மலாயா பல்கலைக்கழகம்
கோலாலம்பூரில் உள்ள பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம்
மலாயா பல்கலைக்கழகம் (University of Malaya, UM) என்பது மலேசியாவின் மிகப் பழைய பல்கலைக்கழகம் ஆகும். இது 1905 ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது கோலாம்பூருக்கு அருகே அமைந்துள்ளது. இது உலகின் முன்னணிப் பல்கலைக்கழங்களில் ஒன்றாகும்.

இங்கு தமிழ் மொழிப் பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது.[1] மலாயாப்பல்கலைக்கழகத்தில் இரண்டு புலங்களில் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது. கல்வி புலத்தில், இந்திய ஆய்வியல் துறையின் கீழ் தமிழ்மொழி இளங்கலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. மொழி மொழியியல் புலத்தின் கீழ் இளங்கலை மொழியியல் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.