அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்

அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் (Major Rock Edicts) பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில்[1] கிமு 260-ஆம் ஆண்டு முதல் பரத கண்டம் முழுவதும், மௌரியப் பேரரசு பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய தர்ம நெறிகள் குறித்து 14 பெரும் பாறைகளில் கல்வெட்டாக பொறித்து வைத்தார்.

அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுகள்
செய்பொருள்பாறைகள்
உருவாக்கம்கிமு 3-ஆம் நூற்றாண்டு
தற்போதைய இடம்இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான்
அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் is located in South Asia
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri

அசோகர் இப்பெரும் பாறைக் கல்வெட்டுக்களில் தனது பெயராக அசோகர் எனப்பொறிப்பதற்கு பதிலாக, தேவனாம்பிரியா ("Beloved of the God", thought to be a general regnal title like "Our Lord") என்றும் பிரியதாசி (Priyadasi)" ("Our Lord Priyadasi") என்றும் பொறித்துள்ளார்.[2]

அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுகள்
  1. அசோகரின் குஜராத் பெரும்பாறைக் கல்வெட்டுக்கள் - ஜூனாகத் & கிர்நார்
  2. நள சோப்ரா, மகாராட்டிரா
  3. சன்னதி, கர்நாடகா
  4. எர்ரகுடி, ஆந்திரப் பிரதேசம்
  5. தௌலி, ஒடிசா
  6. ஜௌகுடா
  7. கல்சி, உத்தராகண்டம்
  8. காந்தாரம், ஆப்கானித்தான்
  9. மன்செரா, பாகிஸ்தான்
  10. சபாஷ் கார்கி, பாகிஸ்தான்

பெரும் பாறைக் கல்வெட்டு 1 தொகு

விழாக்களை அசோகர் தடை செய்தல் மற்றும் விலங்குகள் மீதான மரியாதை.

பெரும் பாறைக் கல்வெட்டு 1
ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு (கல்சி பிரதி) மொழி: பிராகிருதம், எழுத்துமுறை: பிராமி எழுத்துமுறை

நன்னெறி குறித்த இந்த ஆணை எழுதப்படுவதற்கு தேவனாம்ப்ரிய ப்ரியதர்சின் காரணமாக இருந்தார். இங்கு எந்த உயிரினமும் கொல்லப்படவோ, பலியிடப்படவோ கூடாது. மற்றும் மேலும் எந்தவொரு விழாச் சந்திப்பும் நடத்தப்படக் கூடாது. ஏனெனில் தேவனாம்ப்ரிய ப்ரியதர்சின் விழாச் சந்திப்புக்களை மிகத் தீயதாகக் கருதுகிறார். மற்றும் மன்னர் தேவனாம்ப்ரிய ப்ரியதர்சினால் சில விழாச் சந்திப்புக்கள் தகுதி வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. முன்னர் மன்னர் தேவனாம்ப்ரிய ப்ரியதர்சினின் சமயலறையில் பல இலட்சக் கணக்கான விலங்குகள் தினமும் குழம்பு செய்வதற்காகக் கொல்லப்பட்டன. ஆனால் தற்போது, நன்னெறி குறித்த இந்த ஆணை எழுதப்படுவதற்குக் காரணமான போது, பிறகு மூன்று விலங்குகள் மட்டுமே (தினமும்) கொல்லப்படுகின்றன, (அதாவது) இரு மயில்கள் (மற்றும்) ஒரு மான், ஆனால் இந்த மானும் கூட வாடிக்கையாக இல்லை.

ஆனால் இந்த மூன்று விலங்குகளும் கூட (எதிர் காலத்தில்) கொல்லப்படக் கூடாது.

—1ஆம் பெரும் பாறை ஆணை. ஆய்கன் கூல்ட்சுவின்(1857-1927) ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து. 1925இல் இந்தியாவில் பதிப்பிக்கப்பட்டது. அசோகரின் பொறிப்புகள் பக்.27.
பெரும் பாறைக் கல்வெட்டு 1 (கிர்நார்)

மேற்கோள்கள் தொகு

  1. "The Edicts of King Ashoka". Archived from the original on 14 March 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
  2. Beckwith, Christopher I. (2017) (in en). Greek Buddha: Pyrrho's Encounter with Early Buddhism in Central Asia. Princeton University Press. பக். 235–240. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-17632-1. https://books.google.com/books?id=53GYDwAAQBAJ&pg=PA235. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ashoka Major Rock Edicts
என்பதில் ஊடகங்கள் உள்ளன.