ஏலகிரி மலை

கோடையில் நலமே

ஏலமலை, ஏலக்குன்று, ஏலகிரி (Yelagiri) என்பது மலை வாழிடம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில், உள்ளது[3]. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர்[4].

ஏலகிரி மலை
—  மலை வாழிடம்  —
ஏலகிரி ஏரி
ஏலகிரி ஏரி
ஏலகிரி மலை
இருப்பிடம்: ஏலகிரி மலை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°34′41″N 78°38′27″E / 12.578104°N 78.640737°E / 12.578104; 78.640737
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,048 மீட்டர்கள் (3,438 அடி)

கண்ணோட்டம்

தொகு

ஏலகிரி மலை, ஊட்டி, கொடைக்கானல் போல் ஒரு வளர்ச்சியுற்ற சுற்றுலா இடமாக இல்லாவிடினும், துணிவு விளையாட்டுகளான ஏவூர்தி நழுவுதல் (Para Gliding), மலையேற்றம் ( Trekking) போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் சுற்றுலா இடமாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன[5]. ஏலகிரியில் 14 சிறு கிராமங்களும், சில கோவில்களும் அழகுற அமைந்துள்ளன. அடிப்பகுதி வட்டவடிவமாகவும் பக்கவாட்டில் செங்குத்தான பாறைகளையும் கொண்டு பார்ப்பதற்கு ஒரு பீடபூமி போல இம்மலை காட்சியளிக்கிறது. மலையின் வடக்கு மற்றும் வடகிழக்குச் சரிவுகளிலும் , மலை உச்சியிலும் பசுமைமாறா மரங்கள் காணப்படுகின்றன. பொதுவாக இம்மலைப்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 31 பாகை செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 பாகை செல்சியசும் பதிவாகிறது.

ஏலகிரி மலைக்குச் செல்லும் வசதி

தொகு
 
ஏலகிரி மலைக்குச் செல்லும் சாலை

வேலூர், சென்னை, சோலையார் பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு பேருந்துகள் உண்டு. 19 கி.மீ தொலைவில் உள்ள சோலையார் பேட்டை இரயில் நிலையமே அருகில் உள்ள இரயில் நிலையம். சென்னை விமான நிலையத்தில் இருந்து 219 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூரு விமானநிலையத்தில் இருந்து 193 கி.மீ தொலைவிலும் ஏலகிரி மலை அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

இம்மலை ஏலமலை, ஏலக்குன்று என்ற பெயரிலேயே அழைக்கபட்டுவந்தது. சமசுகிருதமயமாக்கலின் ஒரு பகுதியாக ஏலகிரி என்று மாற்றப்பட்டது. ஆனால் மக்கள் வழக்கில் ஏலகிரி மலை என்ற பெயராக நிலைத்தது. இந்த மலைக்கு மிக அருகில் உள்ளது நவிரமலை ஆகும்.[6]

ஏலகிரியில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஏராளமான கற்கோடரிகள் அத்தனாவூர், நிலாவூர் போன்ற மலைக் கிராமங்களில் கிடைத்துள்ளன. உள்ளூர் மக்களால் அவை பிள்ளையாரப்பன் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.[6]

ஏலகிரியில் எழுத்தில்லா, எழுத்துள்ள நடுகற்கள் பல காணப்படுகின்றன. நிலாவூரில் உள்ள கதவ நாச்சியம்மன் கோயிலில் பல்லவர் கால மூன்று நடுகற்கள் உள்ளன. அவை உள்ளூர் மக்களால் வெளிச்சாமிகள் என்று அழைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. மங்களம் கிராமத்தில் பள்ளிக்கூடத்து இராமசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டறியப்பட்டது. அதில் திருப்பத்தூரை பகைவர்கள் முற்றுகையிட்டபோது, அதை எதிர்த்து ஏலமலையில் உள்ள தாயலூரைச் சேர்ந்த மழப்பையன் என்ற வீரன் போரிட்டு மாண்டான் என்ற செய்தியை நடுகல் கல்வெட்டு தெரிவிக்கிறது.[6]

மக்கள்

தொகு

பல நூற்றாண்டகளுக்கு முன்பிருந்தே மக்கள் இம்மலையில் வாழ்ந்து வருகின்றனர். இன்று சுமார் 4000 பேர் இம்மலை முழுவதுமாக விரவியுள்ளனர். மக்களில் பெரும்பாலானவர்கள் இந்து சமயத்தைச் சேர்ந்த வெள்ளாளர்கள் எனப்படும் மலைவாழ் மக்களாக உள்ளனர்.[சான்று தேவை] இருளர்கள் என்று அழைக்கப்படும் மலைவாழ் குழுக்களும் இங்குள்ளனர். திப்பு சுல்தான் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் இப்பீடபூமியில் குடியேறி வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

சுற்றிப்பார்க்க

தொகு

சலகாம்பாறை அருவி

தொகு

ஏலகிரி மலையின் மறுபுறத்தில் மலையின் கீழ்ப்பகுதில் சமவெளியிலிருந்து சற்று உயரத்தில் சலகம்பாறை அருவி உள்ளது. திருப்பத்துாரிலிருந்து பிச்சனூர் வழியே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏலகிரி மலையில் உருவாகும் அட்டாறு, சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவி சலகம்பாறை அருவி என்று அழைக்கப்படுகிறது. மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக ஆறு வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. ஏலகிரி மலையின் மேல்பகுதியில் உள்ள நிலாவூரில் இருந்து நேரடியாக 6 கி.மீ மலைத்தடம் வழயே கீழிறங்கினால் அருவியை அடையலாம் எனினும் இவ்வழி இப்போது மூடப்பட்டுள்ளது. சிவலிங்க வடிவத்தில் ஒரு முருகர் கோவில் அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.

பூங்கானூர் ஏரியும் குழந்தைகள் பூங்காவும்

தொகு

பூங்கானூர் ஏரி கட்டப்பட்ட ஏரியாகும். 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ள இவ்வேரியின் தண்ணீர் கொள்ளளவு 4.88 மில்லியன் கன அடி ஆகும். ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைவழி அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய பூஞ்செடிகளும் விளையாட்டுக் கருவிகளும் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை ஆறுமணி வரை திறக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ 5 நுழைவுக் கட்டணம் என்றும் பெரியவர்களுக்கு ரூ 15 நுழைவுக்கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிட படகு சவாரிக்கு கட்டணமாக துடுப்பு படகிற்கு ரூ20, கால்மிதி படகிற்கு ரூ50 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற இடங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Miles to go for Yelagiri Hills as a tourist spot". The Hindu. May 25, 2008 இம் மூலத்தில் இருந்து மே 27, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080527120037/http://www.hindu.com/2008/05/25/stories/2008052559140700.htm. பார்த்த நாள்: 07-04-2009. 
  4. T. Pullaiah, Rao Muralidhara, D. Muralidhara Rao, K. Sri Ramamurthy (2002). Flora of Eastern Ghats: Hill Ranges of South East India. Daya Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8187498498, 9788187498490. {{cite book}}: Check |isbn= value: invalid character (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. "Yelagiri hills, for paragliding". The Hindu. August 20, 2008 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 23, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080823035709/http://www.hindu.com/2008/08/20/stories/2008082052410700.htm. பார்த்த நாள்: 07-04-2009. 
  6. 6.0 6.1 6.2 "வரலாற்றைப் பாதுகாக்கும் ஏலகிரி மலை". 2024-05-02. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலகிரி_மலை&oldid=4045356" இலிருந்து மீள்விக்கப்பட்டது