ஆரணி நகராட்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி

ஆரணி நகராட்சி (ஆங்கிலம்:Aarani Municipality) இந்தியாவில், தமிழ் நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தில் இந்த நகராட்சி அமைந்துள்ளது. 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய தேர்வு நிலை  நகராட்சியும் உள்ளது

ஆரணி நகராட்சி
Aarani Municipality
சில்க் சிட்டி
தேர்வு நிலை நகராட்சி
ஆரணி நகராட்சி is located in தமிழ் நாடு
ஆரணி நகராட்சி
ஆரணி நகராட்சி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆரணி நகராட்சி is located in இந்தியா
ஆரணி நகராட்சி
ஆரணி நகராட்சி
ஆரணி நகராட்சி (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°40′30″N 79°17′04″E / 12.6751077°N 79.2843245°E / 12.6751077; 79.2843245
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மாகாணம்தொண்டை நாடு
சட்டமன்றத் தொகுதிஆரணி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
வருவாய் கோட்டம்ஆரணி வருவாய் கோட்டம்
தோற்றுவித்தவர் தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைதேர்வு நிலை நகராட்சி
 • நிர்வாகம்ஆரணி நகராட்சி
 • முதலமைச்சர்திரு.எடப்பாடி.பழனிச்சாமி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.சேவூர் ராமச்சந்திரன்
 • மாவட்ட ஆட்சியர்திரு பி. முருகேஷ், இ.ஆ.ப.
 • நகராட்சித் தலைவர்திரு.அசோக் குமார்
பரப்பளவு[1]
 • தேர்வு நிலை நகராட்சி35.64 km2 (13.76 sq mi)
பரப்பளவு தரவரிசை151 மீட்டர்கள்
ஏற்றம்171 m (561 ft)
மக்கள்தொகை (2011)
 • தேர்வு நிலை நகராட்சி92,375
 • தரவரிசை39
 • பெருநகர்1,19,274
இனங்கள்ஆரணிக்காரன்
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு632301, 632316
இந்தியாவில் தொலைபேசி எண்கள்04173
வாகனப் பதிவுTN 97
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
இணையதளம்ஆரணி நகராட்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இரண்டாவது வருவாய் கோட்டமான வருவாய் கோட்டம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது. தற்போது புதிய பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி இங்கு அமைந்துள்ளது. இந்நகராட்சியில் புகழ்பெற்ற வேம்புலியம்மன் ஆலயம் மற்றும் புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம் மற்றும் நிர்வாக வசதிக்காக 2 பேருந்து நிலையங்கள் இங்கு அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி செய்யாறு ஆறு மற்றும் பாலாற்றின் துணை ஆறான கமண்டல நாகநதி ஆறு இங்கு அமைந்துள்ளது.

அமைவிடம் தொகு

இவ்வூரின் அமைவிடம் 12.67°N 79.28°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151 மீட்டர் (495 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஆரணி நகராட்சி கமண்டல நாகநதியின் தெற்கே அமைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 முக்கிய நகரங்களில் ஆரணி இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு காஞ்சிபுரத்திற்க்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு மற்றும் பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் இந்த ஆரணி நகரம். ஆரணி பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றிருப்பதனால் ஆரணிக்கு இன்னும் ஒரு பெயரும் உண்டு. அது ஆரணி பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி) எனவும் அழைப்பர். அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆரணி 76 வது பெரிய நகரமாக அமைந்துள்ளது.

மக்கள் தொகை தொகு

2 [1] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆரணி நகரம், 33 வார்டுகளில் இருந்து மக்கள் தொகை 63,671. ஆண், பெண் விகிதம், 1,036 பெண்களுக்கு ஒவ்வொரு 1,000 ஆண்கள் ஆகும். தேசிய சராசரியை விட 929 அதிகம், ஆனால் நீட்டிக்கப்பட்ட நகரம் உட்பட அனைத்து துணை நகர்ப்புற பகுதியில் இருந்து மக்கள் தொகை 92,375. ஆறு வயதுக்கு  கீழ் 6,346 பேரும் அவர்களில்  3,200 ஆண்களும்  மற்றும் 3,146 பெண்களும் ஆவர். சராசரி கல்வியறிவு சதவிகிதம்  76.9% . இது தேசிய சராசரியை ஒப்பிடும்போது 72.99%. மொத்தம் 14889 குடும்பங்களில்  23,298 தொழிலாளர்களில், 153  பேர்பயிர், 343 பேர் முக்கிய விவசாய தொழிலாளர்கள், 2,185 பேர் வீட்டு தொழில்கள், 17,919 பேர் மற்ற தொழிலாளர்கள், 2,698 பேர்குறு தொழிலாளர்கள், 33 பேர்குறு விவசாயிகளும், 100 பேர்குறு வேளாண் தொழிலாளர்களும், 224 பேர்குறு தொழிலாளர்கள் வீட்டு தொழில்கள் மற்றும் 2,341 பிற குறு தொழிலாளர்கள். என உள்ளனர்.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, அரணி (எம்) இருந்தது மத வாரியாக 89.16% இந்துக்கள், 7.39% முஸ்லிம்கள், 1.8% கிரிஸ்துவர், 0.01% சீக்கியர்கள், 0.01% புத்த மதத்தினர், 1.43% சமணர்கள், 0.19% ஆவர்.

