சேனைத்தலைவர்
சேனைத்தலைவர் (Senaithalaivar) (சேனைக்குடையார், சேனையார், சேனை முதலியார், சேனைக்குடியர், கொடிக்கால் பிள்ளைமார், சேனை செட்டியார், சேனை குல வேளாளர் மற்றும் இலைவாணியர் என்றும் அழைக்கப்படுகின்றனர்)[1][2] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் மத்திய மற்றும் தென் தமிழகத்தில் அதிகளவில் வசிக்கின்றனர்.[3]
சேனைத்தலைவர் | |
---|---|
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | தமிழகம்,புதுச்சேரி மற்றும் கேரளா |
வகைப்பாடு | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
மதங்கள் | இந்து |
மொழிகள் | தமிழ் |
தொடர்புடைய குழுக்கள் | வேளாளர் |
குறிப்புகள் | |
குல தொழில்: வெற்றிலை கொடிக்கால் வேளாண்மை மற்றும் வெற்றிலை வணிகம் |
வரலாறு
சேனைத்தலைவர் படைத்தலைவர்களாவும், நிலச்சுவான்தார்களாகவும், பண்ணையார்களாகவும், கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை செய்த இனமாகவும், வெற்றிலை வணிகர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களின் குல தொழில் கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை மற்றும் வெற்றிலை வணிகம் செய்வதாகவும் இருந்தது. சோழர் காலத்தில் பெரும் வணிகர்களாகவும், நானாதேசிகர் வணிக குழுவில் ஒரு குழுவாகவும் இருந்துள்ளனர். 2 ஆம் நூற்றாண்டில் அஞ்சான் புகலிடத்தின் பாதுகாவலர்களாக இருந்துள்ளனர்(துளு நாட்டு கல்வெட்டு). பாண்டியர் காலத்தில் இவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வெற்றிலை பயிருடுவதியே பரம்பரை பரம்பரையாக செய்து வந்த இவர்கள், இன்னும் தமிழ்நாட்டில் இன்றளவும் அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொடிக்கால் பிள்ளைமார் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொடிக்கால் மூப்பனார் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.
சேனைத்தலைவர் வணிகர்கள் அக்காலத்தில் செட்டியார் என்றே அழைக்கப்பட்டனர். தரங்கம்பாடி ஓலை ஆவணங்களில் இருந்து ஒப்பந்த கூலிகளை பராமரித்து பண்ணையம் செய்த நிலச்சுவான்தார்கள் செட்டியார் என்ற சாதி பட்டம் புனையும் இலைவாணியர் (சேனைக்குடையார்) இனத்தவராவார். வெற்றிலை கொடிக்கால் பயிர் இடுவோராக அறியப்படும் இவ்வினத்தவர்கள், சேனையங்காடியார் என்றும் சேனைக் குடியுடையார் அல்லது சேனைக் குடையார் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர்.[4]
சங்க காலங்களில் இருந்து இவ்வினத்தின் பெயர்கள் "சேனை" என்ற அடைமொழியுடன் அவர்கள் அக்காலங்களில் செய்யும் தொழிலுக்கு ஏற்ப சேனைக்கடையார், மூன்று கைமா சேனையார் , சேனையார், சேனை பெரு வாணிகன், சேனைக் குடியன், சேனை கொண்ட செட்டியார், சேனை அங்காடிகள், சேனைக்குடையார், இலைவாணியர், சேனைத்தலைவர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.[5][6][7][8]
படைத்தலைவர்களாகவும், வணிகர்களின் பாதுகாவலர்களாகவும், கோயில்களின் பாதுகாவலர்களாகவும், அஞ்சான் புகலிடத்தின் பாதுகாவலர்களாகவும், சேனை வீரர்களாகவும் ,வணிகர்களாகவும், கொடிக்கால் சாகுபடி செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளதால் "சேனை" என்ற அடைமொழியை சங்க காலத்தில் இருந்து தங்கள் இனத்தின் அடையாளமாக சேர்த்து கொண்டு, வீரமிக்க மற குழுவாக "சேனை" என்ற அடைமொழியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.[9][10]
வாழும் பகுதிகள்
இவர்கள் தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்மலை, இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், சேலம், காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, கும்பகோணம், போன்ற பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வடதமிழகத்தில் திருவண்ணாமலை (மேல்பள்ளிப்பட்டு), தருமபுரி (கடத்தூர்) ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக உள்ளனர். மதுரை, தேனி, போடிநாயக்கனூர், இராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளில், இவர்களை கொடிக்கால் பிள்ளைமார் என்றும் தருமபுரி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் செட்டியார் என்றும் திருநெல்வேலி, தென்காசி, பாண்டிச்சேரி,விழுப்புரம், ஆரணி, வேலூர் பகுதிகளில் முதலியார் என்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி பகுதிகளில் கொடிக்கால் மூப்பனார் என்றும் பெரு வாரியாக அழைக்கப்படுகின்றனர்.[11][12]
கல்வெட்டுகளில் சேனைத்தலைவர்
சங்க காலங்களில் இருந்து நாயக்கர் காலம் வரை சேனைத்தலைவர் பல்வேறு கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர்.
