தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009

இந்தியக் குடியரசின் பதினைந்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்தல் தொகுதி மறுசீரமப்புக்கு பின் நடந்த முதல் தேர்தல் ஆகும். திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 27 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009

← 2004 மே 13, 2009 2014 →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
 
தலைவர் மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா
கட்சி திமுக அதிமுக
தலைவரின் தொகுதி - -
வென்ற தொகுதிகள் 27 12
மாற்றம் 2 12
மொத்த வாக்குகள் 1,29,29,043 1,13,26,035
விழுக்காடு 42.54% 37.27%
மாற்றம் 14.86% 2.43%


முந்தைய இந்தியப் பிரதமர்

மன்மோகன் சிங்
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

மன்மோகன் சிங்
காங்கிரசு

பின்புலம் தொகு

கூட்டணி கட்சிகள் தொகு

தேர்தல் வரலாறு தொகு

  • இந்தியாவிலும், தமிழகத்திலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு பலமான எதிர்ப்புகள் இருந்துவந்ததையடுத்து,
  • தமிழ்நாட்டில் அப்போது ஆளும் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் திமுக கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் மைனாரிட்டியில் வெற்றி பெற்று இருந்ததாலும். அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த சிறிய கட்சிகள் காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர் இன அழிப்பு சம்பவத்தை காரணம் காட்டி எதிர்கட்சியான அதிமுக அணியில் சேர்ந்து விட்டதால்.
  • திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்கள் ஈழப்போரில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை மறைமுகமாக நடத்தும் காங்கிரஸ் கட்சியின் செயலை கண்டிக்காமல் கூட்டணியில் இருந்து விலகததற்க்கு காரணம் காங்கிரஸ் பெரும்பான்மையின் உதவியுடன் திமுக ஆட்சி செய்து வந்ததாலும் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து விட்டால் பெரும்பான்மை இல்லாமல் தமிழ்நாட்டிலும் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தால் திமுக-காங்கிரஸ் உடனான கூட்டணியை தொடர்ந்தது.
  • இதையடுத்து எதிர்க்கட்சி அதிமுகவில் ஜெயலலிதாவுடன் பலமான சிறிய கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்த போதிலும் 12 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இத்தேர்தல் பிரச்சாரமாக மத்திய காங்கிரஸ் கட்சியின் இன அழிப்பு செயலை கண்டித்து வீர பூமியா ஈழ பூமியா என்று இலங்கை வாழ் ஈழதமிழற்களுக்கு ஆதரவாக பேசினார்.
  • ஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணியே 28 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடித்தது இந்திய மக்களிடையேவும், தமிழக மக்களிடையேவும் பெரும் சர்ச்சைக்குரிய வெற்றியாக இன்று வரை இருந்துவருகிறது.

முடிவுகள் தொகு

திமுக+ இடங்கள் அதிமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
திமுக 17 அதிமுக 9 தேமுதிக 0
காங்கிரசு 8 மதிமுக 1 பாஜக 0
விடுதலைச் சிறுத்தைகள் 1 சிபிஐ 1
முஸ்லீம் லீக் 1 சிபிஎம் 1
பாமக 0
மொத்தம் (2009) 27 மொத்தம் (2009) 12 மொத்தம் (2009) 0
மொத்தம் (2004) 39 மொத்தம் (2004) 0 மொத்தம் (2004) 0

தமிழக அமைச்சர்கள் தொகு

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:

ஆய அமைச்சர்கள் தொகு

அமைச்சர் கட்சி தொகுதி துறை
ப. சிதம்பரம் காங்கிரசு சிவகங்கை உள்துறை
மு. க. அழகிரி திமுக மதுரை உரங்கள் மற்றும் வேதிப்பொருட்கள்
தயாநிதி மாறன் திமுக மத்திய சென்னை நெசவு
ஆ. ராசா திமுக நீலகிரி தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்
ஜி. கே. வாசன் காங்கிரசு மாநிலங்களவை உறுப்பினர் கப்பல் போக்குவரத்து

இணை அமைச்சர்கள் தொகு

அமைச்சர் கட்சி தொகுதி துறை
எஸ். எஸ். பழனிமாணிக்கம் திமுக தஞ்சாவூர் நிதி
துரைசாமி நெப்போலியன் திமுக பெரம்பலூர் சமூகநீதி
எஸ். ஜெகத்ரட்சகன் திமுக அரக்கோணம் தகவல் மற்றும் தொலைதொடர்பு

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு