க. பொன்முடி
க. பொன்முடி (இயற்பெயர்: தெய்வசிகாமணி) (K. Ponmudi) ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் தனது இளமைக்காலத்திலேயே திராவிடர் கழகம், பெரியார் கொள்கை மீது பற்று கொண்டார். 1984-இல், அரசியல் களப்பணியாற்றும் நோக்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அன்றைய தலைவர் கருணாநிதி முன்னிலையில் இணைந்தார். பிறகு, 1989 சட்டமன்றத் தேர்தலில், திமுகவில் கருணாநிதி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது பொன்முடி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, அந்த ஆட்சிக் காலத்திலேயே அமைச்சராகவும் பொறுப்பேற்று கொண்டார். தற்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் திமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் உள்ளார்.
க. பொன்முடி | |
---|---|
வனத்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 29 செப்டம்பர் 2024 – 27 ஏப்ரல் 2025 | |
உயர் கல்வி அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 7 மே 2021 – 21 டிசம்பர் 2023 | |
உயர் கல்வி அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 13 மே 2006 – 15 மே 2011 | |
போக்குவரத்து அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 13 மே 1996 – 13 மே 2001 | |
சுகாதாரத்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தெய்வசிகாமணி ஆகத்து 19, 1950 டி. எடையார், திருக்கோயிலூர், விழுப்புரம், தமிழ்நாடு ![]() |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | விசாலாட்சி பொன்முடி |
பிள்ளைகள் |
|
பெற்றோர் | தந்தை : கந்தசாமி தாயார் : மரகதம் அம்மாள் |
கல்வி | கல்வி வரலாற்றில் முனைவர் பட்டம் |
பணி |
|
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டு திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இதே திருக்கோயிலூர் தொகுதியில் மீண்டும் வென்று, ஆறாவது முறையாக ஆட்சியமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில், 2021 மே 7 அன்று உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.[3]
குடும்பம்
தொகுபொன்முடி விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகிலான டி. எடையார் என்னும் ஊரில் ஆகத்து 19, 1950-ஆம் ஆண்டு, கந்தசாமி – மரகதம் அம்மாள் இணையருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தெய்வசிகாமணி என்பதாகும். இவருக்கு முன்பு மூன்று அண்ணன்கள் உள்ளனர். பொன்முடியின் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியராகவே பணியாற்றியவர்கள். இவரது உடன் பிறந்தோர் அனைவரும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். பொன்முடி வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலைப் பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்று சிலகாலம் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
பொன்முடியின் மகன் மருத்துவர். கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
தேர்தலில் போட்டியிட்ட ஆண்டுகள்
தொகுஆண்டு | தொகுதி | முடிவு |
---|---|---|
1989 | விழுப்புரம் | வெற்றி |
1991 | விழுப்புரம் | தோல்வி |
1996 | விழுப்புரம் | வெற்றி |
2001 | விழுப்புரம் | வெற்றி |
2006 | விழுப்புரம் | வெற்றி |
2011 | விழுப்புரம் | தோல்வி |
2016 | திருக்கோயிலூர் | வெற்றி |
2021 | திருக்கோயிலூர் | வெற்றி |
குற்ற வழக்குகள்
தொகுநில அபகரிப்பு வழக்கு
தொகு1996 - 2001 காலகட்டத்தில், திமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் பின்புறமுள்ள ஸ்ரீநகர் காலனி விநாயகர் கோயில் எதிரே உள்ள தெருவில் சுமார் 3,630 சதுர அடி பரப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது மாமியார் சரஸ்வதி பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, அக்காலி நிலத்தில் ரூபாய் 35 இலட்சம் செலவில் கட்டிடம் கட்டியது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சைதை கிட்டு உள்ளிட்ட பத்து பேர் மீது 2003 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயவேல் 6 சூலை 2023 அன்று அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த எந்தவிதமான ஆவணங்களும் இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை; மேலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தார்.[4]
செம்மண் குவாரி வழக்கு
தொகு2006 - 2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணியும் உறவினர்களும் விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாகச் செம்மண் எடுத்த வகையில் ரூபாய் 28.38 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர்கள் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 19 சூன் 2023 அன்று பொன்முடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ள ஆணையிட்டது.[5][6][7][8]
26 சூலை 2024 அன்று அமலாக்கத் துறையினர், செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூபாய் 14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கினர்.[9][10][11][12]
சொத்துக் குவிப்பு வழக்கு
தொகு1996 - 2001 ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1.36 கோடி மதிப்பிலான சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 28 சூன் 2023 அன்று பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சியை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்தது.[13]
சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணை
தொகுதமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் இலஞ்ச ஒழிப்புத் துறை பொன்முடியின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இதனை 10 ஆகத்து 2023 அன்று தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால், வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை கையாளும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.[13]
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
தொகு2006 - 2011 காலகட்டத்தின் மு. கருணாநிதி அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடியின் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில், வேலூர் மாவட்ட நீதிமன்றம், பொன்முடி குற்றமற்றவர் என்று வழங்கிய தீர்ப்பை இரத்து செய்து, 19 டிசம்பர் 2023 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[14][15][16][17] 21 திசம்பர் 2023 அன்று பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் முறையே மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் முறையே ரூ.50 இலட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[18] எனவே பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார்.[19] பொன்முடி வகித்த உயர் கல்வித் துறையை அமைச்சர் இராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது.[20] 11 மார்ச் 2024 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, இடைக்காலப் பிணை வழங்கியது[21][22] இதனையடுத்து, பொன்முடி மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்க இயக்குனரகம் சோதனை
தொகு17 சூலை 2023 அன்று அமலாக்க இயக்குநரக அதிகாரிகள், அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய வீடுகள், நிறுவனங்கள், கட்டிடங்களில் தேடுதல் சோதனைகள் நடத்தினர். விக்கிரவாண்டி சாலையில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. இச்சோதனைகளில் முக்கிய ஆவணங்களும் இந்திய ரூபாய் 81.7 இலட்சம் மதிப்பிலான பவுண்டு பணத்தாள்களும் இந்திய ரூபாய் 42 கோடி மதிப்பிலான வங்கி நிரந்தர வைப்பு நிதிகளுக்கான ஆவணங்களும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.[23]
ஆபாசப் பேச்சு மற்றும் கட்சிப் பதவி பறிப்பு
தொகுதந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அரசியல் மேடையில் அமைச்சர் க. பொன்முடி பாலியல் தொழிலாளர்களை தொடர்புறுத்தி, சைவம் மற்றும் வைணவம் குறித்து ஆபாசமாக பேசினார்.[24] இதனால் 11 ஏப்ரல் 2025 அன்று திமுக கட்சித் தலைமை அமைச்சர் க. பொன்முடியை திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக்கியது.[25][26][27]
வழக்கு
தொகுக. பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[28]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Correspondent, Vikatan (2016-05-02). "மண்ணின் மைந்தனாக வெற்றி பெறுவாரா பொன்முடி? - ஸ்டார் வேட்பாளர் ஸ்டேட்டஸ்!". https://www.vikatan.com/. Retrieved 2025-04-12.