பட்டங்கள்
சேனைத்தலைவர் இன பட்டங்கள்:
- மூப்பனார்
- பிள்ளை
- முதலியார்
- செட்டியார்
- கொடிக்கால் பிள்ளைமார்[17]
- கொடிக்கால் மூப்பனார்
- இலைவாணியர்
இலைவாணியர்
இலைவாணிய பட்டம், இது சோழர்களால் கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை செய்வதற்கும் மற்றும் கொடிக்கால் வெற்றிலை வணிகம் செய்வதற்கும் கொண்டு வரப்பட்ட வரியாகும். இவ்வரி சேனைத்தலைவர் இனத்திற்கு மட்டுமே சோழர் காலங்களிலும், அதற்க்கு பின் பாண்டிய, நாயக்கர் காலங்களிலும் இருந்துள்ளது. இதனால் இவர்கள் இலைவாணியர் என்று இன்றும் வரையும் அழைக்கப்படுகின்றனர்.[11]
“ | வாணிகன்-வாணியன்
வாணிகன் அறுவை வாணிகன் (சவளிக்கடைகாரன்), கூல வாணிகன் (தவசக் கடைகாரன்), பொன்வாணிகன் (காசுக் கடைகாரன்), ஊன்வாணிகன்(இறைச்சிக் கடைகாரன்). வாணியன் இலை வாணியன் (கொடிக்கால் வேளாளன்). |
” |
சேனைத்தலைவர் புத்தகங்கள்
- சேனைத்தலைவர் மரபு விளக்கம் - காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்
- வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அலல்து சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் - கோபால செட்டியார்
- சேனைத்தலைவர் குல வரலாறு - தக்ஷிணாமூர்த்தி
- சேனைத்தலைவர் வாழ்வியல் - விவேகலதா
சேனைத்தலைவர் கல்வி நிலையங்கள்
- சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, சிவகிரி
- சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, சங்கரன் கோவில்
- சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, விக்கிரமசிங்கபுரம்
- சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, புளியங்குடி
- சேனைத்தலைவர் மெட்ரிகுலசன் பள்ளி, போடிநாயக்கனூர்
- சேனைத்தலைவர் கலைமகள் உயர்நிலைப்பள்ளி, ஈராச்சி
- சேனையர் நாராயணசாமி ஆரம்பப்பள்ளி, திருவில்லிபுத்தூர்
- சேனையர் மேல்நிலைப் பள்ளி, மேல்கடையநல்லூர்
- சேனையர் தொழிற்பயிற்சிப்பள்ளி, குருக்கள்பட்டி
குறிப்பிடத்தகுந்த சேனைத்தலைவர்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரசியல்
- திருமுடி ந. சேதுராம செட்டியார், காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் (புதுச்சேரி தொகுதி 1962-67)
- தோழர் காத்தமுத்து, கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் (நாகப்பட்டினம் தொகுதி 1967-72)
- தில்லை வில்லாளன், (சிதம்பரம்) தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் (1968-74)
- திரு. எஸ். பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்) காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் (1996-2002)
- மாண்புமிகு ஆர். எம். வீரப்பன், அ.தி.மு.க. அமைச்சர், எம்.எல்.சி., எம்.எல்.ஏ
- திரு. எஸ். நாராயணன், (திருநெல்வேலி) அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தலைவர், தமிழ்நாடு காதி போர்டு.
- திரு. ஆர்.சுடலைமுத்து (போடி) தி.மு.க (சமஉ)
- திரு. எஸ். என். வேணுகோபால் செட்டியார் (சேலம்) காங்கிரஸ் எம்.எல்.சி
- திரு. ஆ. திராவிடமணி (கடையநல்லூர்) தி.மு.க. எம்.எல்.சி.
