ஒன்பதாம் சாமராச உடையார்

மைசூர் மன்னர்

சிறீமத் ராசாதிராச ராச பரமிசிவர ராச மார்த்தாண்ட பரவ்த பிரதாபபட்டிமவிரா நரப்பட்டி மகிசுர சிம்மமானருடரகிருவா மகாராச சிறீ காச சாமராச உடையார் (28 பெப்ரவரி 1774 – 17 ஏப்ரல் 1796) என்பவர் மைசூரின் மன்னராக 1776 முதல் 1796வரை இருந்தவர்.[1] இவர் மூன்றாம் கிருட்டிணராச உடையாரின் தந்தையாவார். இவர் ஒன்பதாம் சாமராச உடையார் என்று அழைக்கப்படுகிறார்.

ஒன்பதாம் சாமராச உடையார்
மைசூர் மன்னர்
ஆட்சி1776 – 1796
முடிசூட்டு விழா27 செப்டம்பர் 1776, சிறீரங்கப்பட்டணம்
வாரிசு(கள்)மூன்றாம் கிருட்டிணராச உடையார்
அரச குலம்உடையார் மரபு
தந்தைசிக்க தேவராச அர்ஸ்
தாய்ஹொன்னஜம்மா
பிறப்பு28 பெப்ரவரி 1774
சாம்ராஜ்நகர்
இறப்பு17 ஏப்ரல் 1796
சிறீரங்கப்பட்டண அரண்மனை
சமயம்இந்து
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

வாழ்க்கை தொகு

இவர் கருகியள்ளி குடும்பத்தைச் சேர்ந்த, சிக்க தேவராச அர்ஸ் என்பவரின் மகனாவார். எட்டாம் சாமராச உடையாரின் மறைவுக்குப் பிறகு, மகாராணிலெட்சுமி அம்மணி தேவியால் (மறைந்த மன்னர் இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் மனைவி) தத்து எடுக்கப்பட்டார்.

இவரும் சுயேச்சையாக செயல்பட முடியாதவராக இவருக்கு முன்னாள் இருந்த மன்னர்களான இரண்டாம் கிருட்டிணராச உடையார், நஞ்சராச உடையார், எட்டாம் சாமராச உடையார் ஆகியோர் போன்று ஐதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோருக்கு அடங்கியவராக இருந்தார்.

சனவரி 1786க்கு பிறகு, பெயருக்கு மன்னர் என்ற நிலையும் இல்லாமல் மன்னரின் அனைத்து உரிமைகளும் திப்பு சுல்தானால் பறிக்கப்பட்டு, தன்னையே பாதூசா என்று அறிவித்துக்கொண்டு திப்பு சுல்தான் மன்னனானார்.

மன்னர் உரிமைகளை திப்பு சுல்தான் பறித்த பிறகு, இவர் சிறீரங்கப்பட்டிண அரண்மனையில் 17 ஏப்ரல் 1798இல் பெரியம்மை நோயாலோ திப்புவால் கொல்லப்பட்டோ இறந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

உடையார் மரபினர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட பின் திப்பு சுல்தான் மைசூர் சுல்தானகத்தின் ஒரே மன்னராக போரில் கொல்லப்பட்ட 1799ஆம் ஆண்டு வரை இருந்தார்.

குறிப்பு தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்பதாம்_சாமராச_உடையார்&oldid=3547072" இலிருந்து மீள்விக்கப்பட்டது