மு. க. அழகிரி

இந்திய அரசியல்வாதி

மு. க. அழகிரி (M. K. Alagiri, பிறப்பு: 30 சனவரி, 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதி, தயாளு அம்மாள் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். 2009 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் நடுவண் அமைச்சரவையில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.[1]

மு. க. அழகிரி
மு. க. அழகிரி
இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்
பதவியில்
13 சூன் 2009 – 20 மார்ச் 2013
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்இராம் விலாசு பாசுவான்
பின்னவர்ஸ்ரீகாந்த் குமார் ஜெனா
[[இந்தியர் நாடாளுமன்றம்]]
for மதுரை
பதவியில்
13 சூன் 2009 – 24 மே 2014
முன்னையவர்பொ. மோகன்
பின்னவர்கோபாலகிருஷ்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முத்துவேல் கருணாநிதி அழகிரி & (மு. க. அழகிரி)

30 சனவரி 1950 (1950-01-30) (அகவை 74)
கோபாலபுரம், மதராசு மாகாணம் (தற்போது சென்னை, தமிழ்நாடு, இந்தியா)
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம் (2000 வரை & 2001-2014)
துணைவர்காந்தி அழகிரி (1972 முதல்)
உறவுகள்• மு. க. செல்வி (இளம் சகோதரி)
மு. க. ஸ்டாலின் (இளம் சகோதரர்)
• மு. க. தமிழரசு (இளம் சகோதரர்)
பிள்ளைகள்தயாநிதி அழகிரி
• அஞ்சுகசெல்வி
• கயல்விழி
பெற்றோர்(s)தந்தை : மு. கருணாநிதி
தாய் : தயாளு அம்மாள்
வாழிடம்(s)மதுரை, தமிழ்நாடு, இந்தியா
As of 13 சூன், 2009

இளமைக்காலம்

இவர் தனது தந்தையின் சொந்த இல்லமான கோபாலபுரத்தில் 30-1-1950 ஆம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் இணையாருக்கு முதல் மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 3 பேர் மு. க. செல்வி என்ற ஒரு தங்கையும். பின்பு இவருடைய இரண்டாவது சகோதரர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் மூன்றாவது சகோதரர் மு. க. தமிழரசு, ஆகியோர் ஆவார்கள். மு.க. அழகிரி, பள்ளிப்படிப்பை சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிதுசுவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் பயின்று 1967ஆம் ஆண்டில் பள்ளியிறுதி வகுப்பில் தேறினார்.[2] பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று வரலாற்றில் கலை இளவர் பட்டம் பெற்றார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான காந்தி என்பவரை இவர் மணந்துகொண்டார். இவர்களுக்குக் கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். துரை என்கிற தயாநிதி இவர்களது ஒரே மகன். மு.க.அழகிரி 1980-ம் ஆண்டு முரசொலி பத்திரிகையைக் கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அது முதல் மதுரையிலேயே தங்கிவிட்ட அழகிரி, மதுரை சத்யசாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.[சான்று தேவை]

அரசியல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தார் . 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்தியப் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரான மறைந்த பி.மோகனை விட ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்று பணியாற்றியுள்ளார்.

குற்றச்சாட்டு

முன்னாள் தி.மு.க. அமைச்சர் தா. கிருட்டிணன், 2003 மே மாதம் 20ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மு.க.அழகிரி உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. முக்கிய சாட்சிகள் தமது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதனால் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் 8-3-2008ஆம் தேதி சித்தூர் நீதிமன்றம் விடுவித்தது.[3]

கட்சியிலிருந்து நீக்கம்

2000ஆம் ஆண்டு நீக்கப்பட்ட இவர், மிண்டும் மார்ச் 25, 2014 ஆம் தேதியன்று கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு, திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். [4]

மேற்கோள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-26. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  2. தினமணி, 2017 சனவரி 8, பக்.12, மதுரைப் பதிப்பு
  3. http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=734&ncat=&archive=1&showfrom=5/9/2008 தினமலர்
  4. http://www.seythigal.com/?p=2767
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._க._அழகிரி&oldid=3932610" இலிருந்து மீள்விக்கப்பட்டது