலைமையைத் தீர்க்கும் முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் மலாயா அரசாங்கத்தைப் பிரதிநிதித்து துங்கு அப்துல் ரகுமான், டத்தோ டான் செங் லோக், சிங்கப்பூர் முதலமைச்சர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.[2][3]

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சின் பெங்; அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் ரசீட் மைடின்; மத்திய பிரசார அமைப்பின் தலைவர் சென் தியென் கலந்து கொண்டனர்.[4]

ஒரு சுமுகமான முடிவு காண்பதே அந்த பாலிங் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்கு. ஆனால், சின் பெங் முன்வைத்தக் கோரிக்கைளை மலாயா அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

அதே சமயத்தில் சரணடைதல் விதிமுறைகளை மலாயா கம்யூனிஸ்டு கட்சியினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அதனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

வரலாறு தொகு

இரண்டாம் உலகப் போர் முடிவு அடைந்ததும் மலாயாவில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலை தூக்கியது. ஜப்பானியர்களை எதிர்த்தப் போராளிப் படையினருக்குப் பிரித்தானியர்கள் ஏற்கனவே ஆயுதங்களை வழங்கி இருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் பல கொரில்லா போராளிக் குழுக்கள் உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்.[5][6] இந்தக் கொரில்லா போராளிக் குழு பேராக், கெடா, சிலாங்கூர், பகாங், ஜொகூர், மலாக்கா மாநிலங்களில் பரவியிருந்தது.

தவிர, பேராக் மாநிலத்தில் தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், சுங்கை சிப்புட், சிம்மோர், தஞ்சோங் ரம்புத்தான், தம்பூன், கம்பார் நகரம் போன்ற இடங்கள்; கெடா மாநிலத்தில் பாலிங், கிரிக், குரோ, கூலிம் போன்ற இடங்கள்; பகாங் மாநிலத்தில் ரவுப், பெந்தோங், பிரேசர் மலை, போன்ற இடங்கள்; ஜொகூர் மாநிலத்தில் சிகாமட், குளுவாங், மூவார், பத்து பகாட் போன்ற இடங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது.

மலாயா அவசரகாலம் தொகு

 
மலாயா அவசர காலம்: போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களிடம் விசாரணை செய்கின்றனர்.

மலாயா அவசரகாலம் என்பது 1948-ஆம் ஆண்டில் இருந்து 1960--ஆம் ஆண்டு வரை மலாயா எனும் தற்போதைய மலேசியாவில் அமல் படுத்தபட்ட ஓர் ஒழுங்கு நடவடிக்கை காலம் ஆகும். மலாயா அவசரகாலத்தில் Malayan National Liberation Army (MNLA)[7] எனும் மலாயா தேசிய விடுதலை படையினருக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையே நடைபெற்ற ஒரு போரை மலாயா அவசரக் காலப் போர் என்றும் அழைக்கிறார்கள்.

மலாயா தேசிய விடுதலை படை என்பது மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் போர்ப் படை ஆகும். மலாயா காலனித்துவப் பிரித்தானியர்கள், மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மீது தொடுத்த போரின் காலக் கட்டத்தை மலாயா அவசரகாலம் என்றும் அழைக்கின்றனர். ஆனால், மலாயா தேசிய விடுதலை படையினர் அந்தக் கால கட்டத்தைத் தேசிய பிரித்தானிய எதிர்ப்பு - விடுதலைப் போர் என்று அழைத்தனர்.(Anti-British National Liberation War)[8]

மலாயா கம்னியூஸ்டு கட்சி தொகு

 
மலாயா அவசர காலம்: 1953-ஆம் ஆண்டில் பேராக் தெமாங்கூர் பகுதியில் மலாயா காவல் துறையினர் காவல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பிரித்தானியர்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்திய மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்; பின்நாட்களில் மலாயா கம்னியூஸ்டு கட்சி என்று மாற்றம் அடைந்தது.[9]

மலாயாக் கம்னியூஸ்டுக் கட்சி ஒட்டு மொத்த மலாயாவையும் ஒரு கம்னியூச நாடாக மாற்ற திட்டங்களை வகுத்தது.[10] மலாயாவைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வர பல நாச வேலைகளிலும் ஈடுபட்டது. அந்தக் கட்சிக்குச் சின் பெங் என்பவர் தலைமை வகித்தார்.

