ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் 'ஆசியாட்' (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ஆசிய ஒலிம்பிக் குழுவினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரம் புது தில்லியில் நடைபெற்றறது.முதல் ஆசிய விளையாட்டில் பதினோரு நாடுகள் பங்கு கொண்டன. 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியா நாட்டின் இஞ்சியோன் நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 04 2014 வரை நடைபெற்றன.ஆசிய விளையாட்டுப் இடைத்தொலைவு ஓட்டப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் சாந்தி சௌந்திரராஜன் ஆவர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

சுருக்கம்ஆசியாட் (Asiad)
முதல் நிகழ்வு1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், புது தில்லி, இந்தியா
ஒவ்வொரு4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்
கடைசி நிகழ்வு2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இஞ்சியோன், தென் கொரியா
காரணம்ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான பன்முக விளையாட்டுப் போட்டி நிகழ்வு



வெளி இணைப்புக்கள்தொகு