திருவாங்கூர் கொச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1949 முதல் 1956 வரை இருந்த இருந்த இந்திய மாநிலம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Travancore-Cochin" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:09, 10 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

திருவாங்கூர்-கொச்சி (Travancore-Cochin) அல்லது திரு-கொச்சி (வார்ப்புரு:Indic) என்பது இந்தியவாவில் குறைந்த காலம் (1949–1956) இருந்த ஒரு மாநிலமாகும். இந்த மாநிலத்தின் இயற்பெயர்   திருவாங்கூர் மற்றும் கொச்சி ஐக்கிய மாகாணம் (United State of Travancore and Cochin) என்பதாகும் இது 1949 சூலை 1 அன்று, இரண்டு மன்னர் அரசுகளான, திருவாங்கூர் மற்றும் கொச்சி ஆகியவற்றை இணைத்து திருவனந்தபுரத்தை தலைநகராக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் பெயர் 1950 சனவரியில் இல் திருவாங்கூர்-கொச்சி மாநிலம் என பெயர் மாற்றப்பட்டது.

United State of Travancore and Cochin (1949–1950)
State of Travancore-Cochin (1950–1956)
തിരു-കൊച്ചി
1949–1956
கொடி of Travancore-Cochin
கொடி
Travancore-Cochin in India, 1951
Travancore-Cochin in India, 1951
தலைநகரம்Trivandrum
பேசப்படும் மொழிகள்Malayalam, Tamil, English
அரசாங்கம்State
Rajpramukh 
• 1949–1956
Chithira Thirunal Balarama Varma
Chief Minister 
• 1949–1951
Parur T. K. Narayana Pillai
• 1951–1952
C. Kesavan
• 1952–1954
A. J. John, Anaparambil
• 1954–1955
Pattom A. Thanu Pillai
• 1955–1956
Panampilly Govinda Menon
வரலாறு 
• தொடக்கம்
1949
• முடிவு
1956
நாணயம்Indian rupee
முந்தையது
பின்னையது
Travancore
Kingdom of Cochin
Kerala
Madras State

வரலாறு

திருவாங்கூரின் காங்கிரஸ் பிரதமராக இருந்த பட்டம் டி.கே. நாராயணப் பிள்ளை, திருவாங்கூர்-கொச்சியின் முதலமைச்சராக ஆனார். முதல் தேர்தல் 1951 நடந்தது அதில் காங்கிரஸ் வெற்றிபெற்று, ஏ. ஜே. ஜோன் அன்னபரம்பள்ளி முதலமைச்சராக ஆனார், இவர் 1954 வரை ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.[1]

திருவாங்கூர் ஆட்சியாளரே திருவாங்கூர்-கொச்சியின் ஆளுநராக (ராஜபிரமுகர் என அழைக்கப்பட்டார்) நியமிக்கப்பட்டார். கொச்சி மகாராஜவுக்கு துணை உபராஜபிரமுகர் பதவி கொடுக்க முன்வந்தபொது, ஆட்சி அதிகாரத்தை தந்தபிறகு எந்த பட்டத்தையும் ஏற்க மறுத்துவிட்டார். கொச்சி மகாராஜா அரச குடும்பத்தின் மூத்த வலிய தம்புரானை அழைத்து மக்களின் நன்மைக்காக நிபந்தனையின்றி அரச அதிகாரங்களை கைவிட்ட வேண்டும் என்று கூறினார்.[2] 1954 இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம் ஏ. தாணுபிள்ளை முதலமைச்சராக இருந்தபோது,  திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் மதராஸ் மாநிலத்துடன் அதன் அண்டை பகுதியான தென் திருவிதாங்கூரின் தமிழ் பேசும் பகுதிகளை இணைக்கக்கோரி பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டத்தை வன்முறையால் அடக்க உள்ளூர் போலீசார் முயன்று அதனால் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் மார்தாண்டம், புதுக்கடை ஆகிய இடங்களில்  கொல்லப்பட்டு, திருவாங்கூர்-கொச்சியின் இந்த இணைப்பால் தமிழ் மக்கள்  ஈடு செய்ய முடியாத அளவுக்கு அந்நியப்பட்டுப்போயினர்.

1956 ஆம் ஆண்டு, மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், திருவாங்கூரின் நான்கு தெற்கு வட்டங்களான,  தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டையின் ஒரு பகுதி சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 திருவிதாங்கூர்-கொச்சியுடன் மதராஸ் மாநிலத்தின் மலபார் மாவட்டம் புதியதாக கேரள மாநிலத்தை உருவாக்க ஏதுவாக, அதனுடன் இணைக்கப்பட்டது. ராஜபிரமுகருக்கு பதிலாக இந்திய ஜனாதிபதியால் மாநிலத் தலைவராக ஆளுநர் நியமிக்கப்பட்டார்.

முதலமைச்சர்கள்

முதலமைச்சர்
  பொறுப்பு ஏற்பு பொறுப்பு முடிவு தடவை கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி
1  பட்டம் டி. கே. நாராயணப்   பிள்ளை
1949 சூலை 1
1951  சனவரி 1 இந்திய தேசிய காங்கிரசு திருவாங்கூர்
2 சி. கேசவன்
1951 சனவரி
 1952 மார்ச் 12
1 இந்திய தேசிய காங்கிரசு திருவாங்கூர்
3 A. J. John, Anaparambil 1952 மார்ச் 12
1954 மார்ச் 16
1 Indian National Congress திருவாங்கூர்
4  பட்டம் ஏ. தாணு பிள்ளை
1954 மார்ச் 16
 1955 பெப்ரவரி 10
1 பிரஜா சோசலிஸ்ட் கட்சி திருவாங்கூர்
5 பன்னம்பிளே கோவிந்த மேனன்
1955 பெப்ரவரி 10
1956 மார்ச் 23
1 Indian National Congress கொச்சி
  ஜனாதிபதி ஆட்சி
1956 மார்ச் 23
1957 ஏப்ரல் 5

துணைப்பிரிவுகள்

மாநிலம் 4 மாவட்டங்களாகவும் 36 வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.[3] மாவட்டம்

வட்டம்
Thiruvananthapuram Thovala, Agastheeswaram, Kallkkulam, Vilavancode, Neyyattinkara, Thiruvananthapuram, Nedumangad, Chirayinkeezhu
Kollam Kollam, Kottarakkara, Pathanapuram, Chenkotta, Kunnathoor, Karunagappally, Karthikappally, Mavelikkara, Pathanamthitta, Thiruvalla, Ambalappuzha, Cherthala
Kottayam Kottayam, Changanasserry, Vaikkom, Muvattupuzha (including Kothamangalam), Thodupuzha, Meenachil, Devikulam, Peermade
Thrisur Paravur, Kunnathunad, Kochi-Kanayannur, Kodungallur, Mukundapuram, Thrissur, Thalapilly, Chittur

மேற்கோள்கள்

  1. A. J. John, Anaparambil
  2. "Glimpses of a historic moment". New Indian Express. New Indian Express.
  3. K. M. Mathew, ed. (2006). Manorama Year Book. Malayala Manorama. p. 116. {{cite book}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாங்கூர்_கொச்சி&oldid=2153092" இலிருந்து மீள்விக்கப்பட்டது