நகராட்சி நிர்வாகம் தொகு

  • ஆரணி பல்லவர்கள், மற்றும் தொண்டை நாட்டினை ஆண்ட மன்னர்கள் மற்றும் சிவாஜி, ஜாகீர் ஆகிய மன்னர்கள் ஆண்டனர்.

பட்டு மற்றும் அரிசி நகரம் தொகு

  • நகரத்தில் பட்டு நெசவாளர்கள் நிபுணத்துவம் செய்யும் பட்டு புடவைகள், கைத்தறிகள் உள்ளன. அடிக்கடி பயன்படுத்தப்படும் நெசவு, என்றாலும் சமீபத்தில் இயந்திரமயமான முறைகள் போன்ற மின் தறிகள் உள்ளன. இந்தியாவின் பட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் நகரம் ஆரணி ஆகும்.
  • ஆரணி சேலை (Arani sarees) என்பது இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஆரணி நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் சேலை ஆகும். இந்த சேலைகளை ஆரணியில் உருவாக்கப்படுவதால் ஆரணியை ஆரணி சில்க் சிட்டி (ARANI SILK CITY) எனவும் அழைப்பர்.
  • ஆரணி நகரம் அரிசி, விவசாய மற்றும் நெசவு பட்டுக்கு போன்றவைக்கு புகழ்பெற்ற ஊராகும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக முக்கிய பங்களிப்புவருவாய் நகரம் ஆகும்.
  • இங்கு 250க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. மாநில அளவில் அரிசி தயாரிக்க தஞ்சாவூருக்கு அடுத்து இரண்டாவது இந்நகரம் ஆகும்.[சான்று தேவை]
  • ஆரணி அரிசி (Arni Rice) என்பது இந்தியநாட்டில் உள்ள தமிழ் நாட்டைச் சேர்த்த ஓர் நகரமான ஆரணியில் தயாரிக்கப்படும் தரமான அரிசி ஆகும். இந் நகரில் நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன. மேலும் இந் நகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இவ்வரிசி விற்பனைக்கு செல்கிறது. இவை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நெல் வகைகள் இங்கிருக்கும் அரிசி ஆலைகளில் அரைக்கப்படுகிறது. இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீரின் இராசிதான் அரிசி தரமாக இருக்கக் காரணம் என்று மக்கள் நம்புகின்றனர்.
  • கடந்த ஆகஸ்ட் மாதம் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியில் ஆரணி அரிசி முக்கிய பங்கு வகித்துள்ளது. அரிசி உற்பத்தியில் ஆரணி அரிசியானது தஞ்சாவூர் அரிசியை பின் தள்ளியுள்ளது.
  • தற்போது தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் தான் முன்னனியில் உள்ளது.அரிசி உற்பத்தியில் முன்னணி பெற்றதால் ஆரணி அரிசிக்கு ஜிம் விருதும் மற்றும் தேசிய அளவில் தேசிய விருதும் 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது.

புறநகர் பகுதி தொகு

ஆரணியின் புறநகர் பகுதிளான சத்திய விஜய நகரம், இரும்பேடு, பையூர், வடுகசாத்து, விளை சித்தேரி, தச்சூர், ராட்டிணமங்கலம், அண்ணா நகர், முள்ளிப்பட்டு, ஹவுசிங் ஃபோர்டு, சேவூர், அக்ரா பாளையம், மெய்யூர், அடையபுலம், வேலப்பாடி, ஆகிய பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகள் ஆரணி நகரை சார்ந்து அமைந்துள்ளது. இந்த பகுதிகளிலிருந்து தோராயமாக 45000 பேர் வசிக்கின்றனர். இவர்களின் கோரிக்கை ஆரணி நகராட்சி எல்லைக்குள் வரும்படி சேர்க்க வேண்டும் என்பது தான். அப்படி இந்த பகுதிகளை ஆரணி நகராட்சியும் சேர்த்தால் ஆரணியானது பெருநகராட்சியாகவோ அல்லது மாநகராட்சியாகவோ வழி வகுக்கும்.

சான்றுகள் தொகு


  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_நகராட்சி&oldid=3866739" இலிருந்து மீள்விக்கப்பட்டது