காசிநாதுனி நாகேசுவரர ராவ்

இந்திய அரசியல்வாதி

நாகேசுவர ராவ் பந்துலு என்றும் அழைக்கப்படும் காசிநாதுனி நாகேசுவரராவ் (asinadhuni Nageswararao) என்பவர் ஒரு இந்திய, பத்திரிகையாளரும், தேசியவாதியும், அரசியல்வாதியும், மற்றும் கதர் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். [1] இவர் இந்திய சுதந்திர இயக்கத்திலும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலும், உப்பு சத்தியாக்கிரகத்தின் மூலம் மகாத்மா காந்தியின் சட்ட ஒத்துழையாமை இயக்கம் உட்பட பல் போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். இவருக்கு தேசபந்து (வெகுஜனங்களின் உறவினர்) என்ற பட்டத்தை ஆந்திர மக்கள் வழங்கினார்கள். 1935 ஆம் ஆண்டில், ஆந்திர பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கியத்தின் இலக்கியத்தில் முனைவர் என்ற பட்டத்துடன் கலாப்பிரபூர்ணா என்று பட்டமும் வழங்கி கௌரவித்தது.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

நாகேசுவரராவ் காசிநாதுனி என்ரு பிரபலமாக அழைக்கப்படு நாகேசுவரராவ் பந்துலு காரு, 1867 மே 1 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் பாமரு என்ற வட்டத்தில் பெசரமில்லி என்ற கிராமத்தில் ஒரு பிராமணரான புச்சையா மற்றும் சியாமளாம்பா என்பருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை அவரது சொந்த ஊரிலும், பின்னர் மச்சிலிபட்ணத்திலும் பெற்றார். 1891 இல் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். விவேகவர்தினி இதழில் வெளிவந்த கந்துகூரி வீரேசலிங்கத்தின் கட்டுரைகள் இவரைப் பாதித்தன.

வணிக தொகு

சென்னையில் வணிகத்தில் சிறிது காலம் ஈடுபட்டப் பிறகு, இவர் கொல்கத்தாவுக்குச் சென்று ஒரு மருத்துவ மருத்துவத்தில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர், இவர் ஒரு அலுவலகத்தில் வேலை செய்ய மும்பை சென்றார். ஆனால், இவர் அங்கு அமைதியற்றவராகவும், தனது சொந்தத் தொழிலைத் தொடங்க ஆர்வமாகவும் இருந்தார். இவர் 1893 ஆம் ஆண்டில் அம்ருதாஞ்சன் வலி தைலம் என்பதையும் கண்டுபிடித்து அம்ருதாஞ்சன் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார். இது விரைவில் மிகவும் பிரபலமான மருந்தாக மாறியது. மேலும், இவரை கோடீஸ்வரராக்கியது. [2] [3]

பத்திரிகை துறைக்குள் நுழைதல் தொகு

இவர் மும்பையிலுள்ள தெலுங்கு மக்களை அணுகி, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். மேலும், அவர்களின் நலனுக்காக பணியாற்றினார். சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு 1907 இல் சூரத்தில் நடந்த தேசிய காங்கிரசு கூட்டத்தில் கலந்து கொண்டார். சுதந்திரப் போராட்டத்திற்காக திறம்பட பிரச்சாரம் செய்ய ஒரு தெலுங்கு மொழி இதழின் அவசியத்தை இவர் உணர்ந்து 1909 இல் மும்பையில் ஆந்திர பத்ரிகா என்ற ஒரு வார இதழை நிறுவினார். 1914 ஆம் ஆண்டில், இவர் பத்திரிகையை சென்னைக்கு மாற்றி, அதை தினசரி செய்தித்தாளாக மறுவடிவமைத்தார். பின்னர், 1969 இல், ஆந்திர பத்ரிகா இதழை டி. வி. கிருஷ்ணா என்பவர் தலைமையில் புதுதில்லியில் ஒரு அலுவலகத்தை நிறுவினார். ஜனவரி 1924 இல், ராவ் பாரதி என்ற ஒரு தெலுங்கு இதழை தொடங்கினார் .

ஆந்திர மாநிலக் கோரிக்கை தொகு

சென்னை மாகாணத்திலிருந்து ஒரு தனி ஆந்திர மாநிலத்திற்கான ஆந்திர இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார். தனி ஆந்திர மாநிலத்தின் தேவை குறித்து பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இந்த கட்டுரைகளில் பலவற்றின் ஆசிரியராகவும் இருந்தார்.

ஆந்திர கிரந்தா மாலா தொகு

ஒரு பத்திரிகையாளர் என்பதைத் தவிர, நாகேசுவர ராவ் தெலுங்கு இலக்கியத்தின் வெளியீட்டாளராகவும் இருந்துள்ளார். 1926 ஆம் ஆண்டில், 'ஆந்திர கிரந்தா மாலா' என்ற ஒரு பதிப்பகத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் பல தெலுங்கு பாரம்பரிய மற்றும் நவீன எழுத்துக்களை வளர்ச்சியடையச் செய்வதைத் தவிர 20 புத்தகங்களையும் வெளியிட்டது. அதன் வெளியீடு சாமானிய மக்களை அடையும் பொருட்டு குறைந்த விலையில் இருந்தது. நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில் இவர் மேற்கொண்ட உழைப்பின் காரணமாக, ஆந்திர மாவட்டங்களில் 120 நூலகங்கள் தோன்றின.

