ஏலகிரி மலை
ஏலகிரி (Yelagiri) என்னும் மலைவாழிடம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில், உள்ளது[3]. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர்[4].
ஏலகிரி மலை | |
— நகரம் — | |
ஏலகிரி ஏரி | |
அமைவிடம் | 12°34′41″N 78°38′27″E / 12.578104°N 78.640737°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 1,048 மீட்டர்கள் (3,438 அடி) |
கண்ணோட்டம் தொகு
ஏலகிரி மலை, ஊட்டி, கொடைக்கானல் போல் ஒரு வளர்ச்சியுற்ற சுற்றுலா இடமாக இல்லாவிடினும், துணிவு விளையாட்டுகளான ஏவூர்தி நழுவுதல் (Para Gliding), மலையேற்றம் ( Trekking) போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் சுற்றுலா இடமாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன[5]. ஏலகிரியில் 14 சிறு கிராமங்களும், சில கோவில்களும், காலடி வைத்தாலே கர்ம வினைகள் தீரக்கூடிய ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் இங்குதான் அமைய பெற்றுள்ளது.பிரதி மாதம் தோறும் பௌர்ணமி மற்றும் அமாவாஸ்யை தினங்களில் மட்டுமே திறக்கப்படும் பூலோக புண்ய ஆஷ்ரம் ஆகும் இது.18 வருட காலமாக இது மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.இதை ஸ்தாபித்தவர் மஹாவதாரம் பகவான் ஸ்ரீஸத்யம் அவர்கள் ஆவார்கள்.
அழகுற அமைந்துள்ளன. அடிப்பகுதி வட்டவடிவமாகவும் பக்கவாட்டில் செங்குத்தான பாறைகளையும் கொண்டு பார்ப்பதற்கு ஒரு பீடபூமி போல இம்மலை காட்சியளிக்கிறது. மலையின் வடக்கு மற்றும் வடகிழக்குச் சரிவுகளிலும் , மலை உச்சியிலும் பசுமைமாறா மரங்கள் காணப்படுகின்றன. பொதுவாக இம்மலைப்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 31 பாகை செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 பாகை செல்சியசும் பதிவாகிறது.
ஏலகிரி மலைக்குச் செல்லும் வசதி தொகு
வேலூர், சென்னை, சோலையார் பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு பேருந்துகள் உண்டு. 19 கி.மீ தொலைவில் உள்ள சோலையார் பேட்டை இரயில் நிலையமே அருகில் உள்ள இரயில் நிலையம். சென்னை விமான நிலையத்தில் இருந்து 219 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூரு விமானநிலையத்தில் இருந்து 193 கி.மீ தொலைவிலும் ஏலகிரி மலை அமைந்துள்ளது.
மக்கள் தொகு
சுமார் 200 முதல் நானூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இம்மலையில் வாழ்ந்து வருகின்றனர். இன்று சுமார் 4000 பேர் இம்மலை முழுவதுமாக விரவியுள்ளனர். மக்களில் பெரும்பாலானவர்கள் இந்து சமயத்தைச் சேர்ந்த வெள்ளாளர்கள் எனப்படும் மலைவாழ் மக்களாக உள்ளனர்.[சான்று தேவை] இருளர்கள் என்று அழைக்கப்படும் மலைவாழ் குழுக்களும் இங்குள்ளனர்.திப்பு சுல்தான் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் இப்பீடபூமியில் குடியேறி வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
சுற்றிப்பார்க்க தொகு
சலகாம்பாறை அருவி தொகு
ஏலகிரி மலையின் மறுபுறத்தில் மலையின் கீழ்ப்பகுதில் சமவெளியிலிருந்து சற்று உயரத்தில் சலகம்பாறை அருவி உள்ளது. திருப்பத்துாரிலிருந்து பிச்சனுார் வழியே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏலகிரி மலையில் உருவாகும் அட்டாறு, சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவி சலகம்பாறை அருவி என்று அழைக்கப்படுகிறது. மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக ஆறு வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.ஏலகிரி மலையின் மேல்பகுதியில் உள்ள நிலாவூரில் இருந்து நேரடியாக 6 கி.மீ மலைத்தடம் வழயே கீழிறங்கினால் அருவியை அடையலாம் எனினும் இவ்வழி இப்போது மூடப்பட்டுள்ளது. சிவலிங்க வடிவத்தில் ஒரு முருகர் கோவில் அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.
பூங்கானூர் ஏரியும் குழந்தைகள் பூங்காவும் தொகு
பூங்கானூர் ஏரி கட்டப்பட்ட ஏரியாகும். 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ள இவ்வேரியின் தண்ணீர் கொள்ளளவு 4.88 மில்லியன் கன அடி ஆகும். ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைவழி அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய பூஞ்செடிகளும் விளையாட்டுக் கருவிகளும் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை ஆறுமணி வரை திறக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ 5 நுழைவுக் கட்டணம் என்றும் பெரியவர்களுக்கு ரூ 15 நுழைவுக்கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிட படகு சவாரிக்கு கட்டணமாக துடுப்பு படகிற்கு ரூ20, கால்மிதி படகிற்கு ரூ50 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மற்ற இடங்கள் தொகு
- அரசு மூலிகைப்பண்ணை,பழப்பண்ணைக
- சுவாமிமலை- மலையேற்றம் நடக்குமிடம்
- இயற்கைப்பூங்கா
- முருகன் கோவில்
- தொலைநோக்கி இல்லம்
- நிலாவூர் ஏரியும், பூங்காவும்
- ஆஞ்சநேயர் ஆலயம்
- மங்கலம் தாமரைக்குளம்
- இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகமான வைணு பாப்பு வானாய்வகம் ஏலகிரி மலைக்கு அருகிலுள்ள சவ்வாது மலையில் உள்ள காவலூரில் (25 கி.மீ தொலைவில்) உள்ளது.
- கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA): இது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம். இங்கு தங்குவதற்கும், மலையேற்றம் மற்றும் பிற முகாம் தொடர்பானச் செயல்களுக்கும் உதவுகிறார்கள்.
- கோடைகாலத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன.
மேற்கோள்கள் தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Miles to go for Yelagiri Hills as a tourist spot". The Hindu. May 25, 2008. Archived from the original on மே 27, 2008. https://web.archive.org/web/20080527120037/http://www.hindu.com/2008/05/25/stories/2008052559140700.htm. பார்த்த நாள்: 07-04-2009.
- ↑ T. Pullaiah, Rao Muralidhara, D. Muralidhara Rao, K. Sri Ramamurthy (2002). Flora of Eastern Ghats: Hill Ranges of South East India. Daya Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8187498498, 9788187498490. http://books.google.co.in/books?id=pSXidQZupHYC.
- ↑ "Yelagiri hills, for paragliding". The Hindu. August 20, 2008. Archived from the original on ஆகஸ்ட் 23, 2008. https://web.archive.org/web/20080823035709/http://www.hindu.com/2008/08/20/stories/2008082052410700.htm. பார்த்த நாள்: 07-04-2009.