மலாயாவில் நடந்த இந்த உள்நாட்டுப் போரில், 1960-ஆம் ஆண்டில், மலாயா கம்யூனிஸ்டுகள் தோல்வி அடைந்தனர். இருப்பினும் அவர்களின் தலைவர் சின் பெங் 1967-ஆம் ஆண்டு அந்தச் சண்டையை மீண்டும் புதுப்பித்தார்.

அதற்கு முன்னரே ஆஸ்திரேலிய, பிரித்தானிய படைகள் அந்தப் போரில் இருந்து மீட்டுக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் சின் பெங்கின் புதிய அணுகுமுறையும் தோல்வி கண்டது.

மலாயாவின் பொருளாதாரம் பாதிப்பு தொகு

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மலாயாவின் பொருளாதாரம் மிக மோசமான பாதிப்பு நிலையை அடைந்தது. வேலையில்லாமை, குறைவான ஊதியம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவின. தொழிலாளர்களிடையே பரவலான அமைதியற்றத் தன்மை இருந்தது.

1946-இல் இருந்து 1948 வரை ஆங்காங்கே வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. இந்தக் காலகட்டத்தில் பிரித்தானியர் மலாயாவின் பொருளாதாரத்தைச் செப்பனிட பலவகையான முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஐரோப்பிய தோட்ட நிர்வாகிகள் கொலை தொகு

 
மலாயா அவசர காலம்: எரிக்கப்பட்ட ஒரு பேருந்து.

1948 ஜூன் மாதம் 16-ஆம் தேதி பேராக், சுங்கை சிப்புட்டில் மூன்று ஐரோப்பிய தோட்ட நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அன்று காலை 8.30-க்கு சுங்கை சிப்புட், எல்பில் தோட்டத்தின் நிர்வாகி ஏ.இ.வால்கர் அவருடைய அலுவலக அறை மேசையில் சுட்டுக் கொல்லப் பட்டார்.

அதற்கு அடுத்து, முப்பது நிமிடங்கள் கழித்து இரண்டு கி.மீ. தொலைவில் இருந்த பின் சூன் தோட்ட நிர்வாகி ஜே.எம்.எலிசன் என்பவரும், அவருடைய துணை நிர்வாகி இயான் கிறிஸ்டியன் என்பவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.[11] இந்த அசம்பாவிதங்கள் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களை நிலை தடுமாறச் செய்தது.

கொலை செய்யப்பட்ட பிரித்தானிய நிர்வாகிகளின் உடல்கள் பத்து காஜாவில் உள்ள ஆங்கலிக்கன் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப் பட்டன. அதைத் தொடர்ந்து, பிரித்தானியர்கள் மலாயாவில் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்தனர்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்குத் தடை தொகு

 
மலாயா அவசர காலம்: சிலாங்கூர் செமினியில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் பொதுமக்களின் ஊர்வலம்.

அதன் வழி மலாயா கம்யூனிஸ்டு கட்சி முற்றாகத் தடை செய்யப்பட்டது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர். விசாரனைகள் இல்லாத கைது நடவடிக்கை தீவிரமாக அமல் படுத்தப்பட்டது.[12]

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக சின் பெங் என்பவர் இருந்தார். மலாயா கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டதும் அக்கட்சியின் உறுப்பினர்கள் கிராமப்புறப் பகுதிகளில் அடைக்கலம் அடைந்தனர்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சி என்பது மலாயா மக்கள் விடுதலைப் படை என்று மாற்றம் கண்டது. மலாயா கம்யூனிஸ்டுகளினால் கிராமப்புற மக்களின் வாழ்வில் சித்ரவதைகளும் தொல்லைகளும் தொடர்ந்தன.[13]

இரகசியமான இராணுவப் பயிற்சிகள் தொகு

 
ஈப்போ கெப்பாயாங் பகுதியில் கம்யூனிஸ்டு கும்பலின் தலைவி லீ மின் (1951)

ஜப்பானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது, மலாயா கம்யூனிஸ்டு கட்சி ஜப்பானியர்களை எதிர்த்து கொரில்லா போர் முறையில் களம் இறங்கியது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பிரித்தானியர்கள் ஏற்கனவே ஆயுதங்களை வழங்கி ஜப்பானியர்களை எதிர்க்கச் செய்தனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பிரித்தானியர்கள் ரகசியமான முறையில் இராணுவப் பயிற்சிகளையும் வழங்கி வந்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியினரின் ஆயுதஙளைப் பிரித்தானியரிடமே மீண்டும் ஒப்படைக்குமாறு கட்டளையிடப் பட்டது. இருப்பினும் அந்த ஆயுதங்களில் பெருவாரியான ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. மலாயா கம்யூனிஸ்டு கட்சியினரே வைத்துக் கொண்டனர். பின்னர், அதே ஆயுதங்கள்தான் பிரித்தானியர்களுக்கு எதிராகவும் திசை திருப்ப பட்டன.[14]