அரசியல் தொகு

நாகேசுவர ராவ் 1924 மற்றும் 1934 க்கு இடையில் நான்கு முறை ஆந்திர மாநில காங்கிரசு குழுவின் தலைவராக இருந்துள்ளார். காந்தி தலைமையிலான 1930 களின் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட இவர், இதற்காக ஆறு மாதங்கள் சிறையில் கழித்தார். சிறையில் இருந்தபோது, இந்தியாவின் புனித நூலான பகவத் கீதை குறித்து ராவ் ஒரு விளக்கத்தை எழுதினார். பகவத்-கீதை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்ததல்ல, மாறாக முழு மனிதகுலத்திற்கும் யோகாவின் வேதமாக முழு உலகின் ஆன்மீக அறிவொளி மற்றும் செழிப்புக்கானது என்று இவர் இதில் வாதிட்டார்.

அங்கீகாரம் தொகு

அவரை நினைவுகூரும் வகையில் அஞ்சர் தலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இவரது நினைவாக சென்னை மைலாப்பூரில் நான்கு ஏக்கர் அளவில் ஒரு பூங்கா உருவாக்கப்பட்டு அதற்கு தேசோதாரக நாகேஸ்வர ராவ் பூங்கா என்ற பெயரிடப்பட்டது.

சிரீபாக் குடியிருப்பு தொகு

காசிநாதுனி குடும்ப குடியிருப்பு ஒரு அழகான மற்றும் புகழ்பெற்ற கட்டிடமாகும் சென்னையின் லஸ் தேவாலயச் சாலையில் எண் 103 இல் இது அமைந்துள்ளது. கம்பீரமான தோட்ட வீடு முதலில் நீதிபதி பி. ஆர். சுந்தர் ஐயரால் கட்டப்பட்டது. 1932 டிசம்பர் 23 மற்றும் 24 தேதிகளில் மகாத்மா காந்தியின் வருகையுடன் இந்த வீடு தேசபக்தி நடவடிக்கைகளின் மையமாக மாறியது. சென்னையில் உள்ள சிறீ பாக் இல்லத்தை சுற்றியுள்ள இந்த பகுதி இவரது நினைவாக நாகேசுஸ்வரபுரம் என்று அழைக்கப்பட்டது.

சிரீபாக் ஒப்பந்தம் தொகு

சிரீபாக் ஒப்பந்தம் என்பது 1937 நவம்பர் 16, அன்று ஸசிரீாக் இல்லத்தில் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்,.மேலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் கே. கோட்டி ரெட்டி, கல்லூரி சுப்பா ராவ், எல்.சுப்பராமி ரெட்டி, போகராஜு பட்டாபி சீதாராமையா, கோண்டா வெங்கடப்பையா, பப்புரி ராமாச்சா ஆர்.வெங்கடப்ப நாயுடு, எச்.சீதராம ரெட்டி. இது கரையோரப் பகுதிகளுக்கு இணையாக இராயலசீமை பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு ஒப்பந்தமாகும். மேலும் ஆந்திரா உருவாவதற்கு முன்னர் அனைத்து பிராந்தியங்களிடையேயும் ஒருமித்த கருத்தை கொண்டுவருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக சென்னை மாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை ஒருங்கிணைப்பது மற்றும் நிஜாம் ஆட்சிப் பகுதிகளை ஒன்றிணைத்தல் ஆகியவை முக்கிய காரணமாகும். [4]

இறப்பு தொகு

நாகேசுவரராவ் காசிநாதுனி 1938 ஏப்ரல் 11 அன்று இறந்தார். இவரது மரணத்திற்குப் பிறகு இவரது மருமகன் மற்றும் மருமகன் (சகோதரியின் மகன்) எஸ்.சம்பு பிரசாத் (சிவலெங்கா சம்புபிரசாத்) ஆந்திர பத்ரிகா குழு வெளியீடுகள் மற்றும் அம்ருதாஞ்சன் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு தலைமையிடத்திற்கு வந்தார். [4] [2]

குறிப்புகள் தொகு

  1. G. Somasekhar. "The Role Telugu Press In The Indian Freedom Movement" (PDF). Shodhganga. Sri Venkateswara University, Department of History. பார்க்கப்பட்ட நாள் 27 December 2017.
  2. 2.0 2.1 P. Rajeswar Rao (1991). Great Patriots of India Vol 1. New Delhi: Mittal Publications. பக். 22. https://books.google.com/books?id=eTrs9MF9374C&pg=PA22. 
  3. S. Muthiah (2008). Madras Rediscovered. Chennai, India: East West. 
  4. 4.0 4.1 C. V. Raja Gopala Rao (2004). Andhra Patrika Charitra. Hyderabad: Press Academy of Andhra Pradesh. பக். 327.