அறிவியல்
- நம்பி நாராயணன் - இந்திய விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர்
- சுப்பையா அருணன் - மங்கள்யான் திட்டம் , இஸ்ரோ
புலவர்கள்
- காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் (1791-1871) - காஞ்சிபுரம் [20]
- சோடசாவதானம் தி. க. சுப்பராய செட்டியார் - பண்ருட்டி[21]
- அருட்கவி அழகு முத்துப் புலவர் - நாகப்பட்டினம்
- நடராச செட்டியார் ரா - சிதம்பரம்[22]
ஆன்மீகம்
கலைத்துறை
- "நீயா நானா" கோபிநாத் சந்திரன் செட்டியார், விஜய் டிவி[சான்று தேவை]
மேற்கோள்கள்
- ↑ "Journal of Indian History". 24 January 2020 – Google Books வழியாக.
- ↑ "தமிழ் இணையக் கல்விக்கழகம் - தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org.
- ↑ State), Madras (India :; Baliga, B. S. (24 January 2020). "Madras District Gazetteers: Tirunelveli District ( 2 v.)". Printed by the Superintendent, Govt. Press – Google Books வழியாக.CS1 maint: extra punctuation (link)
- ↑ "தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள்". www.tamildigitallibrary.in (ஆங்கிலம்). 2019-11-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Malarmannan, மலர்மன்னன் / (1 October 2012). "திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும் / Dravida Iyakkam - Punaivum Unmaiyum". Kizhakku Pathippagam – Google Books வழியாக.
- ↑ "தமிழ் மாமலை". www.tamildigitallibrary.in.
- ↑ Ramaswamy, Vijaya (24 January 1985). "Textiles and weavers in medieval South India". Oxford University Press – Google Books வழியாக.
- ↑ "வாணியன் Meaning in Tamilpulavar". tamilpulavar.org.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [1]
- ↑ Kul̲u, Tamil̲nāṭṭu Varalār̲r̲uk (24 January 1998). "Tamiḷnāṭṭu varalāṟu: pts. 1-2. Cōḷap peruvēntar kālam". Tamil̲ Vaḷarcci Iyakkakam – Google Books வழியாக.
- ↑ 11.0 11.1 [2]
- ↑ [3][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Al̲akēcan̲, Ār Kē (24 January 2020). "Kalveṭṭukal kāṭṭum kalaiccor̲kaḷ: cōl̲ar kālam". Ti Pārkkar – Google Books வழியாக.
- ↑ 14.0 14.1 S.p.c.k. Press (24 January 2020). "Quarterly Journal Of The Mythic Society Vol.32" – Internet Archive வழியாக.
- ↑ Kul̲u, Tamil̲nāṭṭu Varalār̲r̲uk (24 January 1998). "Tamiḷnāṭṭu varalāṟu: pts. 1-2. Cōḷap peruvēntar kālam". Tamil̲ Vaḷarcci Iyakkakam – Google Books வழியாக.
- ↑ Cōmale (24 January 1980). "Maturai Māvaṭṭam". Kastūrpā Kānti Kan̲yā Kurukulam, Veḷiyīṭṭup Pakuti – Google Books வழியாக.
- ↑ Tēvanēyan̲, Ñānamuttan̲ (24 January 2020). "Tamil̲ar varalār̲u". Tamil̲maṇ Patippakam – Google Books வழியாக.
- ↑ ":: TVU ::". www.tamilvu.org.
- ↑ Tēvanēyan̲, Ñānamuttan̲ (24 January 2020). "Tamil̲ar varalār̲u". Tamil̲maṇ Patippakam – Google Books வழியாக.
- ↑ https://archive.org/details/SenguntharPrabanthaThiratu/page/n261/mode/2up
- ↑ https://shaivam.org/tamil/sta-eyinanur-sandanapuri-enum-aadhipura-thalapuranam.pdf
- ↑ Pulavar, Subramania Arittiru Ramaswamy (24 January 1962). "Tamiḻppulavar akaravaricai" – Google Books வழியாக.
- ↑ "A R U N A C H A L A S A M U D R A- Sacred Power - Temples - Asta Lingams". www.arunachalasamudra.org. 2019-11-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ilamurugan (2016-02-16). "Tamilnadu Tourism: Annamalaiyar Temple - Ashta Lingams". Tamilnadu Tourism. 2019-11-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Clarke, Richard (2013-03-06). "The Eight Lingams on Arunachala's Pradakshina Route". Living in the Embrace of Arunachala (ஆங்கிலம்). 2019-11-29 அன்று பார்க்கப்பட்டது.