1850கள்
பத்தாண்டு
1850கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1850ஆம் ஆண்டு துவங்கி 1859-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
தொகுநுட்பம்
தொகு- பெசெமெர் முறை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உருக்கு தயாரிப்பு வளர்ச்சியடைந்தது.
- இலங்கையில் முதலாவது தொலைத்தந்தித் தொடர்பு கொழும்புக்கும் காலிக்கும் இடையிலும், பின்னர் கண்டிக்கும் மன்னாருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது (1858).
- தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
- இலங்கையில் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது (1858).
- முதலாவது டிரான்ஸ்-அட்லாண்டிக் தொலைத் தந்திக் கம்பி பதியப்பட்டது.
- எலீஷா ஓட்டிஸ் என்பவர் முதலாவது பாதுகாப்பான பாரந்தூக்கியை அறிமுகப்படுத்தினார்.
அறிவியல்
தொகு- 1959 - சார்ல்ஸ் டார்வின் தனது புகழ்பெற்ற உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார்.[1]
அரசியல், போர்
தொகு- கிரிமியப் போர் (Crimean war, 1854-1856): ரஷ்யாவுக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்றது. கூட்டுப் படைகளில் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஓட்டோமான் பேரரசு ஆகியன இடம்பெற்றன. போர் முழுமையும் கருங்கடலின் வடக்குக் கரைப் பகுதியான கிரிமியாவிலேயே இடம்பெற்றன.
- இந்திய எழுச்சி (Indian Mutiny): இந்தியாவில் பிரித்தானியக் குடியேற்றவாதத்துக்கெதிரான எழுச்சி.
- முகலாயப் பேரரசின் வீழ்ச்சி.
- மல்தாவியா மற்றும் வலாச்சியா ஆகியன ருமேனியா நாடாக இணைந்தன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Coyne, Jerry A. (2009). Why Evolution is True. Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 17. ISBN 0-19-923084-6.
In The Origin, Darwin provided an alternative hypothesis for the development, diversification, and design of life. Much of that book presents evidence that not only supports evolution but at the same time refutes creationism. In Darwin's day, the evidence for his theories was compelling but not completely decisive.