இந்திய அமைதி காக்கும் படை
இந்த கட்டுரையிலோ கட்டுரைப் பகுதியிலோ உள்ள தகவல்கள் முழுமை அடையவில்லை. இதை நீங்கள் முழுமைப்படுத்தி உதவலாம். முழுமைப் படுத்துவதற்கான மூலங்கள் இதன் பேச்சுப் பக்கத்தில் இருக்கலாம். |
இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட இராணுவமாகும். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அது இலங்கையில் வந்த காலப்பகுதியில் திலீபன் யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதுவே விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைகளுக்குமான போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[சான்று தேவை] பின்னர் மார்ச் 31, 1990 அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசவினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்திய அமைதி காக்கும் படை Indian Peace Keeping Force | |
---|---|
செயற் காலம் | யூலை 1987 – மார்ச் 1990 |
நாடு | இலங்கை |
பற்றிணைப்பு | ![]() |
கிளை | இந்திய இராணுவம் இந்திய கடற்படை இந்திய வான்படை |
பொறுப்பு | அமைதி காத்தல் புரட்சி எதிர்ப்பு விஷேட நடவடிக்கைகள் |
அளவு | 100,000 (உச்சம்) |
சண்டைகள் | பவான் நடவடிக்கை வீராட் நடவடிக்கை திரிசூல் நடவடிக்கை செக்மேட் நடவடிக்கை |
பதக்கம் | 1 பரம வீர சக்கரம் 6 மகா வீர சக்கரம் |
தளபதிகள் | |
குறிப்பிடத்தக்க தளபதிகள் | திபந்தர் சிங் ஹர்கிராட் சிங் எஸ். சி. சர்தேஸ்பாண்டே ஏ. ஆர். கல்கட் |
பின்னணி |
தமிழீழம் * இலங்கை • இலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு |
இலங்கை அரசு |
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலை • இனக்கலவரங்கள் * மனித உரிமைகள் • இலங்கை அரச பயங்கரவாதம் • சிங்களப் பேரினவாதம் • தாக்குதல்கள் |
விடுதலைப் புலிகள் |
புலிகள் • தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம் |
முக்கிய நபர்கள் |
வே. பிரபாகரன் மகிந்த ராஜபக்ச சரத் பொன்சேகா |
இந்தியத் தலையீடு |
பூமாலை நடவடிக்கை இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்திய அமைதி காக்கும் படை ராஜீவ் காந்தி • RAW |
மேலும் பார்க்க |
இலங்கை இராணுவம் ஈழ இயக்கங்கள் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் |
திலீபன், அன்னை பூபதி உண்ணாநிலை இறப்புகள் தொகு
ராஜீவ் காந்தி கொலை தொகு
ஸ்ரீ பெரும்புதூரில் மே 21, 1991 இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியினால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அத்தற்கொலைப்படை பெண் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் எனச் சொல்லபடுகிறது.[1]. இதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாக இந்திய நீதிமன்றங்களால் கருதப்படுகின்றது.
இராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கம்[2] மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார்.[3]
இந்திய அமைதி காக்கும் படை நடத்தியவை தொகு
பொதுமக்களின் மேல் நடத்தப்பட்ட படுகொலைகள் தொகு
எண் | காலமும் இடமும் | கொலைகள் பற்றிய தகவல்கள் |
---|---|---|
1 | 14 ஆகத்து 1989, வல்வெட்டித்துறை | குழந்தைகள் உட்பட 64 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். |
2 | 21 அக்டோபர் 1987, யாழ்ப்பாண மருத்துவமனை | தீபாவளி அன்று 68 பொதும்க்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், நோயாளிகளும் அடங்குவர். அவர்களின் உடல்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. யாழ்ப்பாண மருத்துவமனை படுகொலைக்கு 18 நாட்கள் கழித்து அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய அமைதி காக்கும் படை தன் கடமைகளை ஒழுக்கமாக செய்து வருவதாக அறிக்கை விட்டார். (லோக் சபா 9 நவம்பர் 1987)[சான்று தேவை] |
3. | 9 நவம்பர் 1987 | இந்திய அமைதி காக்கும் படையால் காயத்துக்கு உள்ளான 4 பொதுமக்கள் சாண்டிலிப்பையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தில் வெள்ளைக் கொடியோடு சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திய அமைதி காக்கும் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[சான்று தேவை] |
4. | ஆகத்து 2-3, 1989 | 64 ஈழத்தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலைக்களத்தில் இருந்த 300 பொதுமக்களும் சுப்பிரமணியம் மற்றும் சிவகணேசு வீட்டில் அடைக்கலம் அடைந்தனர். அவர்கள் வீடுகளுள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படை அடைக்கலம் அளித்த மற்றும் 12 பொதுமக்களையும் சுட்டுக்கொன்றது.[சான்று தேவை] |
5. | மொத்தம் | ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் பொதுமக்களை இந்திய அமைதி காக்கும் படை கொன்றுள்ளது.[சான்று தேவை] |
மூலம் தொகு
- "Details of Indian IPKF war crimes/genocide". eurasiareview.com. 24 March 2013. http://www.eurasiareview.com/24032013-commission-of-inquiry-on-indian-war-crimes-in-sri-lanka-oped/.
வெளியிணைப்புக்கள் தொகு
- இலங்கையின் வடக்குக் கிழக்கில் பாதிக்கப் பட்ட பொதுமக்கள் பரணிடப்பட்டது 2012-07-23 at Archive.today
- 1987-1990 காலப் பகுதியில் இலங்கையில் இந்திய இராணுவம் பரணிடப்பட்டது 2005-03-13 at the வந்தவழி இயந்திரம்
- Indian Jawan பரணிடப்பட்டது 2005-10-16 at the வந்தவழி இயந்திரம்- இந்திய வீரர்களுக்கு மரியாதை
- இந்திய அமைதிப் படை முயற்சி பற்றிய ஓர் மேலோட்டம்
- யுத்தம் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுகள் பரணிடப்பட்டது 2005-01-24 at the வந்தவழி இயந்திரம்
- ராஜீவ் காந்தியின் யுத்த அநீதிகள்
- அமைதிப்படையை அனுப்பியது பெரிய தவறு - முன்னாள் தளபதி
உசாத்துணைகள் தொகு
- ↑ ராஜீவ் காந்தி கொலை பிபிசி அணுகப்பட்டது நவம்பர் 25(ஆங்கில மொழியில்)
- ↑ ராஜீவ் காந்தி கொலை ஓர் துன்பியற் சம்பவம் பரணிடப்பட்டது 2007-10-01 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது நவம்பர் 25, 2006 (ஆங்கில மொழியில்)
- ↑ பிரபாகரன் செவ்விகள்[1]. Interview with தமிழோசை குழுவினர். பிரபாகரன் செவ்விகள்[2]. Retrieved on 18 அக்டோபர் 2014.