கொரில்லா போர் தொகு

மலாயா தேசிய விடுதலை படையினர் (Malayan National Liberation Army) கொரில்லா போர்த் தந்திரங்களைக் கையாண்டனர். மின்நிலையங்கள், நீர்த் தேக்கங்கள் போன்றவற்றைச் சேதம் அடையச் செய்தல், ரப்பர் தோட்டங்களில் தாக்குதல் நடத்துதல், பொது போக்குவரத்திற்கு குந்தகம் விளைவித்தல் போன்றவையே மலாயா தேசிய விடுதலை படையினர் கையாண்ட கொரில்லா போர் தந்திரங்களாகும்.[15]

அப்போது மலாயாவில் 3.12 மில்லியன் சீனர்கள் இருந்தனர். இவர்களில் ஏறக்குறைய 500,000 பேர் மலாயா தேசிய விடுதலை படையினருக்கு ஆதரவாக இருந்தனர். மலாய்க்காரர்களில் சிலரும் ஆதரவு வழங்கினர்.

பொது மன்னிப்பு தொகு

 
மலாயா அவசர காலத்தின் போது செனோய் பூர்வீகப் பழங்குடி மக்களைக் கொண்ட பாதுகாப்புப் படைப் பிரிவினர்.

1955 செப்டம்பர் 8-ஆம் தேதி மலாயா கம்யூனிஸ்டுகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப் படுவதாக மலாயாக் கூட்டரசு அரசாங்கம் அறிவித்தது.[16] இதே போன்ற ஓர் அறிவிப்பைச் சிங்கப்பூர் அரசாங்கமும் அறிவித்தது.

ஆனால், மலாயா தேசிய விடுதலை படையினருடன் எந்தவிதப் பேரமும் பேச முடியாது என்று அப்போதைய மலாயாவின் முதலமைச்சர் துங்கு அப்துல் ரகுமான் உறுதியாக அறிவித்தார். பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.

ஆனால், அது தொடர்பாக எந்தப் பேரமும் பேச முடியாது. இது அரசாங்கத்தின் தீர்க்கமான முடிவு என்று துங்கு அப்துல் ரகுமான் திடமாகச் சொல்லி விட்டார்.[17]

பொது மன்னிப்பின் மூலக் கூறுகள் தொகு

  • அவசரகாலம் தொடர்பான தவறுகளைச் செய்தவர்கள் உடனடியாக சரண் அடையலாம்.
  • அவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.
  • இப்போதே அவர்கள் சரண் அடையலாம்.
  • அவர்கள் விரும்பும் நபரிடம் சரண் அடையலாம்.
  • அல்லது பொது மக்களிடமும் சரண் அடையலாம்.
  • அரசாங்கம் பொதுவான சண்டை நிறுத்தத்தை அறிவிக்கவில்லை.
  • அதனால் பாதுகாப்பு படையினர் எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பார்கள்.
  • சரண் அடைந்தவர்களிடம் அரசாங்கம் கன்டிப்பாக விசாரண நடத்தும்.
  • சரண் அடையும் ஒருவர் நாட்டிற்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேன்டும்.
  • அவருக்கு அரசாங்கம் எல்லா வகைகளிலும் உதவிகள் செய்யும்.
  • சரண் அடைந்தவர் சமுதாயத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப் படுவார்.
  • சரண் அடைந்தவர் அவருடைய குடும்பத்தாருடன் இணைத்து வைக்கப் படுவார்.
  • சரண் அடைந்த பின்னர் அவர்களுடைய நடமாட்டம் தொடர்ந்து கவனிக்கப்படும்.
  • சீனாவிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.[18]

மலாயா அரசாங்கத்தின் சமாதானப் பேச்சு தொகு

 
சின் பெங்கை உயிரோடு பிடித்துக் கொடுத்தால் 250,000 டாலர் சன்மானம்: பத்திரிகைச் செய்தி

தன்னுடைய நோக்கம் வெற்றி பெறவில்லை என்பதை உணர்ந்த சின் பெங், ஆளும் பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்த அழைப்பு விடுத்தார். அந்தப் பேச்சு வார்த்தை மலேசிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றது. 1955 டிசம்பர் 28-ஆம் தேதி கெடா, பாலிங்கில் உள்ள பாலிங் அரசாங்க ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்றது.