{{cite web}}
:|last=
has generic name (help); External link in
(help)|website=
- ↑ "திருக்கோயிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி". Archived from the original on 2022-03-15. Retrieved 2018-03-06.
- ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
- ↑ "நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை". Hindu Tamil Thisai. 2023-07-06. Retrieved 2025-04-12.
- ↑ டிவி, தந்தி (2023-06-19). "இன்றைய தலைப்பு செய்திகள் (19-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines | Today Headlines night headlines". www.thanthitv.com. Retrieved 2025-04-12.
- ↑ "Blow to Tamil Nadu minister Ponmudi as court dismisses plea in corruption case". India Today (in ஆங்கிலம்). 2023-06-19. Retrieved 2025-04-12.
- ↑ manikandaprabu.s@asianetnews.in. "அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!". Asianet News Tamil. Retrieved 2025-04-12.
- ↑ DIN (2021-01-21). "செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜர்". Dinamani. Retrieved 2025-04-12.
- ↑ "பொன்முடியின் ரூ.14 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை". Hindu Tamil Thisai. 2024-07-27. Retrieved 2025-04-12.
- ↑ DIN (2024-07-26). "அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கம்". Dinamani. Retrieved 2025-04-12.
- ↑ "பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம்". nakkheeran (in ஆங்கிலம்). 2024-07-26. Retrieved 2025-04-12.
- ↑ மலர், மாலை (2024-07-26). "அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் | Assets worth Rs 14 crore belonging to Minister Ponmudi have been frozen". www.maalaimalar.com. Retrieved 2025-04-12.
- ↑ 13.0 13.1 "தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன்?". BBC News தமிழ். 2023-08-11. Retrieved 2025-04-12.
- ↑ "சொத்து குவிப்பு வழக்கு | அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து; டிச.21-ல் தண்டனை விவரம்: ஐகோர்ட்". இந்து தமிழ் திசை. 2023-12-19. Retrieved 2025-04-12.
- ↑ C, Jeyalakshmi (2023-12-19). "அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து.. சொத்துக்குவித்தது உறுதி.. 21ல் தண்டனை.. ஹைகோர்ட் அதிரடி". Retrieved 2025-04-12.
- ↑ "Trouble for DMK Minister K Ponmudi after Madras HC sets aside acquittal in Disproportionate Assets case". ANI News (in ஆங்கிலம்). Retrieved 2025-04-12.
- ↑ "'Thank God we have judges like Justice Venkatesh': SC refuses to entertain Tamil Minister Ponmudi's plea against HC order on revision in DA case". The Indian Express (in ஆங்கிலம்). 2023-11-07. Retrieved 2025-04-12.
- ↑ "Madras HC sentences Tamil Nadu Minister K Ponmudi and his wife to 3 years imprisonment in corruption case". LawBeat (in ஆங்கிலம்). Retrieved 2025-04-12.
- ↑ "தமிழ்நாடு: ஊழல் வழக்கில் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி சிறை செல்வதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?". BBC News தமிழ். 2023-12-21. Retrieved 2025-04-12.
- ↑ DIN (2023-12-21). "அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள்: ஆளுநர் ஒப்புதல்". Dinamani. Retrieved 2025-04-12.
- ↑ Supreme Court stays jail term of former Tamil Nadu Minister Ponmudy in disproportionate assets case
- ↑ Mohanty, Suchitra Kalyan (2024-03-11). "Relief for ex-TN minister Ponmudi as SC stays his conviction in corruption case". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-04-12.
- ↑ "பொன்முடி: 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்". BBC News தமிழ். 2023-07-17. Retrieved 2025-04-12.
- ↑ பொன்முடி பேசிய ஆபாச பேச்சு
- ↑ அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு
- ↑ DMK minister Ponmudi loses key post over joke linking religion with sex
- ↑ ஆபாச பேச்சாளர் பொன்முடி; இன்னும் அமைச்சர் பதவியில் நீடிப்பதால் தி.மு.க., அரசுக்கு தான் கெட்ட பெயர்!
- ↑ வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிய காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு