ரவூப் ஹக்கீம்

அப்துல் ரவூப் ஹக்கீம் (Abdul Rauff Hakeem, பிறப்பு: ஏப்ரல் 13, 1960), இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், முசுலிம் அரசியல்வாதியும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் 1994, 2000, 2001, 2004 தேர்தல்களிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.[1] இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3][4]

ரவூப் ஹக்கீம்
Rauff Hakeem
நகர அபிவிருத்தி, மற்றும் நீர்ப்பாசனம், நீர்விநியோக அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 சனவரி 2015
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
நீதி அமைச்சர்
பதவியில்
22 நவம்பர் 2010 – 28 டிசம்பர் 2014
முன்னவர் அத்தாவுட செனிவிரத்தின
தபால், தொலைத்தொடர்பு அமைச்சர்
பதவியில்
2005–2010
கண்டி மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 13, 1960 (1960-04-13) (அகவை 63)
நாவலப்பிட்டி
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சானாசு அக்கீம்
இருப்பிடம் 263, காலி வீதி, Colombo 03
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு றோயல் கல்லூரி
பணி வழக்கறிஞர்
தொழில் LLB, LLM
சமயம் இசுலாம்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தொகு

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் இறந்ததை அடுத்து இவர் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சி செய்து கொண்ட உடன்படிக்கைக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்பு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து அமைச்சரானார். 2014 டிசம்பர் 28 அன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசில் இருந்து விலகி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் கூட்டு எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது ஆதரவைத் தெரிவித்தது. ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.[5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவூப்_ஹக்கீம்&oldid=3569486" இருந்து மீள்விக்கப்பட்டது