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை தொகு

சண்டை சச்சரவுகளுக்கு ஒரு சுமுகமான முடிவு காண்பதே அந்த பாலிங் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்கு ஆகும். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் சின் பெங் முன்வைத்தக் கோரிக்கைளை மலாயா அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இறுதியில் பாலிங் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அடுத்தக் கட்டமாக நியூசிலாந்து தன்னுடைய இராணுவப் படையை மலாயாவுக்கு அனுப்பியது. பொதுநலவாய உறுப்பு நாடுகள் (Commonwealth Countries) தத்தம் படைகளையும் மலாயாவுக்கு அனுப்பி வைத்தன.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் இறுதி முயற்சி தொகு

 
1953-ஆம் ஆண்டில் மலாயா நாட்டுப் பாதுகாப்பிற்காக ஆப்பிரிக்கா ரொடீசியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரித்தானிய இராணுவ வீரர்கள்.

பாலிங் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததினால், 1956 பிப்ரவரி 8-ஆம் தேதி முதலமைச்சர் துங்கு பொது மன்னிப்பை மீட்டுக் கொண்டார். மலாயா கம்யூனிஸ்டுகளுக்கு ஐந்து மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் கம்யூனிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும் உறுதியாகச் சொன்னார்.[19]

எனினும், மலாயா கம்யூனிஸ்டு கட்சி மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்த தன்னால் இயன்ற வரை முயற்சிகள் செய்து பார்த்தது. ஆனால், அனைத்தும் வெற்றி பெறவில்லை.

மலாயா சுதந்திரம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் கூட, ஆகக் கடைசியாக மலாயா கம்யூனிஸ்டு கட்சி இன்னொரு முயற்சி செய்து பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு கேட்டது. ஆனால், துங்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

மலாயா சுதந்திரம் அடைந்தது தொகு

 
மலாயா அவசரகாலத்தின் போது பிரித்தானிய பீரங்கிப் படையினர்.
 
மலாயா அவசரகாலத்தின் போது பகாங் தன்னார்வப் பெண்கள் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

1957 ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி மலாயா சுதந்திரம் அடைந்தது. மறு ஆண்டில் பேராக், தெலுக் இந்தானில் கம்யூனிஸ்டு கொரில்லாக்கள் கடைசியாக ஒரு தாக்குதல் நடத்தினர். அதுதான் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் கடைசி தாக்குதல்.

அந்தத் தாக்குதலில் வெற்றி பெற முடியாமல் போகவே, தாக்குதல் நடத்திய அனைவரும் அரசாங்கக் காவல் துறையிடம் சரண் அடைந்தனர்.

மலாயாவில் ஆங்காங்கே எஞ்சியிருந்த கம்யூனிஸ்டு கொரில்லாக்கள் தென் தாய்லாந்து எல்லையில் தஞ்சம் அடைந்தனர். 1960 ஜுலை 31-இல் அவசரகாலம் முடிவிற்கு வந்ததாக மலாயா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன் பின்னர் சின் பெங், தென் தாய்லாந்தில் இருந்து சீனா, பெய்ஜிங்கிற்குச் சென்றார். அவருடன் முக்கியமான சிலரும் சென்று சீனாவில் அடைக்கலம் அடைந்தனர். சின் பெங் 2013 செப்டம்பர் 16 ஆம் திகதி தாய்லாந்து தலைநகரமான பாங்காக்கில் காலமானார். பாங்கோக் போஸ்ட் நாளிதழ் செய்திகளின் படி, அன்றைய தினம் அதிகாலை மணி 6.20 மணியளவில் சின் பெங் வயது மூப்பு காரணமாகக் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

1989 ஆம் ஆண்டு மலேசியா – தாய்லாந்து இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஹாட்யாய் ஒப்பந்தத்தின் படி, கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பலர் மலேசியாவிற்குத் திரும்பினர். ஆனால் சின் பெங்கை மட்டும் மலேசியாவிற்குள் நுழைய மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. அதனால் அவர் தன்னுடைய வாழ்நாளில் பல வருடங்களைத் தாய்லாந்திலேயே கழித்தார்.

அவசரகாலத்திற்கு ஒரு முடிவு தொகு

மலாயா தேசிய விடுதலை படையினருக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையே நடைபெற்ற இந்த மலாயா அவசர காலப் போரில்...

  • 6,710 கம்யூனிஸ்டுக் கொரில்லாக்கள் கொல்லப்பட்டனர்.
  • 1,287 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
  • 2,702 கொரில்லாக்கள் சரண் அடைந்தனர்.
  • அரசு தரப்பில் 1,345 இராணுவத்தினரும், காவல் துறையினரும் கொல்லப்பட்டனர்.
  • 519 பொதுநலவாய (காமன்வெல்த்) அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
  • பொதுமக்களில் 2,478 பேர் கொல்லப்பட்டனர்.

வெளி இணைய இணைப்புகள் தொகு

நூல்கள் தொகு

  • Prof Madya Dr. Nik Anuar Nik Mahmud: Tunku Abdul Rahman and His Role in the Baling Talks
  • Chin, C. C., and Karl Hack. eds., Dialogues with Chin Peng: New Light on the Malayan Communist Party. (2004) Singapore: Singapore University Press, 2004 ISBN 9971-69-287-2
  • Singh Sandhu, Kernial (1964). "The Saga of the 'Squatter' in Malaya". Journal of South East Asian History. Cambridge, England: Cambridge University Press.
  • Short, Anthony (1975). The Communist Insurrection in Malaya, 1948–1960. London: Frederick Muller. ISBN 0-584-10157-0.

மேற்கோள் தொகு

  1. Baling Talks, a meeting between Messrs. David Marshall, Tunku Abdul Rahman, Dato Sir Tan Cheng Lock, and Chin Peng on 28 December 1955.
  2. The Baling Talks were held in Malaya in 1956 in an attempt to resolve the Malayan Emergency situation. The main participants were Chin Peng, David Marshall and Tunku Abdul Rahman.
  3. The 1955 Baling Talks. Singapore Arts Festival 2011.
  4. பாலிங் பேச்சுவார்த்தை தொடர்பான காணொலி.
  5. Ooi Keat Gin, Japanese Empire in the Tropics, 1998, 6–7
  6. Wigmore, Lionel (1957) The Japanese Thrust Australia in the War 1939–1945 Series 1 (Army), Volume 4. Canberra: Australian War Memorial, page 179 (Online in PDF form at [1] பரணிடப்பட்டது 2008-06-23 at the வந்தவழி இயந்திரம்)
  7. My Side of History by Chin Peng (Media Masters; Singapore, 2003)
  8. "The MNLA termed it the "Anti-British National Liberation War". The conflict was called an "emergency" for economic reasons, as London insurance companies would only cover property losses to Malayan rubber and tin estates during rioting or commotion in an emergency, but not in an armed insurrection or civil war". Archived from the original on 2016-06-16. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  9. "The Malayan Emergency (1947-1960)". Archived from the original on 2011-12-25. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  10. O'Ballance, p.23.
  11. "The British Colonial government declared a State of Emergency after the murder of three European planters on 16 June 1948". Archived from the original on 11 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. A long bitter campaign was fought in the jungles of the Malay Peninsular, with people relocated into fortified villages to deny support to the rebels. The Emergency officially ended 31 July 1960.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "The communists started to realise that their policy of terrorizing supplies from the local population was just breeding hostility, facing renewed military opposition they pulled back into the deep jungles and stopped the random attacks". Archived from the original on 2011-12-25. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  14. Some units were trained by the British. The equipment and skills gained in guerrilla warfare against the Japanese served the MPAJA in good stead when it fought Commonwealth forces during the postwar Malayan Emergency.
  15. Rashid, Rehman (1993). A Malaysian Journey. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:983-99819-1-9. https://archive.org/details/malaysianjourney0000rehm. 
  16. Memorandum from the Chief Minister and Minister for Internal and Security, No. 386/17/56, 30 April 1956. CO1030/30
  17. Baling Talks, a meeting between Messrs. David Marshall, Tunku Abdul Rahman, Dato Sir Tan Cheng Lock, and Chin Peng on 28 December 1955.
  18. Prof Madya Dr. Nik Anuar Nik Mahmud, Tunku Abdul Rahman and His Role in the Baling Talks
  19. MacGillivray to the Secretary of State for the Colonies, 15 March 1956, CO1030/22
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிங்_பேச்சு&oldid=3739696" இலிருந்து மீள்விக்கப்பட்டது